அறியாமையை மன்னிக்கும்படி ஜெபித்தார்
பிதாவே இவர்களை நீர் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் என்ன
செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது என்கிறார். இயேசு பகைவரின்
அறியாமையை மன்னிக்குப்படி ஜெபிக்கிறார்.
அறியாமை என்றால் என்ன? ஒரு விஷயத்தைக் குறித்து முழுமையான மனத்தெளிவு
இல்லாமையே அறியாமை. யூத மதத் தலைவர்கள் வேத சத்தியங்களை
படித்திருந்தார்கள். ஆனால் அதில் முழு மனத்தெளிவு பெறாதிருந்தார்கள்.
எனவே மேசியா வந்தபோது அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யூதர்கள்
இயேசுவை சிலுவையில் அறைவதற்குக் காரணம் அறியாமை. இயேசு மேசியா, ஜீவாதிபதி
என்பதை அறியாததினாலேயே சிலுûவியில் அறைந்தார்கள். இயேசுவை சிலுவையில்
அறைவதினால் தங்கள் சந்ததிக்கு வரப்போகும் மாபெரும் அழிவையும்
அறியாதவர்களாக இருந்தார்கள். எனவே இயேசு அவர்களுடைய அறியாமையை
மன்னிக்கும்படி ஜெபிக்கிறார்.
அறியாமை மிகப்பெரிய பாவம். ஆண்டவரே அறியாமையாகிய பாவத்திலிருந்து என்னை
விடுதலையாக்கும் என்று ஜெபிக்க வேண்டும். தேவனிடம் ஞானத்தைக் கேட்டுப்
ஜெபிக்க வேண்டும். தேவஞானம் இருக்கும்போதே தெய்வீக காரியங்களை
புரிந்துகொள்ள முடியும் தேவனிடம் ஞானத்தைக் கேட்டுப்
பெற்றுக்கொள்வோம்.
இயேசு தாமகவே மன்னித்தார்
இயேசவின் பகைவர் தங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் கேட்கவில்லை என்றாலும்
பகைவர் மேலுள்ள அன்பினால் தாமகவே அவர்களை மன்னித்தார். அவர்களை
மன்னிக்கும்படி பிதாவிடம் ஜெபித்தார். இயேசுவின் ஜெபம் கேட்கப்பட்டது.
இல்லாவிட்டால் பூமி தன் வாயைப் பிளந்து அவர்களை விழுங்கியிருக்கும்.
இயேசு மரித்த போதும் பல காரியங்கள் நடைபெற்றன. ஆனால் மூன்றாம் மணி நேரம்
முதல் ஒன்பதாம் மணி நேரம்வரை பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைசிசீலை இரண்டாகக் கிழிந்தது, பூமி
அதிர்ந்தது, கன்மலைகள் பிளந்தன. கல்லறைகள் திறவுண்டு நித்திரையடைந்த
பரிசுத்தவான்கள் எழுந்தார்கள் என்று காண்கிறோம். இப்படிப்படிட்ட
நிகழ்ச்சிகள் மத்தியில் இயேசு பகைவர்களுக்காக ஜெபியாமல் இருந்திருந்தால்
அவர்களும் அழிக்கப்பட்டுப் போயிருப்பார்கள்.
மன்னிப்பு என்பது மன்னிப்பு கேட்பவர்களுக்கு மாத்தரமே. என்னிடம்
மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பேன். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று
கூறுவோருக்கு இது ஒரு பாடம். நம் பகைவரை நேசிப்போமானால் அவர்கள்
மன்னிப்பு கேளாமல் இருந்தாலும் நம்மால் அவர்களை மன்னிக்க முடியும்.
நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பாவங்களைச் செய்கிறோம். செய்கிற
பாவங்களுக்கு உடனுக்குடன் நாம் மன்னிப்பு கேட்டதில்லை என்றாலும் தேவன்
நம்மை மன்னித்துக்கொண்டே இருக்கிறார். எனவேதான் நாம் உடனுக்குடன் தண்டனை
பெறாமலிருக்கிறோம். எனவே கிறிஸ்து நமக்கு மன்னிக்கிறதுபோல நாமும் பிறரை
மன்னிக்கவேண்டும். எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்று
ஜெபிக்கும்படி இயேசு கற்றுத்தந்திருக்கிறார். எனவே கிறிஸ்தவவர்களாகிய
நாம் மன்னிக்கும்படி பண்புடையவர்களாக வாழ வேண்டும்.
சிலுவையில் இருந்து இயேசு ஜெபித்த இந்த ஜெபம் மிக முக்கியமானது. இந்த
ஜெபத்தின்மூலம் சிலுவையில் தொங்கிய ஒரு குற்றவாளி மனம் திரும்பினான்.
சிலுவை மரணத்தை மேற்பார்வை செய்த நூற்றுக்கதிபதி மனம் திரும்பினான்.
இரத்தசாட்சிகள் மரிக்கும்போது தங்களை துன்புறுத்தியோரை மன்னிக்கும் பண்பை
பெற்றுக்கொண்டாரஙகள். பகைவரையும் மன்னிக்கும் தேவ பண்பு உலகில்
உருவாயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக