புதன், 2 நவம்பர், 2016

மாற்கு அதிகாரம் 2

1.
சிலநாட்களுக்குப்பின்பு
அவர் மறுபடியும்
கப்பர்நகூமுக்குப்
போனார்; அவர்
வீட்டிலிருக்கிறார்
என்று ஜனங்கள்
கேள்விப்பட்டு;
2. உடனே வாசலுக்கு
முன்னும் நிற்க
இடம்போதாதபடிக்கு
அநேகர் கூடிவந்தார்கள்;
அவர்களுக்கு வசனத்தைப்
போதித்தார்.
3. அப்பொழுது
நாலுபேர் ஒரு
திமிர்வாதக்காரனைச்
சுமந்துகொண்டு
அவரிடத்தில் வந்தார்கள்;
4. ஜனக்கூட்டத்தினிமித்தம்
அவருக்குச் சமீபமாய்ச்
சேரக்கூடாமல், அவர்
இருந்த வீட்டின்
மேற்கூரையைப்
பிரித்துத் திறப்பாக்கி,
திமிர்வாதக்காரன்
கிடக்கிற படுக்கையை
இறக்கினார்கள்.
5. இயேசு அவர்கள்
விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை
நோக்கி: மகனே, உன்
பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டது என்றார்.
6. அங்கே உட்கார்ந்திருந்த
வேதபாரகரில் சிலர்:
7. இவன் இப்படி
தேவதூஷணம்
சொல்லுகிறதென்ன?
தேவன் ஒருவரேயன்றிப்
பாவங்களை
மன்னிக்கத்தக்கவர் யார்
என்று தங்கள் இருதயங்களில்
சிந்தித்துக்கொண்டிருந்த
ார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே
இப்படிச்
சிந்திக்கிறார்களென்று
இயேசு உடனே
தம்முடைய ஆவியில்
அறிந்து, அவர்களை
நோக்கி: நீங்கள் உங்கள்
இருதயங்களில் இப்படி
சிந்திக்கிறதென்ன?
9. உன் பாவங்கள் உனக்கு
மன்னிக்கப்பட்டதென்று
சொல்வதோ, எழுந்து உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு
நடவென்று சொல்வதோ,
எது எளிது?
10. பூமியிலே
பாவங்களை மன்னிக்க
மனுஷகுமாரனுக்கு
அதிகாரம் உண்டென்பதை
நீங்கள் அறியவேண்டும்
என்று சொல்லி
திமிர்வாதக்காரனை
நோக்கி:
11. நீ எழுந்து, உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு, உன்
வீட்டுக்குப் போ என்று
உனக்குச் சொல்லுகிறேன்
என்றார்.
12. உடனே, அவன் எழுந்து,
தன் படுக்கையை
எடுத்துக்கொண்டு
எல்லாருக்குமுன்பாகப்
போனான். அப்பொழுது
எல்லாரும் ஆச்சரியப்பட்டு:
நாம் ஒருக்காலும்
இப்படிக்
கண்டதில்லையென்று
சொல்லி, தேவனை
மகிமைப்படுத்தினார்கள்.
13. அவர் மறுபடியும்
புறப்பட்டுக் கடலருகே
போனார்; அப்பொழுது
ஜனங்களெல்லாரும்
அவரிடத்தில் வந்தார்கள்;
அவர்களுக்குப்
போதகம்பண்ணினார்.
14. அவர்
நடந்துபோகையில்,
அல்பேயுவின்
குமாரனாகிய லேவி
ஆயத்துறையில்
உட்கார்ந்திருக்கிறதைக்
கண்டு; எனக்குப்
பின்சென்றுவா என்றார்;
அவன் எழுந்து
அவருக்குப்
பின்சென்றான்.
15. அப்பொழுது,
அவனுடைய வீட்டிலே
அவர்
போஜனபந்தியிருக்கையி
ல், அநேக ஆயக்காரரும்
பாவிகளும்
அவரோடுகூட
வந்திருந்தபடியால்,
அவர்களும்
இயேசுவோடும் அவர்
சீஷரோடுங்கூடப்
பந்தியிருந்தார்கள்.
16. அவர் ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனம்பண்ணுகிறதை
வேதபாரகரும்
பரிசேயரும் கண்டு,
அவருடைய சீஷரை
நோக்கி: அவர்
ஆயக்காரரோடும்
பாவிகளோடும்
போஜனபானம்
பண்ணுகிறதென்னவென்ற
ு கேட்டார்கள்.
17. இயேசு அதை கேட்டு:
பிணியாளிகளுக்கு
வைத்தியன்
வேண்டியதேயல்லாமல்
சுகமுள்ளவர்களுக்கு
வேண்டியதில்லை;
நீதிமான்களையல்ல,
பாவிகளையே
மனந்திரும்புகிறதற்கு
அழைக்கவந்தேன் என்றார்.
18. யோவானுடைய
சீஷரும் பரிசேயருடைய
சீஷரும் உபவாசம்
பண்ணிவந்தார்கள். அவர்கள்
அவரிடத்தில் வந்து:
யோவானுடைய சீஷரும்
பரிசேயருடைய சீஷரும்
உபவாசிக்கிறார்களே,
உம்முடைய சீஷர்
உபவாசியாமலிருப்பதெ
ன்னவென்று கேட்டார்கள்.
19. அதற்கு இயேசு:
மணவாளன்
தங்களோடிருக்கையில்
மணவாளனுடைய தோழர்
உபவாசிப்பார்களா?
மணவாளன் தங்களுடனே
இருக்கும்வரைக்கும்
உபவாசிக்கமாட்டார்களே.
20. மணவாளன் அவர்களை
விட்டு எடுபடும் நாட்கள்
வரும், அந்த நாட்களிலே
உபவாசிப்பார்கள்.
21. ஒருவனும்
கோடித்துண்டைப் பழைய
வஸ்திரத்தோடு
இணைக்கமாட்டான்,
இணைத்தால், அதினோடே
இணைத்த புதியதுண்டு
பழையதை அதிகமாய்க்
கிழிக்கும், பீறலும்
அதிகமாகும்.
22. ஒருவனும் புது
திராட்சரசத்தைப்
பழந்துருத்திகளில்
வார்த்துவைக்கமாட்டான்;
வார்த்துவைத்தால்,
புதுரசம் துருத்திகளைக்
கிழித்துப்போடும்,
இரசமும் சிந்திப்போம்;
துருத்திகளும்
கெட்டுப்போம்;
புதுரசத்தைப் புது
துருத்திகளில்
வார்த்துவைக்கவேண்டும்
என்றார்.
23. பின்பு, அவர்
ஓய்வுநாளில் பயிர்
வழியே போனார்;
அவருடைய சீஷர்கள் கூட
நடந்துபோகையில்,
கதிர்களைக் கொய்யத்
தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை
நோக்கி: இதோ,
ஓய்வுநாளில்
செய்யத்தகாததை இவர்கள் ஏன்
செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்:
தாவீதுக்கு உண்டான
ஆபத்தில், தானும்
தன்னோடிருந்தவர்களும்
பசியாயிருந்தபோது,
26. அவன் அபியத்தார்
என்னும் பிரதான
ஆசாரியன் காலத்தில்
செய்ததை நீங்கள்
ஒருக்காலும்
வாசிக்கவில்லையா?
அவன் தேவனுடைய
வீட்டில் பிரவேசித்து,
ஆசாரியர்தவிர
வேறொருவரும்
புசிக்கத்தகாத
தெய்வசமுகத்து
அப்பங்களைத் தானும்
புசித்துத்
தன்னோடிருந்தவர்களுக்கு
ம் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை
நோக்கி: மனுஷன்
ஓய்வுநாளுக்காக
உண்டாக்கப்படவில்லை,
ஓய்வுநாள்
மனுஷனுக்காக
உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால்
மனுஷகுமாரன் ஓய்வு
நாளுக்கும் ஆண்டவராய்
இருக்கிறார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக