1. ஆறுநாளைக்குப்
பின்பு, இயேசு
பேதுருவையும்
யாக்கோபையும்
அவனுடைய
சகோதரனாகிய
யோவானையும்
கூட்டிக்கொண்டு
தனித்திருக்கும்படி
உயர்ந்த மலையின்மேல்
போய்,
2. அவர்களுக்கு முன்பாக
மறுரூபமானார்; அவர்
முகம் சூரியனைப்போலப்
பிரகாசித்தது, அவர்
வஸ்திரம்
வெளிச்சத்தைப்போல
வெண்மையாயிற்று.
3. அப்பொழுது
மோசேயும், எலியாவும்
அவரோடே
பேசுகிறவர்களாக
அவர்களுக்குக்
காணப்பட்டார்கள்.
4. அப்பொழுது பேதுரு
இயேசுவை நோக்கி:
ஆண்டவரே, நாம் இங்கே
இருக்கிறது நல்லது;
உமக்குச் சித்தமானால்,
இங்கே உமக்கு ஒரு
கூடாரமும், மோசேக்கு
ஒரு கூடாரமும்,
எலியாவுக்கு ஒரு
கூடாரமுமாக, மூன்று
கூடாரங்களைப்
போடுவோம் என்றான்.
5. அவன் பேசுகையில்,
இதோ, ஒளியுள்ள ஒரு
மேகம் அவர்கள்மேல்
நிழலிட்டது. இவர்
என்னுடைய நேச குமாரன்,
இவரில்
பிரியமாயிருக்கிறேன்,
இவருக்குச்
செவிகொடுங்கள் என்று
அந்த மேகத்திலிருந்து
ஒரு சத்தம் உண்டாயிற்று.
6. சீஷர்கள் அதைக்கேட்டு,
முகங்குப்புற
விழுந்து, மிகவும்
பயந்தார்கள்.
7. அப்பொழுது, இயேசு
வந்து, அவர்களைத்
தொட்டு: எழுந்திருங்கள்
பயப்படாதேயுங்கள்
என்றார்.
8. அவர்கள் தங்கள் கண்களை
ஏறெடுத்துப்பார்க்கையி
ல் இயேசுவைத்தவிர
வேறொருவரையும்
காணவில்லை.
9. அவர்கள்
மலையிலிருந்து
இறங்குகிறபோது,
இயேசு அவர்களை
நோக்கி: மனுஷகுமாரன்
மரித்தோரிலிருந்து
எழுந்திருக்கும்வரைக்கு
ம் இந்தத் தரிசனத்தை
ஒருவருக்கும்
சொல்லவேண்டாம் என்று
கட்டளையிட்டார்.
10. அப்பொழுது,
அவருடைய சீஷர்கள் அவரை
நோக்கி: அப்படியானால்
எலியா
முந்திவரவேண்டும்
என்று வேதபாரகர்
சொல்லுகிறார்களே,
அதெப்படி யென்று
கேட்டார்கள்.
11. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
எலியா முந்தி வந்து
எல்லாவற்றையும்
சீர்ப்படுத்துவது
மெய்தான்.
12. ஆனாலும், எலியா
வந்தாயிற்று என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்; அவனை
அறியாமல் தங்கள்
இஷ்டப்படி அவனுக்குச்
செய்தார்கள்; இவ்விதமாய்
மனுஷகுமாரனும்
அவர்களால் பாடுபடுவார்
என்றார்.
13. அவர் யோவான்
ஸ்நானனைக்குறித்துத்
தங்களுக்குச் சொன்னார்
என்று அப்பொழுது
அவர்கள்
அறிந்துகொண்டார்கள்.
14. அவர்கள் ஜனங்களிடத்தில்
வந்தபோது, ஒரு மனுஷன்
அவரிடத்தில் வந்து, அவர்
முன்பாக
முழங்கால்படியிட்டு:
15. ஆண்டவரே, என்
மகனுக்கு இரங்கும், அவன்
சந்திரரோகியாய்க்
கொடிய
வேதனைப்படுகிறான்;
அடிக்கடி தீயிலும்,
அடிக்கடி ஜலத்திலும்
விழுகிறான்.
16. அவனை உம்முடைய
சீஷர்களிடத்தில்
கொண்டுவந்தேன்;
அவனைச் சொஸ்தமாக்க
அவர்களால்
கூடாமற்போயிற்று
என்றான்.
17. இயேசு
பிரதியுத்தரமாக:
விசுவாசமில்லாத
மாறுபாடுள்ள
சந்ததியே, எதுவரைக்கும்
நான் உங்களோடு
இருப்பேன்?
எதுவரைக்கும்
உங்களிடத்தில்
பொறுமையாயிருப்பே
ன்? அவனை என்னிடத்தில்
கொண்டுவாருங்கள்
என்றார்.
18. இயேசு பிசாசை
அதட்டினார்; உடனே அது
அவனை விட்டுப்
புறப்பட்டது; அந்நேரமே
அந்த இளைஞன்
சொஸ்தமானான்.
19. அப்பொழுது, சீஷர்கள்
இயேசுவினிடத்தில்
தனித்து வந்து: அதைத்
துரத்திவிட எங்களால் ஏன்
கூடாமற்போயிற்று
என்று கேட்டார்கள்.
20. அதற்கு இயேசு: உங்கள்
அவிசுவாசத்தினாலேதா
ன்; கடுகுவிதையளவு
விசுவாசம் உங்களுக்கு
இருந்தால் நீங்கள் இந்த
மலையைப்பார்த்து,
இவ்விடம் விட்டு
அப்புறம்போ என்று
சொல்ல அது அப்புறம்
போம்; உங்களால் கூடாத
காரியம் ஒன்றுமிராது
என்று, மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
21. இந்த ஜாதிப்பிசாசு
ஜெபத்தினாலும்
உபவாசத்தினாலுமேயன்ற
ி
மற்றெவ்விதத்தினாலும்
புறப்பட்டுப்போகாது
என்றார்.
22. அவர்கள்
கலிலேயாவிலே
சஞ்சரிக்கும்போது,
இயேசு அவர்களை
நோக்கி: மனுஷகுமாரன்
மனுஷர் கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படுவார்
.
23. அவர்கள்
அவரைக்கொலை
செய்வார்கள்; ஆகிலும்
மூன்றாம் நாளிலே
உயிர்த்தெழுந்திருப்பார்
என்றார். அவர்கள் மிகுந்த
துக்கமடைந்தார்கள்.
24. அவர்கள் கப்பர்நகூமில்
வந்தபோது, வரிப்பணம்
வாங்குகிறவர்கள்
பேதுருவினிடத்தில்
வந்து: உங்கள் போதகர்
வரிப்பணம்
செலுத்துகிறதில்லையா
என்று கேட்டார்கள்;
செலுத்துகிறார்
என்றான்.
25. அவன் வீட்டிற்குள்
வந்தபோது, அவன்
பேசுகிறதற்கு
முன்னமே இயேசு
அவனை நோக்கி:
சீமோனே, உனக்கு எப்படித்
தோன்றுகிறது?
பூமியின் ராஜாக்கள்
தீர்வையையும்
வரியையும் தங்கள்
பிள்ளைகளிடத்திலோ,
அந்நியரிடத்திலோ,
யாரிடத்தில்
வாங்குகிறார்கள் என்று
கேட்டார்.
26. அதற்குப் பேதுரு:
அந்நியரிடத்தில்
வாங்குகிறார்கள் என்றான்.
இயேசு அவனை நோக்கி:
அப்படியானால்
பிள்ளைகள் அதைச்
செலுத்தவேண்டுவதில்ல
ையே.
27. ஆகிலும், நாம்
அவர்களுக்கு
இடறலாயிராதபடிக்கு, நீ
கடலுக்குப்போய்,
தூண்டில் போட்டு,
முதலாவது அகப்படுகிற
மீனைப்பிடித்து, அதன்
வாயைத் திறந்துபார்.
ஒரு வெள்ளிப்பணத்தைக்
காண்பாய்; அதை எடுத்து
எனக்காகவும்
உனக்காகவும்
அவர்களிடத்தில் கொடு
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக