கிறிஸ்துவின் மீட்பு எந்தப் பாவிக்கும் உண்டு
காலமெல்லாம் கொலை, கொள்ளை செய்து மரிக்கும்போது இயேசுவை நோக்கிப்பார்த்த
பாவியினுடைய பாவங்களை மன்னித்து அவனை ஏற்றுக்கொண்டதின் மூலம்
உலகத்திலுள்ள எந்த கொடிய பாதகனுக்கும் மீட்பு உண்டு என்ற உண்மையை ஆண்டவர்
விளக்கியிருக்கிறார். துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தில்
சாவதையல்ல, அவன் மனந்திரும்பி பிழைப்பதையே விரும்புகிறேன் என்றும்
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தை விட்டு விலகி நியாயத்தையும்
நீதியையும் செய்வானேயாகில் அவன் தன் ஆத்துமாவை பிழைக்கப்பண்ணுவான்
என்றும் தேவன் கூறுகிறார். அவர் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை
நேசிக்கிறார். பாவிகளை இரட்சிப்பதற்காகவே அவர் பரலோகம் விட்டு பூலோகம்
வந்தார். பாவிகளுக்காகவே சிலுவையில் தொங்கினார்.
சாத்தான் சிலுவைக் காட்சியை நம் கண்களுக்கு மறைத்து, நமது
பலவீனங்களையும், பாவங்களையும் நமக்கு காண்பித்து, மனம் சோர்புறச் செய்து
தேவனை விட்டு பின்மாறிப் போகச் செய்கிறான். இதன்மூலம் மீட்புப் பெற
முடியாமல் செய்துவிடுகிறான்.
ஈ. க. மூடியின் கூட்டத்தில் பங்கு பெற்ற ஒரு மனிதன் கூட்டம் முடிந்தபின்
ஈ. க.மூடியை தன் காரில் அழைத்துக் கொண்டு சென்றான். அவனது வீடு வந்ததும்
காரில் இருந்து இறங்கினார்கள். அந்த மனிதன் தன் துப்பாக்கியை எடுத்து ஈ.
க மூடியின் மார்புக்கு நேராக பிடித்து இப்போது நான் கேட்கும்
கேள்விகளுக்குப் பதில் கூறாவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்றான்.
பின்பு வீட்டுக் கதவை தட்டினான். ஒரு எலும்புருவம் நடுங்கிய கரங்களுடன்
கதவை திறந்தது. அந்த மனிதன் அந்த எலும்புருவத்தை சுட்டிக் காண்பித்து
இவள் என் மனைவி. இவளை நான் அடித்து துன்புறுத்தினதால் இவள் இப்படி
இருக்கிறாள். இந்த பாவியை இயேசு நேசிப்பாரா என்று கேட்டான். ஈ. க மூடி
இயேசு உன்னை நேசிக்கிறார் என்றார்.
பின்பு ஒரு அறையைத் திறந்தான். அந்த அறை முழுவதும் மதுபானங்களினால்
நிறைந்திருந்தது. இந்த குடிகாரனாகிய என்னை இயேசு நேசிப்பாரா என்று
கேட்டான். ஆம் இயேசு உன்னை நேசிக்கிறார் எனறார் ஈ. க மூடி.
ஈ. க மூடியை மறுபடியும் வேறொரு அறைக்கு அழைத்து சென்றான். அந்த அறை
முழுவதும் மனித எலும்புக்கூடுகள் நிறைந்து கிடந்தன. இவைகள் நான்
கொலைசெய்த மனிதர்களுடைய எலும்புகள். இந்த கொலைகாரனை இயேசு நேசிப்பாரா
என்று கேட்டான். இயேசு உன்னை நேசிக்கிறார் என்றார் ஈ. க மூடி. அந்த
மனிதனுடைய கைய்யிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. அவன் தேம்பித்
தேம்பி அழுதான். ஈ. க மூடியின் கால்களில் விழுந்தான். தன் பாவங்களை
தேவனிடம் அறிக்கை செய்தான். ஈ. க மூடி அவனுக்காக ஜெபித்தார். தேவன் அவன்
பாவங்களை மன்னித்தார். அவன் தேவ பிள்ளையானான். எந்தப் பாவியையும்
இரட்சிக்க இயேசு
ஆயத்தமாயிருக்கிறார்.
மீட்கப்பட்ட பாவியின் சிலாக்கியம்
இயேசுவை ஏற்றுக்கொண்ட இந்தக் குற்றவாளிக்கு கிடைத்த பாக்கியம் என்ன?
இன்றைக்கு என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்றார். இயேசுவோடுகூட
இருக்கும் பாக்கியம் அளிக்கப்பட்டது. இந்த சிலாக்கியம் 'இன்றைக்கே'
அதாவது உடனடியாகவே அளிக்கப்படுகிறது. நாளை அல்ல, சில நாட்கள் கழித்து
அல்ல. இன்றைக்கே அளிக்கப்படுகிறது.
பரதீசு என்ற வார்த்தை புதியஏற்பாட்டில் 3 இடங்களில் வருகிறது.
1. இயேசு குற்றவாளிக்கு வாக்களித்த இடம்
2. பவுல் மூன்றாம் வானம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டு பரதீசில் பிரவேசித்த
தாகக் கூறப்படுகிறது(2 கொரி 12:3) 3. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு தேவனுடைய
பரதீசின் மத்தியிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கக்கொடுப்பேன் என்று
ஆவியானவர் கூறுகிறார்(வெளி 2:7).
பரதீசு என்பது கிறிஸ்துவை தரிசிக்கும் இடம் என்று கூறலாம். சாது
சுந்தர்சிங் கூறும்போது கிறிஸ்துவோடுகூட வாழும் சிலாக்கியத்தை விட மேலான
பாக்கியம் வேறில்லை. அந்த பாக்கியத்தை இவன் பெற்றான். நாமும் இயேசுவை
ஏற்றுக்கொள்ளும்போது இந்த உலகத்திலேயே அவரோடு வாழும் பாக்கியத்தைப்
பெற்றுக்கொள்ளுகிறோம்.
சிலுவையில் நமது மீட்புக்காகத் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவை
விசுவாசித்து மீட்புப்பெற்று வாழ்வோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக