வியாழன், 10 நவம்பர், 2016

கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (5)

ஜலத்தினால் இனி உலகம் அழிவதில்லை என்ற உடன்படிக்கையின் அடையாளமே
வானவில். இது ஒரு புறம் இருக்க வெளிபடுத்தின விசேசம் வானவில்லை இரண்டாம்
வருகையோடு இணைக்கிறது. ஏன்? இரண்டாம் வருகையின் போது உலகம் நீரால் அல்ல,
அக்கினியால் அழியும் என்று சுட்டி காட்டப்படுகிறது. சிலர் வானவில்லின்
ஏழு வண்ணங்களை கூட தரம் பிரித்து விளக்குகின்றனர்.

வானவில் நீல நிறத்தில் தொடங்கி சிவப்பு நிறத்தில் முடிவடைகிறது. நீல
நிறம் ஜலத்தினால் உலகம் அழிந்ததை நினைவுப்படுத்துவதாகவும் சிவப்பு நிறம்
தீயினால் உலகம் அழியப் போவதை நினைவுப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு பல பிணைப்புகள் வேதம் முழுவதும் காணப்படுகின்றன. இத்தகைய அதிசய
பிணைப்புகளை பைபிளில் மட்டுமே காணமுடிகிறது.
மேலும் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல கதைகள் இயேசு கிறிஸ்துவை
பிரதிபலிப்பதாக உள்ளன.

உதாரணத்திற்கு நோவா பேழை இயேசு கிறிஸ்துவை பிரதிபலிப்பதாக உள்ளது. நோவா
காலத்தில் ஜலத்தினால் உலகம் அழிந்தது. இரண்டாம் வருகையில் அக்கினி உலகை
அழிக்கும். பேழையை கட்டும் போது நோவா பலரால் நிந்திக்கப்பட்டிருப்பார்,
பூமியின் மேல் வரப்போகும் அபயத்தை அவர் கூற கேட்டும் பலர் அலட்சியம்
செய்திருப்பர். அதே போல இன்று சுவிசேசம் உலகெங்கும் எடுத்து கூறப்பட்டும்
பல மக்களால் அலட்சியம் செய்யப்படுகிறது. உலக அழிவு வந்த போது நோவா
பேழையுள் பிரவேசித்து தன்னை காத்து கொண்டார், அதே போல பூமி அக்கினிக்கு
இரையாக்கப்படும் போது பாவங்களை விட்டு மனந்திரும்பிய மக்கள்
காக்கப்படுவர்.... நோவா கதையை போன்று யோனாவின் கதை இயேசு கிறிஸ்துவின்
உயிர்தெழுதலை சுட்டிகாட்டுகிறது. ஏதேன் தோட்ட ஜீவவிருட்சம் இயேசு
கிறிஸ்துவை பிரதிபலிக்கிறது. இவ்வாறு பல விந்தைகள் பைபிளில்
காணப்படுகின்றன.


உ) அதிசய தீர்க்கதரிசனங்கள்:


பைபிளின் தனி பெருமை என்றால் அது தீர்க்கதரிசனங்களே. பைபிளில்
முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின, நிறைவேறி
வருகின்றன, நிறைவேற போகின்றன. பைபிள் உரைத்த தீர்க்கதரிசனங்களுள் மிகவும்
வியப்பிற்குறியது தானியேல் 9:24 - 27. மேசியா எந்த ஆண்டில் பிறப்பார்,
எந்த ஆண்டில் இறப்பார் என்று இத்தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது.

அதிசயமாக, முன்னுரைக்கப்பட்ட அதே ஆண்டுகளில் இயேசு பிறக்கிறார்,
இறக்கிறார். மேசியா பிறருக்காய் இறப்பார், அவரது இறப்பின் நிமித்தமாய்
எருசலேம் அழிவுறும் என்றும் தானியேல் முன்னுரைக்கிறது. அதே போல, இயேசு
பிறருக்காய் அடிக்கப்படுகிறார், எருசலேம் சூறையாடப்படுகிறது!

இயேசுவின் வாழ்வில் 300-க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி
உள்ளன.10^17 (1 followed by 17 zeros) காசுகளை சுண்டிவிட்டு அதில் அத்தனை
காசுகளும் தலையாகவே விழுந்தன என்றால் எத்தனை வியப்போ அதே வியப்பில் தான்
இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிறைவேறின தீர்க்கதரிசனங்களும்
காணப்படுகின்றன!இறுதி கால தீர்க்கதரிசனங்களும் அதிசயமாக விளங்கி
வருகின்றன. இன்றுவரை பைபிள் தீர்க்கதரிசனங்கள் வியப்புக்குரியவைகளாக
உள்ளன. பைபிளில் 25% தீர்க்கதரிசனங்கள் மட்டுமே.

இவ்வாறு பல விதகங்களில் பைபிள் தனிப்பட்டு விளங்குகிறது. பண்டைய
இதிகாசங்கள், புராணங்கள், சாத்திரங்களை காணும் போது பைபிள் பல கோடி
மடங்கு தரத்தில் உயர்ந்து நிற்பதை தெளிவாக காணலாம்.

எந்நிலையிலும் கிறிஸ்தவத்தின் தோற்றத்தை பைபிள் கொண்டு மட்டுமே விளக்க
முடியும். கிறிஸ்தவம் மட்டுமே மனிதன் மத தோற்றத்திற்கென வகுத்த
கோட்பாடுகளுக்குள் வர தவறி தனித்து நிற்கிறது. சுருக்கமாக,
மனிதர்களுக்கும் இறைவனுக்கும் ஆதிமுதலாய் ஒரு உறவு உள்ளது, அதுவே
கிறிஸ்தவம்.அந்த உறவை விட்டு பிரிந்த சிலர் இன்றைய மனிதன் கூறுவது போல
'மதங்களை' உண்டாக்கினர். 'மதம்' என்ற வார்த்தை பிறந்தது. 'உறவு' என்னும்
சொல் வழுவிழந்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக