1. இயேசு தேவாலயத்தை
விட்டுப்
புறப்பட்டுப்போகையில்,
அவருடைய சீஷர்கள்
தேவாலயத்தின்
கட்டடங்களை அவருக்குக்
காண்பிக்க அவரிடத்தில்
வந்தார்கள்.
2. இயேசு அவர்களை
நோக்கி:
இவைகளையெல்லாம்
பார்க்கிறீர்களே,
இவ்விடத்தில் ஒரு
கல்லின்மேல் ஒரு
கல்லிராதபடிக்கு எல்லாம்
இடிக்கப்பட்டுப்போகும்
என்று மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.
3. பின்பு, அவர்
ஒலிவமலையின் மேல்
உட்கார்ந்திருக்கையில்,
சீஷர்கள் அவரிடத்தில்
தனித்துவந்து: இவைகள்
எப்பொழுது
சம்பவிக்கும்? உம்முடைய
வருகைக்கும், உலகத்தின்
முடிவுக்கும்
அடையாளம் என்ன?
எங்களுக்குச்
சொல்லவேண்டும்
என்றார்கள்.
4. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
ஒருவனும் உங்களை
வஞ்சியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்;
5. ஏனெனில், அநேகர்
வந்து, என் நாமத்தைத்
தரித்துக்கொண்டு:
நானே கிறிஸ்து என்று
சொல்லி, அநேகரை
வஞ்சிப்பார்கள்.
6. யுத்தங்களையும்
யுத்தங்களின்
செய்திகளையும்
கேள்விப்படுவீர்கள்;
கலங்காதபடி
எச்சரிக்கையாயிருங்கள்;
இவைகளெல்லாம்
சம்பவிக்கவேண்டியதே;
ஆனாலும் முடிவு
உடனே வராது.
7. ஜனத்துக்கு
விரோதமாய் ஜனமும்,
ராஜ்யத்துக்கு
விரோதமாய் ராஜ்யமும்
எழும்பும்; பஞ்சங்களும்,
கொள்ளைநோய்களும்,
பூமியதிர்ச்சிகளும் பல
இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம்
வேதனைகளுக்கு ஆரம்பம்.
9. அப்பொழுது, உங்களை
உபத்திரவங்களுக்கு
ஒப்புக்கொடுத்து,
உங்களைக்
கொலைசெய்வார்கள்; என்
நாமத்தினிமித்தம் நீங்கள்
சகல ஜனங்களாலும்
பகைக்கப்படுவீர்கள்.
10. அப்பொழுது, அநேகர்
இடறலடைந்து,
ஒருவரையொருவர்
காட்டிக்கொடுத்து,
ஒருவரையொருவர்
பகைப்பார்கள்.
11. அநேகங்
கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி, அநேகரை
வஞ்சிப்பார்கள்.
12. அக்கிரமம்
மிகுதியாவதினால்
அநேகருடைய அன்பு
தணிந்துபோம்.
13. முடிவுபரியந்தம்
நிலைநிற்பவனே
இரட்சிக்கப்படுவான்.
14. ராஜ்யத்தினுடைய
இந்தச் சுவிசேஷம்
பூலோகமெங்குமுள்ள
சகல ஜாதிகளுக்கும்
சாட்சியாகப்
பிரசங்கிக்கப்படும்,
அப்போது முடிவு
வரும்.
15. மேலும்,
பாழாக்குகிற
அருவருப்பைக்
குறித்துத் தானியேல்
தீர்க்கதரிசி
சொல்லியிருக்கிறானே.
வாசிக்கிறவன்
சிந்திக்கக்கடவன். நீங்கள்
அதைப் பரிசுத்த ஸ்தலத்தில்
நிற்கக் காணும்போது,
16. யூதேயாவில்
இருக்கிறவர்கள்
மலைகளுக்கு
ஓடிப்போகக்கடவர்கள்.
17. வீட்டின்மேல்
இருக்கிறவன் தன் வீட்டிலே
எதையாகிலும்
எடுப்பதற்கு
இறங்காதிருக்கக்கடவன்.
18. வயலில் இருக்கிறவன்
தன் வஸ்திரங்களை
எடுப்பதற்குத்
திரும்பாதிருக்கக்கடவன்.
19. அந்நாட்களிலே
கர்ப்பவதிகளுக்கும்
பால்கொடுக்கிறவர்களுக்க
ும் ஐயோ.
20. நீங்கள் ஓடிப்போவது
மாரிகாலத்திலாவது
ஓய்வுநாளிலாவது,
சம்பவியாதபடிக்கு
வேண்டிக்கொள்ளுங்கள்.
21. ஏனெனில்,
உலகமுண்டானதுமுதல்
இதுவரைக்கும்
சம்பவித்திராததும்,
இனிமேலும்
சம்பவியாததுமான
மிகுந்த உபத்திரவம்
அப்பொழுது
உண்டாயிருக்கும்.
22. அந்நாட்கள்
குறைக்கப்படாதிருந்தால்,
ஒருவனாகிலும்
தப்பிப்போவதில்லை;
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளினிமித்தமோ அந்த
நாட்கள் குறைக்கப்படும்.
23. அப்பொழுது, இதோ
கிறிஸ்து இங்கே
இருக்கிறார், அதோ அங்கே
இருக்கிறார் என்று
எவனாகிலும் சொன்னால்
நம்பாதேயுங்கள்.
24. ஏனெனில்,
கள்ளக்கிறிஸ்துக்களும்
கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி, கூடுமானால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளையும்
வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய
அடையாளங்களையும்
அற்புதங்களையும்
செய்வார்கள்.
25. இதோ, முன்னதாக
உங்களுக்கு
அறிவித்திருக்கிறேன்.
26. ஆகையால்: அதோ,
வனாந்தரத்தில்
இருக்கிறார் என்று
சொல்வார்களானால்
புறப்படாதிருங்கள்;
இதோ, அறைவீட்டிற்குள்
இருக்கிறார் என்று
சொல்வார்களானால்
நம்பாதிருங்கள்.
27. மின்னல்
கிழக்கிலிருந்து
தோன்றி மேற்கு
வரைக்கும்
பிரகாசிக்கிறதுபோல,
மனுஷகுமாரனுடைய
வருகையும் இருக்கும்.
28. பிணம் எங்கேயோ
அங்கே கழுகுகள் வந்து
கூடும்.
29. அந்நாட்களின்
உபத்திரவம்
முடிந்தவுடனே,
சூரியன் அந்தகாரப்படும்,
சந்திரன்
ஒளியைக்கொடாதிருக்க
ும், நட்சத்திரங்கள்
வானத்திலிருந்து
விழும், வானத்தின்
சத்துவங்கள் அசைக்கப்படும்.
30. அப்பொழுது,
மனுஷகுமாரனுடைய
அடையாளம் வானத்தில்
காணப்படும்.
அப்பொழுது,
மனுஷகுமாரன்
வல்லமையோடும் மிகுந்த
மகிமையோடும்
வானத்தின் மேகங்கள்மேல்
வருகிறதை
பூமியிலுள்ள சகல
கோத்திரத்தாரும் கண்டு
புலம்புவார்கள்.
31. வலுவாய்த்
தொனிக்கும் எக்காள
சத்தத்தோடே அவர் தமது
தூதர்களை அனுப்புவார்;
அவர்கள் அவரால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்க
ளை வானத்தின் ஒரு
முனை முதற்கொண்டு
மறுமுனைமட்டும்
நாலு
திசைகளிலுமிருந்து
கூட்டிச்சேர்ப்பார்கள்.
32. அத்திமரத்தினால் ஒரு
உவமையைக்
கற்றுக்கொள்ளுங்கள்;
அதிலே இளங்கிளை
தோன்றி,
துளிர்விடும்போது,
வசந்த காலம் சமீபமாயிற்று
என்று அறிவீர்கள்.
33. அப்படியே
இவைகளையெல்லாம்
நீங்கள் காணும்போது,
அவர் சமீபமாய் வாசலருகே
வந்திருக்கிறார் என்று
அறியுங்கள்.
34. இவைகளெல்லாம்
சம்பவிக்குமுன்னே இந்தச்
சந்ததி
ஒழிந்துபோகாதென்று,
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
35. வானமும் பூமியும்
ஒழிந்துபோம், என்
வார்த்தைகளோ
ஒழிந்துபோவதில்லை.
36. அந்த நாளையும் அந்த
நாழிகைகளையும் என்
பிதா ஒருவர் தவிர
மற்றொருவனும்
அறியான்;
பரலோகத்திலுள்ள
தூதர்களும் அறியார்கள்.
37. நோவாவின் காலத்தில்
எப்படி நடந்ததோ,
அப்படியே
மனுஷகுமாரன் வரும்
காலத்திலும் நடக்கும்.
38. எப்படியெனில்,
ஜலப்பிரளயத்துக்கு
முன்னான காலத்திலே
நோவா பேழைக்குள்
பிரவேசிக்கும் நாள்
வரைக்கும், ஜனங்கள்
புசித்தும் குடித்தும்,
பெண்கொண்டும்
பெண்கொடுத்தும்,
39. ஜலப்பிரளயம் வந்து
அனைவரையும்
வாரிக்கொண்டுபோகும
ட்டும்
உணராதிருந்தார்கள்;
அப்படியே
மனுஷகுமாரன்
வருங்காலத்திலும்
நடக்கும்.
40. அப்பொழுது,
இரண்டுபேர் வயலில்
இருப்பார்கள்; ஒருவன்
ஏற்றுக்கொள்ளப்படுவான்,
ஒருவன்
கைவிடப்படுவான்.
41. இரண்டு ஸ்திரீகள்
ஏந்திரம்
அரைத்துக்கொண்டிருப்ப
ார்கள்; ஒருத்தி
ஏற்றுக்கொள்ளப்படுவாள்,
ஒருத்தி
கைவிடப்படுவாள்.
42. உங்கள் ஆண்டவர் இன்ன
நாழிகையிலே
வருவாரென்று நீங்கள்
அறியாதிருக்கிறபடியி
னால் விழித்திருங்கள்.
43. திருடன் இன்ன
ஜாமத்தில்
வருவானென்று
வீட்டெஜமான்
அறிந்திருந்தால், அவன்
விழித்திருந்து, தன்
வீட்டைக்
கன்னமிடவொட்டானென்று
அறிவீர்கள்.
44. நீங்கள் நினையாத
நாழிகையிலே
மனுஷகுமாரன் வருவார்;
ஆதலால், நீங்களும்
ஆயத்தமாயிருங்கள்.
45. ஏற்றவேளையிலே தன்
வேலைக்காரருக்குப்
போஜனங்கொடுத்து
அவர்களை
விசாரிக்கும்படி
எஜமான் வைத்த
உண்மையும்
விவேகமுமுள்ள
ஊழியக்காரன் யாவன்?
46. எஜமான் வரும்போது
அப்படிச்செய்கிறவனாகக்
காணப்படுகிற
ஊழியக்காரனே
பாக்கியவான்.
47. தன் ஆஸ்திகள்
எல்லாவற்றின்மேலும்
அவனை
விசாரணைக்காரனாக
வைப்பானென்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
48. அந்த ஊழியக்காரனோ
பொல்லாதவனாயிருந்து:
என் ஆண்டவன் வர நாள்
செல்லும் என்று தன்
உள்ளத்திலே
சொல்லிக்கொண்டு,
49. தன் உடன்வேலைக்காரரை
அடிக்கத் தொடங்கி,
வெறியரோடே
புசிக்கவும்
குடிக்கவும்
தலைப்பட்டால்,
50. அந்த ஊழியக்காரன்
நினையாத நாளிலும்,
அறியாத
நாழிகையிலும்,
அவனுடைய எஜமான்
வந்து,
51. அவனைக் கடினமாய்த்
தண்டித்து,
மாயக்காரரோடே
அவனுக்குப் பங்கை
நியமிப்பான்; அங்கே
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக