கி.பி.1558-முதலாம் எலிசபெத்
இங்கிலாந்து அரசியாதல்
கி.பி.1582-போப்பாண்டவர் 8-ம் கிரகோரிபுதுவிதமான கிரகோரியன் ஆண்டினை
அறிமுகப்படுத்தினார்.
(இப்போதுள்ள ஆங்கில ஆண்டு)
கி.பி.1600-இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய வியாபாரக் கம்பெனி நிறுவப்பட்டது.
கி.பி.1609-கலிலியோ கலிலீ டெலஸ்கோப்பை கண்டுபிடித்தார்.
கி.பி.1543ல் போலந்து நாட்டு வானவியலார் கோப்பர்னிக்ஸ், பூமி உருண்டை
என்று கண்டுபிடித்தார். இவருக்குப் பிறகு இத்தாலியைச்சேர்ந்த கலிலியோ
கலிலீ 30 மடங்கு உருப்பெருக்கிக் காட்டும் டெலஸ்கோப்பை உருவாக்கினார்.
கோப்பர்னிக்ஸ் போலவே கலிலியோவும் பூமி உருண்டை என்றும், பூமிதான்
சூரியனைச் சுற்றி வருகிறது என்றும், சூரியன் பூமியைச் சுற்றிவரவில்லை
என்றும் கூறினார்; இதனால் இவரை 7 ஆண்டுகள் சிறையில் தள்ளியது ரோமன்
கத்தோலிக்க மதம்; ஏனெனில் இவர் கூறியது மத விரோதமாம். அக்காலக்
கட்டத்தில் ரோமன் கத்தோலிக்க மதமே ஐரோப்பிய அரசியலில் கொடிகட்டி பறந்தது.
கலிலியோ இறந்ததும் அவரது உடலை பொதுவான கல்லறையில் அடக்கம் செய்ய ரோமன்
மத குருக்கள் அனுமதி மறுத்தனர். மக்கள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்தில்
அடக்கம் பண்ணப்பட்டார்; இவர் இறந்து 360 ஆண்டுகளுக்குப் பின்னர் 1992
அக்டோபர் 30ம் நாள்தான் ரோமன் கத்தோலிக்கம் கலிலியோவின் கூற்று உண்மை
என்று ஒப்புக்கொண்டது. பிறகு வனாந்தரத்தில் இவரது கல்லறையை தோண்டி
எலும்புகளை எடுத்து கல்லறை தோட்டத்தில் வைத்தனர்.
கோப்பர்னிக்ஸ், கலிலியோ, மெகல்லன் போன்றோர் கூறுவதற்கு பலநூறு
ஆண்டுகளுக்கு முன்பே(கி.மு.760-750களில்)"அவர் பூமி உருண்டையின்
வீற்றிருக்கிறவர்"என்று ஏசாயா 40:42 எனற பைபிள் வசனம் தெளிவாக
கூறியிருப்பது பரிசுத்த வேதாகமம் என்றும் மாறாதது என்பதை நிரூபிக்கவே
செய்கிறது."பைபிளும், இயற்கையும், கடவுளின் சொல்லால் உருவானவை, பைபிள்
பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டது" என்று கூறியவர்தான் இந்த கலிலியோ.
சுமார் கி.மு.2000ல் பாபேல் கோபுரத்தை கட்டிய நிம்ரோது காலத்தில்
விக்கிரக ஆராதனை உலகில் தோன்றியதாக கருதப்படுகிறது. இவன்தான்
பாபிலோனியாவைக் கட்டினான்.
நிம்ரோத்தின் மனைவி பெயர் 'செமிராமிஷ்'என்பதாகும். இந்த நிம்ரோது
இறந்தபின் வேசித்தனத்தின் மூலமாக செமிராமிஷ்க்கு பிறந்த
மகன்'தம்மூஸ்'ஆகும். செமிராமிஷ் சர்வாதிகாரமுள்ள ராணியாக இருந்தமையால்
அக்கால பாபிலோனிய மக்கள் அவளையும் அவள் மகன் தம்மூஸையும் கடவுள் என்று
வழிபட ஆரம்பித்தனர். பின்னாளில் இந்த விக்ரக வணக்கம் பல்வேறு பாகங்களில்
அறியப்பட்டு பலவித பெயர்களால் அழைக்கப்படுகிறது. 'அஸ்த்தரோத்' 'பாகால்'
என்று கானானிலும், 'இஸிஸ்', 'ஹோரஸ்' என்று எகிப்திலும் 'ஜுபிடர்' என்று
ரோமாபுரியிலும் 'அப்ரோடைட்' 'ISHTAR' என்று கிரேக்கத்திலும் வழங்கியது.
இவ்வாறாக 'செமிராமிஷ்'-வான ராணியாகவும் அவளது மகனும் வணங்கப்படும்
பழக்கம் பரவியது. இது பண்டைய ரோமாபுரியில் வேர் கொள்ளவே, இது பாபிலோனிய
மார்க்கத்திற்கு தலைநகராயிற்று. இந்த பாபிலோனிய மார்க்கத்து பிரதான
ஆசாரியன்(பூசாரி)'பாண்டிபெக்ஸ் மாக்ஸிமஸ்'(Pontifex Maximus)என்ற
பட்டத்தை சூட்டிக்கொண்டான். பின்பு இப்பட்டம் ஜூலியஸ் சீஸருக்கு
வழங்கப்பட்டு ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் வரை சூட்டப்பட்டது.
கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை ரோமப்பேரரசின் மதமாக பிரகடனப்படுத்தினான்.
அதற்கு பிறகு ரோமன் கத்தோலிக்க போப்மார்கள் இப்பட்டத்தைச்
சூட்டிக்கொண்டனர்.
இதனால்கிறிஸ்துவின் போதனைகளோடு பாபிலோனிய இரகசியங்கள் கலந்தமையால்
கிறிஸ்தவத்தின் மூலநீரூற்று களங்கப்பட்டது.பாபிலோனிய சடங்காச்சாரங்கள்
கிறிஸ்தவ சபைக்குள் நுழையும்போது கன்னி மரியாளின் தொழுகை வழிபாடு
ஆரம்பித்தது. ரோமன் கத்தோலிக்க பிரபல திருவிழாக்கள் அனைத்துமே பாபிலோனிய
மார்க்கத்தின் ஆரம்பத்தோற்றத்தை உடையவையே.ஈஸ்டர்என்னும் பெயர் கிறிஸ்தவ
வேத அடிப்படையில் ஏற்பட்டதல்ல. பாபிலோனிய மார்க்கத்திலே வான
ராணிக்குத்தான் ஈஸ்டர்(ISHTAR) என்பதாகும்.
பழைய பாபிலோனின்'இரகசியத்தையே'ரோமன் கத்தோலிக்கம் கையாண்டு வருகிறது.
உலகமெங்குமுள்ள எந்த கத்தோலிக்க ஆலயங்களிலும், அலுவலகங்களிலும்'மரியாளின்
சிலையை'காணலாம். கத்தோலிக்க சபை மரியாளை"வான ராணி", "தேவ தாய்", "சபையின்
தாய்", "உலகின் ராணி"எனவும் விளம்புகிறது. ஆனால்பரிசுத்த வேதாகமத்தில்
இயேசுவின் தாயாருக்கு அப்பேர்பட்ட பட்டங்கள் உள்ளதாக கூறப்படவில்லை.
இப்படியாக கி.பி.519ல் ஈஸ்டர் பண்டிகையயென்று இயேசு கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதலை கொண்டாடுகிறோம் என்று கூறிக்கொண்டு பாபிலோனிய இஸ்டார்
என்ற தேவதையை நினைவு கூற ஆரம்பித்தார்கள். இது பழைய ஏற்பாட்டு
வேதாகமத்திலே ( நியா 2:13; 10:6, 1 சாமு 7:3,4; 12:10, 1ராஜா
11:33வசனங்களில்)'அஸ்தரோத்து'என்று அழைக்கப்படுகிறது.
தம்மூஸ் என்ற நிம்ரோத் மனைவி செமிராமிஷ் பெற்ற மகன் நினைவாகத்தான்
ஏறக்குறைய 25 பேர் பரிசுத்தமான தேவாலயத்திலே அழுது கொண்டிருந்ததாக
எசேக்கியேல் தீர்க்க தரிசனத்தில் சொல்லுகிறார்(எசேக்கியேல் 8:14-16) இதை
வைத்துதான் கத்தோலிக்க சபையினர் இயேசுவின் சிலுவைப் பாடுகளை
நினைவுகூறுகிறோம் என்று சொல்லிக்கொண்டு லெந்து நாட்கள் என்று சொல்லித்
தொழுகைநாட்கள் கட்டளையாக பிறப்பிக்கப்பட்டது. கத்தோலிக்க மதத்திலே
அனுசரிக்கக்கூடிய ஜெபமாலை முறையும் பாபிலோனிய அடிப்படை மார்க்கமே ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக