செவ்வாய், 1 நவம்பர், 2016

மத்தேயு அதிகாரம் 12

1. அக்காலத்திலே, இயேசு
ஓய்வு நாளில்
பயிர்வழியே போனார்;
அவருடைய சீஷர்கள்
பசியாயிருந்து,
கதிர்களைக் கொய்து,
தின்னத் தொடங்கினார்கள்.
2. பரிசேயர் அதைக்கண்டு,
அவரை நோக்கி: இதோ
ஓய்வு நாளில்
செய்யத்தகாததை
உம்முடைய சீஷர்கள்
செய்கிறார்களே
என்றார்கள்.
3. அதற்கு அவர்: தாவீதும்
அவனோடிருந்தவர்களும்
பசியாயிருந்தபோது
செய்ததை நீங்கள்
வாசிக்கவில்லையா?
4. அவன் தேவனுடைய
வீட்டில் பிரவேசித்து,
ஆசாரியர் தவிர
வேறொருவரும்
புசிக்கத்தகாத
தேவசமுகத்து
அப்பங்களைத் தானும்
தன்னோடிருந்தவர்களும்
புசித்தார்களே.
5. அன்றியும், ஓய்வு
நாட்களில் ஆசாரியர்கள்
தேவாலயத்தில்
ஓய்ந்திராமல், ஓய்வு
நாளை வேலை
நாளாக்கினாலும்
குற்றமில்லாதிருக்கிறா
ர்கள் என்று நீங்கள்
வேதத்திலே
வாசிக்கவில்லையா?
6. தேவாலயத்திலும்
பெரியவர் இங்கே
இருக்கிறார் என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
7. பலியையல்ல
இரக்கத்தையே
விரும்புகிறேன்
என்பதின் கருத்து
இன்னதென்று நீங்கள்
அறிந்தீர்களானால்,
குற்றமில்லாதவர்களை
நீங்கள்
குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8. மனுஷகுமாரன்
ஓய்வுநாளுக்கும்
ஆண்டவராய் இருக்கிறார்
என்றார்.
9. அவர் அவ்விடம்
விட்டுப்போய்,
அவர்களுடைய ஜெப
ஆலயத்தில் பிரவேசித்தார்.
10. அங்கே சூம்பின
கையையுடைய மனுஷன்
ஒருவன் இருந்தான்.
அப்பொழுது அவர்மேல்
குற்றஞ்சாட்டும்படிக்கு:
ஓய்வு நாளில்
சொஸ்தமாக்குகிறது
நியாயமா? என்று
கேட்டார்கள்.
11. அதற்கு அவர்: உங்களில்
எந்த
மனுஷனுக்காகிலும்
ஒரு ஆடு இருந்து, அது
ஓய்வுநாளில்
குழியிலே விழுந்தால்,
அதைப்பிடித்துத்
தூக்கிவிடமாட்டானோ?
12. ஆட்டைப்பார்க்கிலும்
மனுஷனானவன் எவ்வளவோ
விசேஷித்திருக்கிறான்!
ஆதலால் ஓய்வுநாளிலே
நன்மை செய்வது
நியாயந்தான் என்று
சொன்னார்.
13. பின்பு அந்த
மனுஷனை நோக்கி: உன்
கையை நீட்டு என்றார்.
அவன் நீட்டினான்; அது
மறுகையைப்போல
சொஸ்தமாயிற்று.
14. அப்பொழுது,
பரிசேயர்
வெளியேபோய், அவரைக்
கொலை செய்யும்படி
அவருக்கு விரோதமாய்
ஆலோசனைபண்ணினார்கள்.
15. இயேசு அதை
அறிந்து, அவ்விடம்
விட்டு விலகிப்போனார்.
திரளான ஜனங்கள்
அவருக்குப்
பின்சென்றார்கள்;
அவர்களெல்லாரையும்
அவர் சொஸ்தமாக்கி,
16. தம்மைப்
பிரசித்தம்பண்ணாதபடி
அவர்களுக்குக்
கண்டிப்பாய்க்
கட்டளையிட்டார்.
17. ஏசாயா தீர்க்கதரிசியால்
உரைக்கப்பட்டது
நிறைவேறும்படி
இப்படி நடந்தது. அவன்
உரைத்ததாவது:
18. இதோ, நான்
தெரிந்துகொண்ட
என்னுடைய தாசன், என்
ஆத்துமாவுக்குப்
பிரியமாயிருக்கிற
என்னுடைய நேசன்; என்
ஆவியை அவர்மேல்
அமரப்பண்ணுவேன், அவர்
புறஜாதியாருக்கு
நியாயத்தை
அறிவிப்பார்.
19. வாக்குவாதம்
செய்யவுமாட்டார்,
கூக்குரலிடவுமாட்டார்;
அவருடைய சத்தத்தை
ஒருவனும் வீதிகளில்
கேட்பதுமில்லை.
20. அவர் நியாயத்திற்கு
ஜெயங்கிடைக்கப்பண்ணுக
ிறவரைக்கும்,
நெரிந்தநாணலை
முறிக்காமலும், மங்கி
எரிகிற திரியை
அணைக்காமலும்
இருப்பார்.
21. அவருடைய
நாமத்தின்மேல்
புறஜாதியார்
நம்பிக்கையாயிருப்பார்க
ள் என்பதே.
22. அப்பொழுது,
பிசாசு பிடித்த
குருடும் ஊமையுமான
ஒருவன் அவரிடத்தில்
கொண்டுவரப்பட்டான்;
குருடும்
ஊமையுமானவன்
பேசவுங்
காணவுந்தக்கதாக அவனைச்
சொஸ்தமாக்கினார்.
23. ஜனங்களெல்லாரும்
ஆச்சரியப்பட்டு: தாவீதின்
குமாரன் இவர்தானோ?
என்றார்கள்.
24. பரிசேயர்
அதைக்கேட்டு: இவன்
பிசாசுகளின்
தலைவனாகிய
பெயல்செபூலினாலே
பிசாசுகளைத்
துரத்துகிறானேயல்லாம
ல் மற்றப்படியல்ல என்றார்கள்.
25. இயேசு அவர்கள்
சிந்தனைகளை அறிந்து,
அவர்களை நோக்கி:
தனக்குத்தானே
விரோதமாய்ப்
பிரிந்திருக்கிற எந்த
ராஜ்யமும் பாழாய்ப்போம்;
தனக்குத்தானே
விரோதமாய்
பிரிந்திருக்கிற எந்த
பட்டணமும் எந்த வீடும்
நிலைநிற்கமாட்டாது.
26. சாத்தானைச் சாத்தான்
துரத்தினால் தனக்கு
விரோதமாகத் தானே
பிரிவினை
செய்கிறதாயிருக்குமே;
அப்படிச் செய்தால் அவன்
ராஜ்யம் எப்படி
நிலைநிற்கும்?
27. நான்
பெயல்செபூலினாலே
பிசாசுகளைத்
துரத்தினால், உங்கள்
பிள்ளைகள் அவைகளை
யாராலே
துரத்துகிறார்கள்?
ஆகையால், அவர்களே
உங்களை
நியாயந்தீர்க்கிறவர்களாயி
ருப்பார்கள்.
28. நான் தேவனுடைய
ஆவியினாலே
பிசாசுகளைத்
துரத்துகிறபடியால்,
தேவனுடைய ராஜ்யம்
உங்களிடத்தில்
வந்திருக்கிறதே.
29. அன்றியும் பலவானை
முந்திக்
கட்டினாலொழியப்
பலவானுடைய
வீட்டுக்குள் ஒருவன்
புகுந்து, அவன்
உடைமைகளை எப்படிக்
கொள்ளையிடக்கூடும்?
கட்டினானேயாகில், அவன்
வீட்டைக்
கொள்ளையிடலாம்.
30. என்னோடே இராதவன்
எனக்கு
விரோதியாயிருக்கிற
ான்; என்னோடே
சேர்க்காதவன்
சிதறடிக்கிறான்.
31. ஆதலால், நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்:
எந்தப்பாவமும் எந்தத்
தூஷணமும்
மனுஷருக்கு
மன்னிக்கப்படும்;
ஆவியானவருக்கு
விரோதமான தூஷணமோ
மனுஷருக்கு
மன்னிக்கப்படுவதில்லை.
32. எவனாகிலும்
மனுஷகுமாரனுக்கு
விரோதமான வார்த்தை
சொன்னால் அது
அவனுக்கு
மன்னிக்கப்படும்;
எவனாகிலும் பரிசுத்த
ஆவிக்கு விரோதமாகப்
பேசினால் அது
இம்மையிலும்
மறுமையிலும்
அவனுக்கு
மன்னிக்கப்படுவதில்லை.
33. மரம் நல்லதென்றால்,
அதின் கனியும்
நல்லதென்று சொல்லுங்கள்;
மரம் கெட்டதென்றால்,
அதின் கனியும்
கெட்டதென்று
சொல்லுங்கள்; மரமானது
அதின் கனியினால்
அறியப்படும்.
34. விரியன் பாம்புக்
குட்டிகளே, நீங்கள்
பொல்லாதவர்களாயிருக்க,
நலமானவைகளை எப்படி
பேசுவீர்கள்? இருதயத்தின்
நிறைவினால் வாய்
பேசும்.
35. நல்ல மனுஷன்
இருதயமாகிய நல்ல
பொக்கிஷத்திலிருந்து
நல்லவைகளை
எடுத்துக்காட்டுகிறான்,
பொல்லாத மனுஷன்
பொல்லாத
பொக்கிஷத்திலிருந்து
பொல்லாதவைகளை
எடுத்துக்காட்டுகிறான்.
36. மனுஷர் பேசும்
வீணான வார்த்தைகள்
யாவையும் குறித்து
நியாயத்தீர்ப்புநாளிலே
கணக்கொப்புவிக்கவேண்ட
ும் என்று உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
37. ஏனெனில், உன்
வார்த்தைகளினாலே
நீதிமான் என்று
தீர்க்கப்படுவாய்; அல்லது
உன் வார்த்தைகளினாலே
குற்றவாளி என்று
தீர்க்கப்படுவாய் என்றார்.
38. அப்பொழுது,
வேதபாரகரிலும்
பரிசேயரிலும் சிலர்
அவரை நோக்கி: போதகரே,
உம்மால் ஒரு
அடையாளத்தைக் காண
விரும்புகிறோம்
என்றார்கள்.
39. அவர்களுக்குப் அவர்
பிரதியுத்தரமாக: இந்தப்
பொல்லாத விபசாரச்
சந்ததியார்
அடையாளத்தைத்
தேடுகிறார்கள்;
ஆனாலும் யோனா
தீர்க்கத்தரிசியின்
அடையாளமேயன்றி
வேறே அடையாளம்
இவர்களுக்குக்
கொடுக்கப்படுவதில்லை.
40. யோனா இரவும் பகலும்
மூன்றுநாள் ஒரு
பெரிய மீனின் வயிற்றில்
இருந்தது போல,
மனுஷகுமாரனும்
இரவும் பகலும்
மூன்றுநாள் பூமியின்
இருதயத்தில் இருப்பார்.
41. யோனாவின்
பிரசங்கத்தைக் கேட்டு
நினிவே பட்டணத்தார்
மனந்திரும்பினார்கள்.
இதோ, யோனாவிலும்
பெரியவர் இங்கே
இருக்கிறார். ஆதலால்
நியாயத்தீர்ப்புநாளிலே
நினிவே பட்டணத்தார் இந்தச்
சந்ததியாரோடெழுந்து
நின்று இவர்கள்மேல்
குற்றஞ்சுமத்துவார்கள்.
42. தென்தேசத்து
ராஜஸ்திரீ பூமியின்
எல்லைகளிருந்து
சாலொமோனுடைய
ஞானத்தைக் கேட்க வந்தாள்.
இதோ,
சாலொமோனிலும்
பெரியவர் இங்கே
இருக்கிறார். ஆதலால்
நியாயத்தீர்ப்புநாளிலே
அந்த ராஜஸ்திரீ இந்தச்
சந்ததியாரோடெழுந்து
நின்று இவர்கள்மேல்
குற்றஞ்சுமத்துவாள்.
43. அசுத்த ஆவி ஒரு
மனுஷனை விட்டுப்
புறப்படும்போது, வறண்ட
இடங்களில் அலைந்து,
இளைப்பாறுதல்
தேடியும் கண்டடையாமல்:
44. நான் விட்டு வந்த
வீட்டுக்குத் திரும்பிப்
போவேன் என்று சொல்லி;
அங்கே வந்து, அந்த வீடு
வெறுமையாகவும்,
பெருக்கி,
ஜோடிக்கப்பட்டதாகவும்
இருக்கக்கண்டு,
45. திரும்பிப்போய்,
தன்னிலும் பொல்லாத
வேறு ஏழு ஆவிகளைத்
தன்னோடே
கூட்டிக்கொண்டுவந்து,
உட்புகுந்து அங்கே
குடியிருக்கும்;
அப்பொழுது, அந்த
மனுஷனுடைய
முன்னிலைமையிலும்
அவன் பின்னிலைமை
அதிக
கேடுள்ளதாயிருக்கும்;
அப்படியே இந்தப்
பொல்லாத
சந்ததியாருக்கும்
சம்பவிக்கும் என்றார்.
46. இப்படி அவர்
ஜனங்களோடே
பேசுகையில்,
அவருடைய தாயாரும்
சகோதரரும் அவரிடத்தில்
பேசவேண்டுமென்று
வெளியே நின்றார்கள்.
47. அப்பொழுது, ஒருவன்
அவரை நோக்கி:
உம்முடைய தாயாரும்
உம்முடைய சகோதரரும்
உம்மோடே
பேசவேண்டுமென்று
வெளியே நிற்கிறார்கள்
என்றான்.
48. தம்மிடத்தில் இப்படிச்
சொன்னவனுக்கு அவர்
பிரதியுத்தரமாக: என்
தாயார் யார்? என் சகோதரர்
யார்? என்று சொல்லி,
49. தம்முடைய கையைத்
தமது சீஷர்களுக்கு நேரே
நீட்டி: இதோ, என் தாயும்
என் சகோதரரும் இவர்களே!
50. பரலோகத்திலிருக்கிற
என் பிதாவின்
சித்தத்தின்படி
செய்கிறவன் எவனோ
அவனே எனக்குச்
சகோதரனும் சகோதரியும்
தாயுமாய் இருக்கிறான்
என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக