'கபால ஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது அங்கே
அவரையும் அவருடைய வலது பக்கததில் ஒரு குற்றவாளியையும் அவருடைய இடது
பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவையில் அறைந்நதார்கள்'
லூக் 23:33
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட கொல்கதா மேட்டில் 3 சிலுவைகளைப்
பார்க்கிறோம். மூன்று சிலுவைகளிலும் மூன்று பேர் தொங்கிக்
கொண்டிருக்கிறார்கள். சிலுவை என்பது ரோமர் பயன்படுத்திய
தொலைக்கருவி. நமது நாட்டில் தூக்கு மரம் பயன்படுத்துவது போல் ரோமர்கள்
சிலுவை மரத்தை பயன்படுத்தினார்கள். யூதர்கள் தொலைத்தணடனை பெற்றவர்களை கல்
எறிந்து கொல்வார்கள். சிலுவை மரணம் மிகவும் கொடியதாகும். சிலுவையில்
அறையப்பட்டவர்கள் பல நாட்கள் சிலுவையில் வேதனையோடு தொங்கி மரிப்பார்கள்.
கொல்கொதா மேட்டில் மூன்று சிலுவைகளில் தொங்கிக் கொண்டிருப்போர் பாடுகள்
மத்தியில் தொங்கிகொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று பேருடைய குணாதிசயங்கள்
மூலம் இந்த மூன்று சிலுவைகளும் மூன்று மாபெரும் சத்தியங்களை உலகுக்கு
வெளிப்படுத்துகிறது.
1. மீட்பை வழங்கிய சிலுவை
2. மீட்பை புறக்கணித்த சிலுவை
3. மீட்பை ஏற்றுக்கொண்ட சிலுவை
இந்த மூன்று சிலுவைகளைக்குறித்து சிந்திப்போம்.
மீட்பை வழங்கிய சிலுவை
இயேசுவை நடுவிலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள் யோ; 19:18. மூன்று
சிலுவைகளில் நடு சிலுவையில் இயேசு தொங்குகிறார்.
இயேசு பாவமற்றவர், பரிசுத்தர். இயேசுவுக்கு மரண தண்டனை வழங்கிய பிலாத்து
இவர் நீதிமான் என்று தீர்ப்பு செய்தான். அவரை காட்டிக் கொடுத்த யூதாஸ்
குற்றமில்லாத இரத்தம் என்று கூறினான். சிலுவை மரணத்தை மேற்பார்வை செய்த
நூற்றுக்கதிபதி இவர் தேவகுமாரன் என்றான்.
நீதிமான் ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும். குற்றமில்லாத இரத்தம் ஏன்
சிலுவையில் சிந்தப்பட வேண்டும். தேவகுமாரன் ஏன் சிலுவையில் தொங்க
வேண்டும். பாவிகளாகிய நம்மை மீட்பதற்காகவே இரு குற்றவாளிகளின் நடுவின்
அவர் தொங்கினார்.
இரத்தம் சிந்துதல் அல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பது சமயங்கள்
ஒப்புக்கொள்கிற உண்மை. ஏதேன் தோட்டத்தில் ஆதாம் , ஏவாள் பாவம் செய்த போது
ஒரு விலங்கு கொல்லப்பட்டது. அதன் தோலை எடுத்து தேவன் அவர்களை
உடுத்தினார். ஆதி 3.21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும்
தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
பழைய ஏற்பாடு காலத்தில் மனிதனுடைய பாவங்கள் விலங்கின் மேல் சுமத்தப்பட்டு
அது கொல்லப்பட்டது. இந்த பலிகள் எல்லாம் இரயேசுகிறிஸ்துவின் மரணத்திற்கு
முன் அடையாளமாக இருந்தன. இப்பொழுது தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு
அனைத்துலக மக்களின் பாவங்களையும் தன்மேல் ஏற்று நமக்கு பாவ மன்னிப்பை
அருளும்படி சிலுவையில் அடிக்கப்பட்டார். ஆகவே தான் நீதிமானாகிய இயேசுவை
பிலாத்துவினால் விடுவிக்க முடியவில்லை. ஏசாயா இதைக் குறித்து தெளிவாக
கூறுகிறார். ஏசாயா 53:4-6ல் அவர் நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர்
நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை
அவர்மேல்வந்தது. நாமெல்லாரும் ஆடுகளைப் போல் வழிதப்பித் திரிந்து
அவனவன்தன் தன் வழியிலே போகிறோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய
அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார் என்று கூறுகிறார்.
இயேசு கூறும் போது சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய அடையும்
படிக்கு உயர்த்தப்பட வேண்டும். என்றார். (யோ 3:14இ15) வனாந்திர
யாத்திரையில் கொள்ளிவாய் சர்ப்பம் கடித்தவர்கள் உயிர் பிழைக்கும் படி
மோசே வெண்கலத்தினால் ஒரு சர்ப்பத்தைச் செய்து கம்பத்தில் தூக்கி
வைத்தான். யார் யார் அதை நோக்கிப் பார்த்தார்களோ அவர்கள் உயிர்
பிழைத்தார்கள். அது போல் பாவ அடிமைத்தனத்தில் இருப்போர். சாத்தானின்
பிடியில் உயர்த்தப்பட வேண்டும் என்று இயேசு கூறினார்.
நம்மை இரட்சிக்கும்படியாக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
யார் யார் அவரை விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கிறார்களோ அவர்கள்
இரட்சிக்கப்படுகிறார்கள். நடுசிலுவை இரட்சிப்பை வழங்கும் சிலுவையாக
இருக்கிறது. இன்றும் இரட்சிப்பை வழங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக