வெள்ளி, 7 அக்டோபர், 2016

சிலுவை மொழிகளும் உயிர்த்தெழுதல் தியானமும் மன்னிக்கும் கிறிஸ்து (1)

அப்பொழுது இயேசு பிதாவே இவர்களுக்கு மன்னிப்யும், தாங்கள் செய்கிறது
இன்னதென்று அறியாதிருங்கள் என்றார்
(லூக் 23:34)

சிலுவைமரணம் மிகக் கொடியது. சிலுவையில் அறையப்படும் மனிதன் உடனடி
மரிப்பதில்லை. பல நாட்கள் சிலுவையில் தொங்கி தாங்கமுடியாத வேதனைகளை
அனுபவித்து மரிப்பான். மேலும் சிலுவையில் தொங்கும் மனிதன் வேதனை தாங்க
முடியாமல், சிலுவையில் அறைந்தவர்களை சபிப்பான். வேதனை தாங்க முடியாமல்
சப்தமிடுவான். ஆனால் இயேசு, சிலுவையில் மிக அமைதியாக தொங்கினார்.
அருமையான ஏழு பொன்மொழிகளை மொழிந்தார். அதில் முதல் மொழி பிதாவே
இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருங்கள்
என்பது.

இது ஒரு ஜெபம்
சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசு பிதாவை நோக்கி ஜெபிக்கிறார்.
இயேசுவின் வாழ்வில் ஜெபம் மிக முக்கியமானதாக இருந்தது. தன் ஊழியத்தை
ஆரம்பிக்கும் முன் நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்தார். ஊழிய
காலத்தில் அதிகாலை இருட்டோடே எழுந்து ஜெபிக்கும் படியாகச் சென்றார்.
தனித்தும், சீடருடனும் சேர்ந்தும் ஜெபித்தார். கெத்சமனே தோட்டத்தில்
இரத்தத்தின் பெரும் துளிகள் வியர்வையாக விழும் அளவு ஜெபித்தார்.
சிலுவையில் தொங்கும் போதும் வேதனைகள், நிபந்தனைகள் மத்தியிலும்
ஜெபித்தார்.

இயேசுவின் இந்த ஜெபம் நமக்கு ஒரு சவால். நாம் மகிழ்ச்சியாக
இருக்கும்போதும், எல்லாம் ஆசீர்வாதமாக நடைபெறும் போதும் தேவனைத்
துதித்து, ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துகிறோம். ஆனால் பாடுகளும்,
ஏமாற்றங்களும் வரும்போது ஜெபம் பறந்து போகிறது. தேவனுக்கு விரோதமாக
உதடுகள்
முறுமுறுக்கிக்கின்றன.

நமது பாடுகள், வேதனைகள் மத்தியிலும் சோர்ந்து போகாமல் ஜெபிக்கவேண்டும்.
ஏசா 400 பேருடன் வருகிறார் என்று அறிந்த யாக்கோபு தேவனிடத்தில் போராடி
ஜெபித்தான், வெற்றிபெற்றான். தேவாசீர்வாதம் பெற்றான். பவுலும் சீலாவும்
அடித்து நொறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள், பாடுகள்
மத்தியிலும் தேவனை துதித்துப் பாடி மகிமைப்படுத்தினார்கள், இதனமூலம்
விடுதலை பெற்றார்கள். சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன.
சிறைச்சாலைக்காரனும் அவன் குடும்பமும் இரட்சிக்கப்பட்டார்கள். தேவநாமம்
மகிமைப்பட்டது.
இயேசு பிதாவை நோக்கி ஜெபித்தார்
இயேசுவுக்கும் பிதாவுக்கும் உரிய உறவு பிரிக்கமுடியாத ஒரு உறவாகும்.
இயேசு திருமுழுக்கு பெற்றவேளையில் பிதா இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில்
பிரியமாயிருக்கிறேன். (மத் 31:17) என்றார். மறுரூப மலையில் இருக்கும்போது
பிதா, இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்குச் செவிகொடுங்கள்(மாற் 9:7)
என்றார். கெத்சமனே தோட்டத்தில் இயேசு பிதாவிடம் ஜெபிக்கும்போது பதாவே
உமக்குச் சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்குபடிச் செய்யும்.
ஆகிலும் என்னுடைய சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின் படியே
ஆகக்கூடாது என்று ஜெபித்தார். குமாரன் ஜெபித்துவிட்டார் என்று பிதா
சிலுவையை அகற்றவில்லை. பதிலாக ஒரு தூதனை அனுப்பி பலப்படுத்தினார்.

சிலுவையில் தொங்கும் இயேசு, பிதா தன் ஜெபத்தைக் கேட்டு சிலுவையை
அகற்றவில்லையே என்று கோபப்படவில்லை. முறுமுறுக்கவில்லை. ஜெபிப்பதை
நிறுத்தவில்லை. சிலுவையில் இருக்கும்போதும் பிதாவுடன் உள்ள உறவில் எந்த
பாதிப்பும் இல்லாமல் பிதாவுடன் உறவாடுகிறாôர். பிதாவுடன் ஜெபிக்கிறார்.
நாமும், இன்ப வேளையிலும், துன்ப வேளையிலும் ஜெபிக்கவேண்டும். ஜெபத்தில்
கேட்டது கிடைக்காமல் இருந்தாலும் தேவனோடு ஐக்கியமாயிருக்க வேண்டும்.

இயேசு பகைவர்களுக்கு ஜெபித்தார்

இயேசு தன்னைச் சிலுவையில் அûற்தவர்களுக்காக ஜெபிக்கிறார். அவர்களை
மன்னிக்கும்படி ஜெபிக்கிறார். உங்கள் சத்துருக்களில் அன்பு வையுங்கள்.
உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். இப்படிச்
செய்வதால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகள்
சத்துருக்களை நேசிக்கவேண்டும். தங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக
ஜெபிக்கவேண்டும். இயேசு இதைத் தன் வாழ்க்கையில் காண்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக