செவ்வாய், 1 நவம்பர், 2016

மத்தேயு அதிகாரம் 23

1. பின்பு இயேசு
ஜனங்களையும் தம்முடைய
சீஷர்களையும் நோக்கி:
2. வேதபாரகரும்,
பரிசேயரும்
மோசேயினுடைய
ஆசனத்தில்
உட்கார்ந்திருக்கிறார்கள்;
3. ஆகையால், நீங்கள்
கைக்கொள்ளும்படி
அவர்கள் உங்களுக்குச்
சொல்லுகிற யாவையும்
கைக்கொண்டு
செய்யுங்கள்; அவர்கள்
செய்கையின்படியோ
செய்யாதிருங்கள்;
ஏனெனில், அவர்கள்
சொல்லுகிறார்கள்,
சொல்லியும்
செய்யாதிருக்கிறார்கள்.
4. சுமப்பதற்கரிய பாரமான
சுமைகளைக்கட்டி
மனுஷர் தோள்களின்மேல்
சுமத்துகிறார்கள்;
தாங்களோ ஒரு
விரலினாலும்
அவைகளைத்
தொடமாட்டார்கள்.
5. தங்கள்
கிரியைகளெல்லாம்
மனுஷர்
காணவேண்டுமென்று
செய்கிறார்கள்; தங்கள்
காப்புநாடாக்களை
அகலமாக்கி, தங்கள்
வஸ்திரங்களின்
தொங்கல்களைப்
பெரிதாக்கி,
6. விருந்துகளில்
முதன்மையான
இடங்களையும், ஜெப
ஆலயங்களில்
முதன்மையான
ஆசனங்களையும்,
7. சந்தைவெளிகளில்
வந்தனங்களையும்,
மனுஷரால் ரபீ, ரபீ என்று
அழைக்கப்படுவதையும்
விரும்புகிறார்கள்:
8. நீங்களோ ரபீ
என்றழைக்கப்படாதிருங்கள்;
கிறிஸ்து ஒருவரே
உங்களுக்குப்
போதகராயிருக்கிறார்;
நீங்கள் எல்லாரும்
சகோதரராயிருக்கிறீர்கள்.
9. பூமியிலே
ஒருவனையும் உங்கள்
பிதா என்று
சொல்லாதிருங்கள்;
பரலோகத்திலிருக்கிற
ஒருவரே உங்களுக்குப்
பிதாவாயிருக்கிறார்.
10. நீங்கள் குருக்கள் என்றும்
அழைக்கப்படாதிருங்கள்;
கிறிஸ்து ஒருவரே
உங்களுக்குக்
குருவாயிருக்கிறார்.
11. உங்களில்
பெரியவனாயிருக்கிறவ
ன் உங்களுக்கு
ஊழியக்காரனாயிருக்கக்க
டவன்.
12. தன்னை உயர்த்துகிறவன்
தாழ்த்தப்படுவான், தன்னைத்
தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான்.
13. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
மனுஷர்
பிரவேசியாதபடி
பரலோகராஜ்யத்தைப்
பூட்டிப்போடுகிறீர்கள்;
நீங்கள் அதில்
பிரவேசிக்கிறதுமில்ல
ை பிரவேசிக்கப்
போகிறவர்களைப்
பிரவேசிக்கவிடுகிறது
மில்லை.
14. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
பார்வைக்காக நீண்ட
ஜெபம்பண்ணி,
விதவைகளின் வீடுகளைப்
பட்சித்துப்போடுகிறீர்கள்;
இதினிமித்தம் அதிக
ஆக்கினையை அடைவீர்கள்.
15. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
ஒருவனை உங்கள்
மார்க்கத்தானாக்கும்படி
சமுத்திரத்தையும்
பூமியையும்
சுற்றித்திரிகிறீர்கள்;
அவன் உங்கள்
மார்க்கத்தானானபோது
அவனை உங்களிலும்
இரட்டிப்பாய் நரகத்தின்
மகனாக்குகிறீர்கள்.
16. குருடரான
வழிகாட்டிகளே!
உங்களுக்கு ஐயோ,
எவனாகிலும்
தேவாலயத்தின்பேரில்
சத்தியம்பண்ணினால்
அதினால்
ஒன்றுமில்லையென்றும்,
எவனாகிலும்
தேவாலயத்தின்
பொன்னின்பேரில்
சத்தியம்பண்ணினால் அவன்
கடனாளியென்றும்
சொல்லுகிறீர்கள்.
17. மதிகேடரே, குருடரே!
எது முக்கியம்?
பொன்னோ, பொன்னைப்
பரிசுத்தமாக்குகிற
தேவாலயமோ?
18. மேலும், எவனாகிலும்
பலிபீடத்தின் பேரில்
சத்தியம்பண்ணினால்
அதினால்
ஒன்றுமில்லையென்றும்,
எவனாகிலும் அதின்மேல்
இருக்கிற
காணிக்கையின்மேல்
சத்தியம்பண்ணினால் அவன்
கடனாளி என்றும்
சொல்லுகிறீர்கள்.
19. மதிகேடரே, குருடரே!
எது முக்கியம்?
காணிக்கையோ,
காணிக்கையைப்
பரிசுத்தமாக்குகிற
பலிபீடமோ?
20. ஆகையால்,
பலிபீடத்தின்பேரில்
சத்தியம் பண்ணுகிறவன்
அதின் பேரிலும்
அதின்மேலுள்ள
எல்லாவற்றின்பேரிலும்
சத்தியம்பண்ணுகிறான்.
21. தேவாலயத்தின்பேரில்
சத்தியம்பண்ணுகிறவன்
அதின்பேரிலும் அதில்
வாசமாயிருக்கிறவர்பேர
ிலும்
சத்தியம்பண்ணுகிறான்.
22. வானத்தின் பேரில்
சத்தியம் பண்ணுகிறவன்
தேவனுடைய
சிங்காசனத்தின்
பேரிலும் அதில்
வீற்றிருக்கிறவர்
பேரிலும் சத்தியம்
பண்ணுகிறான்.
23. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ, நீங்கள்
ஒற்தலாமிலும்
வெந்தயத்திலும்
சீரகத்திலும் தசமபாகம்
செலுத்தி,
நியாயப்பிரமாணத்தில்
கற்பித்திருக்கிற
விசேஷித்தவைகளாகிய
நீதியையும்
இரக்கத்தையும்
விசுவாசத்தையும்
விட்டுவிட்டீர்கள்;
இவைகளையும்
செய்யவேண்டும்,
அவைகளையும்
விடாதிருக்கவேண்டும்.
24. குருடரான
வழிகாட்டிகளே,
கொசுகில்லாதபடி
வடிகட்டி, ஒட்டகத்தை
விழுங்குகிறவர்களாயிர
ுக்கிறீர்கள்.
25. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
போஜனபானபாத்திரங்களி
ன் வெளிப்புறத்தைச்
சுத்தமாக்குகிறீர்கள்;
உட்புறத்திலோ அவைகள்
கொள்ளையினாலும்,
அநீதத்தினாலும்
நிறைந்திருக்கிறது.
26. குருடனான
பரிசேயனே!
போஜனபானபாத்திரங்களி
ன் வெளிப்புறம்
சுத்தமாகும்படி
அவைகளின் உட்புறத்தை
முதலாவது சுத்தமாக்கு.
27. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ,
வெள்ளையடிக்கப்பட்ட
கல்லறைகளுக்கு
ஒப்பாயிருக்கிறீர்கள்.,
அவைகள் புறம்பே
அலங்காரமாய்க்
காணப்படும், உள்ளேயோ
மரித்தவர்களின்
எலும்புகளினாலும் சகல
அசுத்தத்தினாலும்
நிறைந்திருக்கும்.
28. அப்படியே நீங்களும்
மனுஷருக்கு நீதிமான்கள்
என்று புறம்பே
காணப்படுகிறீர்கள்;
உள்ளத்திலோ
மாயத்தினாலும்
அக்கிரமத்தினாலும்
நிறைந்திருக்கிறீர்கள்.
29. மாயக்காரராகிய
வேதபாரகரே! பரிசேயரே!
உங்களுக்கு ஐயோ, நீங்கள்
தீர்க்கதரிசிகளின்
கல்லறைகளைக் கட்டி,
நீதிமான்களின்
சமாதிகளைச்
சிங்காரித்து,
30. எங்கள் பிதாக்களின்
நாட்களில்
இருந்தோமானால்,
அவர்களோடே நாங்கள்
தீர்க்கதரிசிகளின்
இரத்தப்பழிக்கு
உடன்பட்டிருக்கமாட்டோம்
என்கிறீர்கள்.
31. ஆகையால்,
தீர்க்கதரிசிகளைக் கொலை
செய்தவர்களுக்குப்
புத்திரராயிருக்கிறீர்கள்
என்று உங்களைக்குறித்து
நீங்களே
சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
32. நீங்களும் உங்கள்
பிதாக்களின் அக்கிரம
அளவை நிரப்புங்கள்.
33. சர்ப்பங்களே,
விரியன்பாம்புக்குட்டிக
ளே! நரகாக்கினைக்கு
எப்படித்
தப்பித்துக்கொள்வீர்கள்?
34. ஆகையால், இதோ,
தீர்க்கதரிசிகளையும்
ஞானிகளையும்
வேதபாரகரையும்
உங்களிடத்திலே
அனுப்புகிறேன்;
அவர்களில் சிலரைக்
கொன்று சிலுவைகளில்
அறைவீர்கள், சிலரை உங்கள்
ஆலயங்களின் வாரினால்
அடித்து, ஊருக்கு ஊர்
துன்பபடுத்துவீர்கள்.
35. நீதிமானாகிய
ஆபேலின் இரத்தம் முதல்
தேவாலயத்துக்கும்
பலிபீடத்துக்கும் நடுவே
நீங்கள் கொலைசெய்த
பரகியாவின்
குமாரனாகிய
சகரியாவின்
இரத்தம்வரைக்கும்,
பூமியின்மேல்
சிந்தப்பட்ட நீதிமான்களின்
இரத்தப்பழியெல்லாம்
உங்கள்மேல் வரும்படியாக
இப்படிச் செய்வீர்கள்.
36. இவைகளெல்லாம் இந்தச்
சந்ததியார்மேல்
வருமென்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
37. எருசலேமே,
எருசலேமே,
தீர்க்கதரிசிகளைக்
கொலைசெய்து,
உன்னிடத்தில்
அனுப்பப்பட்டவர்களைக்
கல்லெறிகிறவளே!
கோழி தன் குஞ்சுகளைத்
தன் சிறகுகளின்கீழே
கூட்டிச்
சேர்த்துக்கொள்ளும்வண்ண
மாக நான் எத்தனைதரமோ
உன் பிள்ளைகளைக்
கூட்டிச்சேர்த்துக்கொள்ள
மனதாயிருந்தேன்;
உங்களுக்கோ
மனதில்லாமற்போயிற்று.
38. இதோ, உங்கள் வீடு
உங்களுக்குப்
பாழாக்கிவிடப்படும்.
39. கர்த்தருடைய
நாமத்தினாலே
வருகிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
என்று நீங்கள்
சொல்லுமளவும்
இதுமுதல் என்னைக்
காணாதிருப்பீர்கள் என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக