3) ஆசிரியர் நம்பிய சங்கதிகள் உண்மை தானா?
பரிசுத்த ஆவியானவரே ஆசிரியரை எழுத்து பணியின் போது பிழைகளில் இருந்து
காத்து வழி நடத்தினார், எனவே வேத வாக்கியங்களில் எல்லாம் உண்மையானவை.
இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. இது எவ்வாறு உறுதியாகிறது?
அ) இயேசு வேத வாக்கியங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார்
முதலாவதாக, இயேசு வேத வசனங்கள் எல்லாம் தவறாதவை என்கிறார் (யோவான் 10:35)
ஆ) வர்ணனைகள் காணப்படுவது இல்லை
தாமரை பற்றிய கிரேக்க புராண கதை- மல்லிகை பூவிற்கும், ரோஜா பூவிற்கும்
யார் தங்களில் அழகு என்ற வாதம் ஒரு முறை பிறந்தது. பலமணி நேரம் அடித்து
கொண்ட மல்லிகையும் ரோஜாவும் இயற்கையிடம் சென்று தங்கள் வழக்கை கூறி
தீர்ப்பளிக்குமாறு வேண்டின. இயற்கை தேவதையால் தீர்மானிக்க இயலவில்லை.
எனவே, ரோஜா மலரை எடுத்து அதில் மல்லிகையின் மணத்தை ஊற்றி 'தாமரை' என்ற
அழகிய பூவை படைத்தாள். இறுதியாக தாமரையே அழகில் சிறந்தது என்று
தீர்ப்பளிக்கிறாள்.
இது போன்ற வர்ணனைகளே அக்கால வேத நூல்களில் பெருமளவு
காணப்படுகின்றன. எனினும் பைபிளில் அத்தகைய வர்ணனைகள்
காணப்படுவதில்லை.
இ) தவறுகள் சுட்டிகாட்டப்படுகின்றன
பைபிள் நம்பகத்தன்மை பெற்று விளங்குவதற்கு இன்னொரு காரணம் அதில்
காணப்படும் தீய நிகழ்வுகள். நோவா. தாவீது, லோத்து... என பலரின்
வாழ்வுகளில் நிகழ்ந்த தவறுகளையும் எடுத்துரைகிறது. ஒருவரின் வாழ்வில்
நிகழ்ந்த நன்மைகளை மட்டுமே எடுத்துக்கூறும் வகையில் பைபிள்
காணப்படுவதில்லை. உள்ளதை உள்ளதாக சொல்கிறது...
ஈ) அறிவியல் வரலாற்று சாத்தியங்கள்
பைபிள் மனித படைப்பை பற்றி கூறும் போது ஆதாம் ஏவாள் வருகின்றனர். இன்று
உலகில் வாழும் அனைத்து மக்களும் மறைந்த ஒரே ஒரு பெண்ணின் வம்சவாரிசுகளே
என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது ( இழைமணியப் பழையோள்).
இக்கண்டுபிடிப்பு பைபிள் கூறும் மனித படைப்பை
சாத்தியப்படுத்துகிறது.
அதே போல, மெசபொத்தொமிய பகுதியில் பெருவெள்ளம் நிகழ்ந்ததற்கான தடயங்கள்
மிகுதியாக காணப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நோவா
சரிதத்தை பிரதலிப்பதாக உள்ளன. யூதம் அன்றி பிற மெசபொத்தோமிய
மார்க்கங்களிலும் வெள்ளப்பெருக்கு குறித்து செய்திகள் மிகுதியாக
காணப்படுகின்றன. கருங்கடலில் ஆற்றில் மட்டுமே வாழக்கூடிய நத்தை வகைகளின்
ஓடுகள் பெருமளவு குவிந்துள்ளன. பெருவெள்ளம் நிகழ்ந்தாலே இது சாத்தியம்
என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ( FOX NEWS)
பாபேல் கோபுரம் குறித்த செய்திகள் மன்னர் நேபுகாத்நேச்சார் பொறித்த
கல்வெட்டு தடயங்களோடு பொருந்துகின்றன. நாகரீகங்கள் நதிகளை சுற்றியே
பிறந்தன என்ற வரலாற்று கணிப்பு பைபிளுடன் பொருந்துகிறது. முதலாவதாக
இதெக்கேல், ஐபிராத்து நதிகளை சுற்றி மக்கள் குடி அமர்ந்தனர்
(மெசபொத்தோமிய நாகரீகம்) என்ற வரலாற்று கணிப்பு பைபிளின் ஏதேன் தோட்ட
செய்திகளோடு ஒத்து வருகிறது. நைல் நதியை சுற்றி எகிப்திய நாகரீகம் பிறந்த
கதையையும் பைபிளில் காணலாம். வழிபாட்டுக்கு பின் விவசாயம், அதன் பின்
கால்நடை வளர்ப்பு, வணிகம், பண்டமாற்று முறை... என பைபிள் கூறும் அதே
நாகரீக வளர்ச்சி இன்றைய வரலாற்று கணிப்புகளோடு பொருந்துவதை கூட காணலாம்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு சரிதங்களில் வருகின்ற பல
சம்பவங்கள், பாரம்பரியங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆபிரகாம் 'ஊர்'
என்ற பட்டணத்தில் இருந்து ஆரான் என்ற பட்டணத்திற்கு குடிபெயர்ந்ததாக
பைபிள் கூறுகிறது. ஊரிலிருந்து ஆரானுக்கு மக்கள் பயணம் மேற்கொண்டதாக
பழங்கால மெசபொத்தொமிய கல்வெட்டுகள் பல கூறுகின்றன. பைபிளில் காணப்படும்
பல ஊர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத
நூலாக பைபிள் திகழ்கிறது.இத்தகைய சரித்திர செரிவை வேறெந்த பண்டைய
வேதங்களிலும் காணமுடியாது.
ஈ) அதிசய பிணைப்பு:
அறுபத்தி ஆறு நூல்களை உள்ளடக்கிய நூலாக பைபிள் உள்ளது. 1500 வருடங்களாக
40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் பைபிள் எழுதப்பட்டுள்ளது. ஆனால்
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேசம் வரை ஒரே கோர்வையில் செய்திகள்
அமைந்திருப்பதை காணலாம். வெளிபடுத்தின விசேசத்தில் காணப்படும் வசனம்
ஒன்றை ஆதியாகமம் விளக்கும். ஆதியாகமத்தில் உள்ள வசனத்தை பவுலின் நிருபம்
விளக்கும்.
<b>"இனி மாம்சமானவைகள் எல்லாம் ஜலப் பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவது
இல்லை என்றும், பூமியை அழிக்க இனி ஜலப் பிரளயம் உண்டாவதில்லை என்றும்,
உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். அன்றியும் தேவன்:
எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவ
ஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கு என்று நான் செய்கிற
உடன்படிக்கையின் அடையாளமாக: நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது
எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாய் இருக்கும்" -
ஆதியாகமம் 9:11-13
"அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச்
சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்....அந்தச்
சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது"
- வெளி 4:2,3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக