செவ்வாய், 1 நவம்பர், 2016

மத்தேயு அதிகாரம் 22

1. இயேசு மறுபடியும்
அவர்களோடே
உவமைகளாய்ப் பேசிச்
சொன்னது என்னவென்றால்:
2. பரலோகராஜ்யம் தன்
குமாரனுக்குக்
கலியாணஞ்செய்த ஒரு
ராஜாவுக்கு
ஒப்பாயிருக்கிறது.
3. அழைக்கப்பட்டவர்களைக்
கலியாணத்திற்கு
வரச்சொல்லும்படி அவன்
தன் ஊழியக்காரரை
அனுப்பினான்; அவர்களோ
வர
மனதில்லாதிருந்தார்கள்.
4. அப்பொழுது அவன்
வேறு ஊழியக்காரரை
அழைத்து: நீங்கள் போய்,
இதோ, என் விருந்தை
ஆயத்தம்பண்ணினேன், என்
எருதுகளும் கொழுத்த
ஜெந்துக்களும்
அடிக்கப்பட்டது, எல்லாம்
ஆயத்தமாயிருக்கிறது;
கலியாணத்திற்கு
வாருங்கள் என்று
அழைக்கப்பட்டவர்களுக்குச்
சொல்லுங்களென்று
அனுப்பினான்.
5. அழைக்கப்பட்டவர்களோ
அதை அசட்டைபண்ணி,
ஒருவன் தன் வயலுக்கும்,
ஒருவன் தன்
வியாபாரத்துக்கும்
போய்விட்டார்கள்.
6. மற்றவர்கள் அவன்
ஊழியக்காரரைப்
பிடித்து,
அவமானப்படுத்தி,
கொலைசெய்தார்கள்.
7. ராஜா அதைக்
கேள்விப்பட்டு,
கோபமடைந்து, தன்
சேனைகளை அனுப்பி,
அந்தக் கொலைபாதகரை
அழித்து, அவர்கள்
பட்டணத்தையும்
சுட்டெரித்தான்.
8. அப்பொழுது, அவன் தன்
ஊழியக்காரரை நோக்கி:
கலியாண விருந்து
ஆயத்தமாயிருக்கிறது,
அழைக்கப்பட்டவர்களோ
அதற்கு
அபாத்திரராய்ப்போனார்கள்
.
9. ஆகையால், நீங்கள்
வழிச்சந்திகளிலே போய்,
காணப்படுகிற
யாவரையும்
கலியாணத்திற்கு
அழைத்துக்கொண்டு
வாருங்கள் என்றான்.
10. அந்த ஊழியக்காரர்
புறப்பட்டு, வழிகளிலே
போய், தாங்கள் கண்ட நல்லார்
பொல்லார் யாவரையும்
கூட்டிக்கொண்டுவந்தார்க
ள்; கலியாணசாலை
விருந்தாளிகளால்
நிறைந்தது.
11. விருந்தாளிகளைப்
பார்க்கும்படி ராஜா
உள்ளே
பிரவேசித்தபோது,
கலியாண வஸ்திரம்
தரித்திராத
ஒருமனுஷனை அங்கே
கண்டு:
12. சிநேகிதனே, நீ
கலியாண
வஸ்திரமில்லாதவனாய்
இங்கே எப்படி வந்தாய்
என்று கேட்டார். அதற்கு
அவன் பேசாமலிருந்தான்.
13. அப்பொழுது, ராஜா
பணிவிடைக்காரரை
நோக்கி: இவனைக்
கையுங்காலும்
கட்டிக்கொண்டுபோய்,
அழுகையும்
பற்கடிப்பும்
உண்டாயிருக்கிற
புறம்பான இருளிலே
போடுங்கள் என்றான்.
14. அந்தப்படியே,
அழைக்கப்பட்டவர்கள் அநேகர்,
தெரிந்துக்கொள்ளப்பட்டவர்
களோ சிலர் என்றார்.
15. அப்பொழுது,
பரிசேயர் போய்,
பேச்சிலே அவரை
அகப்படுத்தும்படி
யோசனைபண்ணி,
16. தங்கள் சீஷரையும்
ஏரோதியரையும்
அவரிடத்தில்
அனுப்பினார்கள். அவர்கள்
வந்து: போதகரே, நீர்
சத்தியமுள்ளவரென்றும்,
தேவனுடைய மார்க்கத்தைச்
சத்தியமாய்ப்
போதிக்கிறவரென்றும்,
நீர் முகதாட்சிணியம்
இல்லாதவராகையால்
எவனைக்குறித்தும்
உமக்குக்
கவையில்லையென்றும் (
அக்கறையில்லையென்றும்
) அறிந்திருக்கிறோம்.
17. ஆதலால், உமக்கு
எப்படித் தோன்றுகிறது?
இராயனுக்கு
வரிகொடுக்கிறது
நியாயமோ, அல்லவோ?
அதை எங்களுக்குச்
சொல்லும் என்று
கேட்டார்கள்.
18. இயேசு அவர்கள்
துர்க்குணத்தை அறிந்து:
மாயக்காரரே, நீங்கள் என்னை
ஏன் சோதிக்கிறீர்கள்?
19. வரிக்காசை எனக்குக்
காண்பியுங்கள் என்றார்;
அவர்கள் ஒரு பணத்தை
அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
20. அப்பொழுது அவர்:
இந்தச் சுரூபமும்
மேலெழுத்தும்
யாருடையது என்று
கேட்டார்.
21. இராயனுடையது
என்றார்கள். அதற்கு அவர்:
அப்படியானால்,
இராயனுடையதை
இராயனுக்கும்,
தேவனுடையதை
தேவனுக்கும்
செலுத்துங்கள் என்றார்.
22. அவர்கள் அதைக்கேட்டு
ஆச்சரியப்பட்டு அவரை
விட்டுப்
போய்விட்டார்கள்.
23. உயிர்த்தெழுதல் இல்லை
என்று சாதிக்கிற
சதுசேயர் அன்றையத்தினம்
அவரிடத்தில் வந்து:
24. போதகரே, ஒருவன்
சந்தானம் இல்லாமல்
இறந்துபோனால்,
அவனுடைய சகோதரன்
அவன் மனைவியை
விவாகம் பண்ணி, தன்
சகோதரனுக்குச் சந்தானம்
உண்டாக்கவேண்டும் என்று
மோசே சொன்னாரே.
25. எங்களுக்குள்ளே
சகோதரர் ஏழு பேர்
இருந்தார்கள்; மூத்தவன்
விவாகம்பண்ணி, மரித்து,
சந்தானமில்லாததினால்
தன் மனைவியைத் தன்
சகோதரனுக்கு
விட்டுவிட்டுப்போனான்.
26. அப்படியே இரண்டாம்
மூன்றாம் சகோதரன் முதல்
ஏழாம் சகோதரன் வரைக்கும்
செய்தார்கள்.
27. எல்லாருக்கும் பின்பு
அந்த ஸ்திரீயும்
இறந்துபோனாள்.
28. ஆகையால்,
உயிர்த்தெழுதலில்,
அவ்வேழுபேரில்
எவனுக்கு அவள்
மனைவியாயிருப்பாள்?
அவர்களெல்லாரும் அவளை
விவாகம்
பண்ணியிருந்தார்களே
என்று கேட்டார்கள்.
29. இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: நீங்கள்
வேதவாக்கியங்களையும்
தேவனுடைய
வல்லமையையும்
அறியாமல் தப்பான
எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
30. உயிர்த்தெழுதலில்,
கொள்வனையும்
கொடுப்பனையும்
இல்லை; அவர்கள்
பரலோகத்திலே
தேவதூதரைப்போல்
இருப்பார்கள்;
31. மேலும் மரித்தோர்
உயிர்த்தெழுதலைப்பற்றி:
நான் ஆபிரகாமின்
தேவனும், ஈசாக்கின்
தேவனும், யாக்கோபின்
தேவனுமாயிருக்கிறேன்
என்று தேவனால்
உங்களுக்கு
உரைக்கப்பட்டிருக்கிறதை
நீங்கள்
வாசிக்கவில்லையா?
32. தேவன் மரித்தோருக்கு
தேவனாயிராமல்,
ஜீவனுள்ளோருக்கு
தேவனாயிருக்கிறார்
என்றார்.
33. ஜனங்கள் இதைக் கேட்டு,
அவருடைய
போதகத்தைக்குறித்து
ஆச்சரியப்பட்டார்கள்.
34. அவர் சதுசேயரை
வாயடைத்தார் என்று
பரிசேயர் கேள்விப்பட்டு,
அவரிடத்தில்
கூடிவந்தார்கள்.
35. அவர்களில்
நியாயசாஸ்திரி ஒருவன்
அவரைச் சோதிக்கும்படி:
36. போதகரே,
நியாயப்பிரமாணத்திலே
எந்தக் கற்பனை
பிரதானமானது என்று
கேட்டான்.
37. இயேசு அவனை
நோக்கி: உன் தேவனாகிய
கர்த்தரிடத்தில் உன் முழு
இருதயத்தோடும், உன்
முழு ஆத்துமாவோடும்
உன் முழு மனதோடும்
அன்புகூருவாயாக;
38. இது முதலாம் பிரதான
கற்பனை.
39. இதற்கு
ஒப்பாயிருக்கிற
இரண்டாம் கற்பனை
என்னவென்றால்,
உன்னிடத்தில் நீ
அன்புகூருவதுபோலப்
பிறனிடத்திலும்
அன்புகூருவாயாக
என்பதே.
40. இவ்விரண்டு
கற்பனைகளிலும்
நியாயப்பிரமாணம்
முழுமையும்
தீர்க்கதரிசனங்களும்
அடங்கியிருக்கிறது
என்றார்.
41. பரிசேயர்
கூடியிருக்கையில்,
இயேசு அவர்களை
நோக்கி:
42.
கிறிஸ்துவைக்குறித்து
நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள், அவர்
யாருடைய குமாரன்?
என்று கேட்டார். அவர்
தாவீதின் குமாரன்
என்றார்கள்.
43. அதற்கு அவர்:
அப்படியானால், தாவீது
பரிசுத்த ஆவியினாலே
அவரை ஆண்டவர் என்று
சொல்லியிருக்கிறது
எப்படி?
44. நான் உம்முடைய
சத்துருக்களை உமக்குப்
பாதபடியாக்கிப்போடும்
வரைக்கும் நீர் என்னுடைய
வலது பாரிசத்தில்
உட்காரும் என்று கர்த்தர் என்
ஆண்டவரோடே சொன்னார்
என்று
சொல்லியிருக்கிறானே.
45. தாவீது அவரை ஆண்டவர்
என்று சொல்லியிருக்க,
அவனுக்கு அவர்
குமாரனாயிருப்பது
எப்படி என்றார்.
46. அதற்கு மாறுத்தரமாக
ஒருவனும் அவருக்கு
ஒரு வார்த்தையும்
சொல்லக்கூடாதிருந்தது.
அன்றுமுதல் ஒருவனும்
அவரிடத்தில்
கேள்விகேட்கத்
துணியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக