கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு
முன்பு... கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை
பொதுவாகப்
பார்த்துவிடலாம்.
பெண்களை உள்ளே அனுமதிக்காத, 'எல்லைகளை' கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி
மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் ஜில்லா
தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி. ராமநாதபுர சமுத்திரக்
கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.
ஆனால்... இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும்
இம்மடத்துக்கு வரலாம். அதாவது,'எல்லை தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.
இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம்
பார்க்கலாமா?
"பரமாத்மனே யேர் ரக்தஹவிரக்தோ அபரமாத்மநீ"...என்று போகும் வரிகள்,
பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன.
அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசைவைப்பவன்
பக்தன் கிடையாது.
இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்... பெண்ணோடு தேக சம்பந்தம்
கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத... லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது
கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.
இப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு
வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் 'பக்த கோடிகளே' என
அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நம்மில் 'பக்தர்கள்' எத்தனை பேர்
இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல
பக்தர்கள்(!) கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால்,
இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது காரணம்?
"அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது..." என்று
ஸ்மிருதி வகுத்த விதி அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும்
கூடாது என்றது தொடர்விதி.
இப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு 'சிறப்பாக' நடந்து
கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண
மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல
விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.
அப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல
வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார். (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர
ஆரம்பித்துவிட்டன). இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின்
பக்தர்கள் ஆனார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே
கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார்.
இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று
அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே
கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.
'நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்' என
அவர்களும்... இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்
பட்டவர்கள்' என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க...
இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும்
நடந்து கொண்டிருந்தன.
மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம
தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான்
செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதி... பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச்
சென்றதாலும், வெளியூர்களுக்குச் சென்று வந்ததாலும் மகா பெரியவரின்
ப்ராபகண்டா பெருகியது.
அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான பூரி சங்கராச்சாரியாரின் மதராஸ்
ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன்
எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு
சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.
"கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் பூரி
சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை
அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே
பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என
சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா
பெரியவர்.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா
பெரியவர் 'தேசாந்திரம்' எனப்படும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும்
போது... 'கும்பகோணம் மடாதிபதி வருகை...' என்றே அன்றைய செய்தித்தாள்கள்
பிரசுரம் செய்தன.
இதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை
ஒதுக்கப் பார்க்கிறார்கள்.நாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில்,
பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம்' என
முடிவெடுக்கப்பட்டது. கும்பகோண மடம் மறுபடியும்... காஞ்சிக்கு வந்த கதை
இப்போது புரிந்துவிட்டதா?
சரி... மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை
கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தூய்மையான தோழமையில்
எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு, சேர்ந்து மறுபடியும்
அனுபவித்துப் பார்க்கட்டுமா?
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
புதன், 21 செப்டம்பர், 2016
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 20
காஞ்சி மடமா? கும்பகோண மடமா?
சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்...
காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தானே
கேட்கிறீர்கள்.
மறுபடியும் மடத்தின் வாசல். "நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்... எந்த
வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம,
அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப்
பட்டிருக்கிறார்கள்)
இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம்
கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால்
மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்."
"நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே... நாங்கள் உள்ளேவர
சாத்தியப்படாதா?" என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள்
கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.
இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும்...
திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி
சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில்
சிலர்... முறையாக தீட்சை பெற்று... சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை
பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.
அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி
குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.
"நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே
செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்கு பெறவேண்டும்" குடுமியை
முடிந்து கொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.
"பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு
மடத்துக்குள் சஞ்சரிப்போம்" என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள்
எதிரொலித்துக் கொண்டிருந்த போது தான்... ஒரே ஒரு குரல் வித்தியாசமாய்
வெளிப்பட்டது.
"நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய
வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு
பாத்யப்படுத்தியிருக் கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை
ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே..."
இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க... அன்று முதல் சிருங்கேரி மடத்தை
பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை
ஸ்தாபித்தனர்.
தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்ஙகர
மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை
பரிபாலித்தனர். இம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல... என தமிழகத்தின்
பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க... காலதேவன் பயணத்தில் காஞ்சியில்
ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.
கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ்
பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக்
கருதப்பட்டது.அதாவது... அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, பூரி,
துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில்
இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.
அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம்
செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப
சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை
அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.
கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான
தோற்றம் கொண்டது காஞ்சிமடம். சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை
பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத
அளவுக்கு எளிமையாக இருந்தது.
மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும்...
உபந்யாசங்களுக்காகவும்... கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும்
இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.
அப்போது தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின்
உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை
கொண்டனர் நாயக்க மன்னர்கள். சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக
விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான். அறமும், பக்தி நெறியும்,
ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என
விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி
மடத்தின் புகழ்.
அப்படிப்பட்ட ஒரு மடம்... ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில்
அமையுங்கள்.எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். அறமும், பக்தியும்
தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட,
ஆணையிடப்பட்டது.
உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு
ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில்
ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.
காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால்
பீடுநடை போட்டது புதிய மடம். சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர்
மன்னர்கள். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70
ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.
எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இவ்வளவு
பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என
சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு... கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும்
வந்த கதையைப் பார்ப்போமா...?
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)
காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தானே
கேட்கிறீர்கள்.
மறுபடியும் மடத்தின் வாசல். "நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்... எந்த
வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம,
அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப்
பட்டிருக்கிறார்கள்)
இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம்
கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால்
மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்."
"நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே... நாங்கள் உள்ளேவர
சாத்தியப்படாதா?" என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள்
கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.
இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும்...
திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி
சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில்
சிலர்... முறையாக தீட்சை பெற்று... சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை
பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.
அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி
குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.
"நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே
செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்கு பெறவேண்டும்" குடுமியை
முடிந்து கொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.
"பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு
மடத்துக்குள் சஞ்சரிப்போம்" என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள்
எதிரொலித்துக் கொண்டிருந்த போது தான்... ஒரே ஒரு குரல் வித்தியாசமாய்
வெளிப்பட்டது.
"நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய
வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு
பாத்யப்படுத்தியிருக் கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை
ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே..."
இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க... அன்று முதல் சிருங்கேரி மடத்தை
பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை
ஸ்தாபித்தனர்.
தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்ஙகர
மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை
பரிபாலித்தனர். இம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல... என தமிழகத்தின்
பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க... காலதேவன் பயணத்தில் காஞ்சியில்
ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.
கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ்
பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக்
கருதப்பட்டது.அதாவது... அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, பூரி,
துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில்
இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.
அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம்
செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப
சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை
அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.
கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான
தோற்றம் கொண்டது காஞ்சிமடம். சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை
பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத
அளவுக்கு எளிமையாக இருந்தது.
மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும்...
உபந்யாசங்களுக்காகவும்... கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும்
இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.
அப்போது தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின்
உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை
கொண்டனர் நாயக்க மன்னர்கள். சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக
விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான். அறமும், பக்தி நெறியும்,
ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என
விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி
மடத்தின் புகழ்.
அப்படிப்பட்ட ஒரு மடம்... ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில்
அமையுங்கள்.எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். அறமும், பக்தியும்
தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட,
ஆணையிடப்பட்டது.
உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு
ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில்
ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.
காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால்
பீடுநடை போட்டது புதிய மடம். சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர்
மன்னர்கள். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70
ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.
எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இவ்வளவு
பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என
சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு... கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும்
வந்த கதையைப் பார்ப்போமா...?
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 19
ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது. மடாதிபதி என்றால் யார்...? கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா?
இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 500 வருடங்கள் பின்னால் போய் அதோ
அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய
பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா
இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி
தவழ்ந்து கொண்டிருக்கிறது.
இங்கிருந்து சுமார் 100. கிலோமீட்டர் கடந்து... தண்மையான துங்கா நதியின்
மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின்
தென்பகுதி மடம் எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம்
மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.
மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க... அங்கேயும் சில
பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள்
அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும்.
அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு. இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது
விசேஷம். மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான்
சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும்.
அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து
ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு
மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது.
அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத்
தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில் மடாதிபதி
என்றால் யார்...? என்ற கேள்வி எழும்.
மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர்
அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் மூத்தவர்கள்
மடாதிபதி என அழைக்கப்படுவார்.
அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர். அடுத்த மடாதிபதியாக வருவார்.
இதுதான் மடாதிபதி என்பதன் பொருள்.
மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம்
செய்பவர் அல்ல அதாவது... அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய
சிஷ்யர்கள்
இருந்திருக்கிறார்கள்.
சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக அளவு
சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint
becomes seer இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி
மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?
அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில். அவரைப்
பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே
சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.
அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம்
வாங்குவதற்காக உள்ளே நுழைய..."நில்லுங்கள்" என்றது மடத்துக்காரரின் குரல்
நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார்.
நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார். போய்விடுங்கள்.
""ஏன்...?" கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.
"ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். உங்கள் சம்பந்தம் வேண்டாம்.
உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம்... முதலான
லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார்.
பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிக்க்ஷாந்திக்காக வந்தால் அப்போது
இப்பழக்கங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்" என நீண்டதொரு விளக்கம்
சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.
ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப
காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம்
பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து
போனார்கள்.
இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக
வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.
"ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியது
தானே...?""இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை?""அனுமதி இல்லையா? ஏன்?"
இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.
மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக்கப்பட்டிருந்தது. அதன்
அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என
குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட
எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.
தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள்
ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில்
வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல
புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.
அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக்
கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ
சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.
"நீங்கள் தமிழ்நாட்டுப் பூர்வீக பிராமணர்கள்தானே...""ஆமாம்...
அதற்கென்ன?...""நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால்
உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை." என்றனர் மடத்துக்காரர்கள்.
"தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே...
நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே?."
"பூகோள எல்லை கிடக்கட்டும் ... உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி,
பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு
தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்.
அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை..."
கருநாடக மண்ணில் 'தமிழர்கள்' முதன்முதலாக அனுமதி மறுக்கப்படாதது. இந்த
சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)
அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய
பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா
இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி
தவழ்ந்து கொண்டிருக்கிறது.
இங்கிருந்து சுமார் 100. கிலோமீட்டர் கடந்து... தண்மையான துங்கா நதியின்
மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின்
தென்பகுதி மடம் எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம்
மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.
மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க... அங்கேயும் சில
பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள்
அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும்.
அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு. இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது
விசேஷம். மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான்
சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும்.
அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து
ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு
மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது.
அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத்
தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில் மடாதிபதி
என்றால் யார்...? என்ற கேள்வி எழும்.
மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர்
அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் மூத்தவர்கள்
மடாதிபதி என அழைக்கப்படுவார்.
அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர். அடுத்த மடாதிபதியாக வருவார்.
இதுதான் மடாதிபதி என்பதன் பொருள்.
மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம்
செய்பவர் அல்ல அதாவது... அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய
சிஷ்யர்கள்
இருந்திருக்கிறார்கள்.
சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக அளவு
சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint
becomes seer இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி
மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?
அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில். அவரைப்
பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே
சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.
அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம்
வாங்குவதற்காக உள்ளே நுழைய..."நில்லுங்கள்" என்றது மடத்துக்காரரின் குரல்
நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார்.
நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார். போய்விடுங்கள்.
""ஏன்...?" கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.
"ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். உங்கள் சம்பந்தம் வேண்டாம்.
உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம்... முதலான
லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார்.
பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிக்க்ஷாந்திக்காக வந்தால் அப்போது
இப்பழக்கங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்" என நீண்டதொரு விளக்கம்
சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.
ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப
காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம்
பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து
போனார்கள்.
இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக
வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.
"ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியது
தானே...?""இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை?""அனுமதி இல்லையா? ஏன்?"
இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.
மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக்கப்பட்டிருந்தது. அதன்
அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என
குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட
எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.
தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள்
ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில்
வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல
புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.
அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக்
கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ
சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.
"நீங்கள் தமிழ்நாட்டுப் பூர்வீக பிராமணர்கள்தானே...""ஆமாம்...
அதற்கென்ன?...""நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால்
உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை." என்றனர் மடத்துக்காரர்கள்.
"தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே...
நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே?."
"பூகோள எல்லை கிடக்கட்டும் ... உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி,
பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு
தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்.
அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை..."
கருநாடக மண்ணில் 'தமிழர்கள்' முதன்முதலாக அனுமதி மறுக்கப்படாதது. இந்த
சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 18
சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?...
ஆதிசங்கரர் போதித்தபடி தான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட
மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு
என்ன ஆதாரம்?
இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.
வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே
அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு.
அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து
சரிபார்ப்பதுதான் முறை. அந்த முறையில்... சங்கரர், சங்கர மடங்களை
ஸ்தாபித்தாரா?... என்பதை பார்க்கக் கடவோம்.
ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் என
கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான பூகோள வழிகாட்டுதல்கள் என
எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில்
அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா? என்பதே சிந்திக்கத்
தகுந்ததாகிறது
.இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு
சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன. அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள்
கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன. அந்த சின்னச்
சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு...விஞ்ஞானம்
வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? கால விரயம்
ஆகிறது?
அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத- ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த
சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள்
செய்திருக்கிறார்.
இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக
மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக
பிடித்திருக்கும். இந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி கால்
நடையாகவே சுற்றி... அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார்.
கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து... இன்று இந்தியா என்று
சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க
சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.
ஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக
கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும்
சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில்... தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத்...
கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய்... எக்கச்சக்க
தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை
நிர்மாணித்தார் என்பதை காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.
அடுத்ததாக...சங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய பூமி எங்கே இருக்கிறதென
இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு
மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.
அப்படியானால்... சங்கரர் முக்திபெற்ற பிறகு. அவர்மேல் கொண்ட பக்தியின்
காரணமாக, மரியாதையின் காரணமாக... அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன்
காரணமாக... சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில்
அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட
வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?.
சரி... சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான். அதனால் என்னை நான்
நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை
கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.
அப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி
எழுப்பியிருக்க மாட்டார்களா? அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே.
இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள்.
இன்னொரு பக்கம் சங்கரர்... சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு
தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.
தெய்வ சாட்சியா? ஆமாம். கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில்
தான்... மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன்.
அதாவது... சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன்மூலம் உலகியல் பற்றை
ஒழித்து... மோகத்தை துறந்து... அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி
இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.
இதைச் சொன்ன சங்கரர்... விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை
கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது... மனசு சுத்தமானாதான்
மோட்சமே தவிர... அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது
சங்கரோபதேசம். இப்படிப்பட்ட சங்கரர்... தான் மடங்களை நிர்மாணித்து அதில்
ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா...?
அதிலும் 'அகம் ப்ரம்மம்' என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும்
வழிபாடுகளைக் கவனியுங்கள்.]
தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு... கிழக்கே உள்ள பூரி
மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சில வழிபாடு...
மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும்
விக்ரக வழிபாடு... மூர்த்தி உபாஸனை.
அதுவும் வெவ்வேறு தெய்வ வழிபாடு... சங்கரரே உண்மையில் மடங்களை
ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா?
இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம். 'சங்கரர்தான் மடங்களை
ஸ்தாபித்தார்.அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கலாம்' என்று. சபாஷ். இந்த பதில்தான் முதல் கேள்விக்கு
பதில். அதாவது... சங்கரர் போதித்தபடி தான் மடங்கள் நடக்கின்றதா என்ற
கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே.
அடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே? இந்த
கேள்வி காதில் கேட்கிறது எங்களைப் போன்றவர்களுக்கு. அது கும்பகோண
மடம்தான்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)
மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு
என்ன ஆதாரம்?
இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.
வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே
அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு.
அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து
சரிபார்ப்பதுதான் முறை. அந்த முறையில்... சங்கரர், சங்கர மடங்களை
ஸ்தாபித்தாரா?... என்பதை பார்க்கக் கடவோம்.
ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் என
கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான பூகோள வழிகாட்டுதல்கள் என
எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில்
அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா? என்பதே சிந்திக்கத்
தகுந்ததாகிறது
.இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு
சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன. அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள்
கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன. அந்த சின்னச்
சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு...விஞ்ஞானம்
வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? கால விரயம்
ஆகிறது?
அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத- ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த
சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள்
செய்திருக்கிறார்.
இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக
மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக
பிடித்திருக்கும். இந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி கால்
நடையாகவே சுற்றி... அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார்.
கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து... இன்று இந்தியா என்று
சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க
சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.
ஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக
கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும்
சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில்... தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத்...
கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய்... எக்கச்சக்க
தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை
நிர்மாணித்தார் என்பதை காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.
அடுத்ததாக...சங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய பூமி எங்கே இருக்கிறதென
இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு
மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.
அப்படியானால்... சங்கரர் முக்திபெற்ற பிறகு. அவர்மேல் கொண்ட பக்தியின்
காரணமாக, மரியாதையின் காரணமாக... அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன்
காரணமாக... சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில்
அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட
வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?.
சரி... சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான். அதனால் என்னை நான்
நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை
கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.
அப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி
எழுப்பியிருக்க மாட்டார்களா? அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே.
இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள்.
இன்னொரு பக்கம் சங்கரர்... சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு
தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.
தெய்வ சாட்சியா? ஆமாம். கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில்
தான்... மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன்.
அதாவது... சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன்மூலம் உலகியல் பற்றை
ஒழித்து... மோகத்தை துறந்து... அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி
இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.
இதைச் சொன்ன சங்கரர்... விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை
கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது... மனசு சுத்தமானாதான்
மோட்சமே தவிர... அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது
சங்கரோபதேசம். இப்படிப்பட்ட சங்கரர்... தான் மடங்களை நிர்மாணித்து அதில்
ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா...?
அதிலும் 'அகம் ப்ரம்மம்' என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும்
வழிபாடுகளைக் கவனியுங்கள்.]
தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு... கிழக்கே உள்ள பூரி
மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சில வழிபாடு...
மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும்
விக்ரக வழிபாடு... மூர்த்தி உபாஸனை.
அதுவும் வெவ்வேறு தெய்வ வழிபாடு... சங்கரரே உண்மையில் மடங்களை
ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா?
இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம். 'சங்கரர்தான் மடங்களை
ஸ்தாபித்தார்.அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கலாம்' என்று. சபாஷ். இந்த பதில்தான் முதல் கேள்விக்கு
பதில். அதாவது... சங்கரர் போதித்தபடி தான் மடங்கள் நடக்கின்றதா என்ற
கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே.
அடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே? இந்த
கேள்வி காதில் கேட்கிறது எங்களைப் போன்றவர்களுக்கு. அது கும்பகோண
மடம்தான்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 17
. மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்?
மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்? அப்படியானால்...சங்கரர்
சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?... அந்த
மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?...
அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...இந்த
கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான்
சொல்கிறது.
தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம்
முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.
புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்...
வைஷ்ணவர்களால் 'ப்ரசன்ன பௌத்தர்' என்றே அழைக்கப்பட்டார்.
அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால்
அழைக்கப்பட்டார். இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்... ப்ரஸன்ன
பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
சங்கரரர் காலத்துக்குப் பிறகு... அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க
முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள். சங்கரரை போலவே ஊர் ஊராக
சுற்றினார்கள்.
வாழ்வே பொய் எதையும் நம்பாதே. சந்நியாசம் பெறு...! என சுற்றிச் சுற்றி
வலியுறுத்தினார்கள்.
'தனேஷனே... பார்யஷனே... புத்ரேஷனே'... என சொல்லித்தான் அவர்கள்
சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன். மனைவி (பெண்)
இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பது தான்
இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு
சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு
வந்தார்கள்.
"நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம் என்ற உபதேசத்தைத்தான்
கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் என சொன்னார்.
அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப... நாமும் புத்தரைப்
பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே"... என ஆலோசித்தனர். என்ன
யுக்தி?...
இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில்
நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா?...
"இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இது போன்ற
மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்" என
இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின்
சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர். அதன்படியே ஆதிசங்கரரின்
சிஷ்யர்கள்... புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க
ஆரம்பித்தனர்.
ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக்
கொத்தாய் நடந்தனர். தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு
மடத்தை எழுப்பி... அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை
நிர்மாணித்தார்கள்.
மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது
மடம். வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை
விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர். இவ்வாறு... சங்கரரின் முக்கியமான
சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள்
உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.
ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க... இம்மடங்களில் எந்தவிதமான பூஜை
புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான
மார்க்கத்தின்படி... விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது.
கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகமங்கள் கிடையாது.
வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.
சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது.
பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக
சமையல்?...
சமையல் இல்லையென்றால்... அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே
பூஜை எப்படி நடக்கும்? பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி
இருக்கும்?
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்... "Shankara Muths are only for
proclamation of Advydam" அதாவது சங்கரரின் சிஷ்யர்களால்
நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி... அத்வைத
கொள்கையை பறைசாற்றி... உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே
மட்டுமன்றி... வேறெதற்கும் அல்ல...
இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில்
இருக்கிறதா?... சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?
..அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?... அந்த
மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?...
அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...இந்த
கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான்
சொல்கிறது.
தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம்
முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.
புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்...
வைஷ்ணவர்களால் 'ப்ரசன்ன பௌத்தர்' என்றே அழைக்கப்பட்டார்.
அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால்
அழைக்கப்பட்டார். இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்... ப்ரஸன்ன
பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
சங்கரரர் காலத்துக்குப் பிறகு... அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க
முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள். சங்கரரை போலவே ஊர் ஊராக
சுற்றினார்கள்.
வாழ்வே பொய் எதையும் நம்பாதே. சந்நியாசம் பெறு...! என சுற்றிச் சுற்றி
வலியுறுத்தினார்கள்.
'தனேஷனே... பார்யஷனே... புத்ரேஷனே'... என சொல்லித்தான் அவர்கள்
சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன். மனைவி (பெண்)
இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பது தான்
இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு
சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு
வந்தார்கள்.
"நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம் என்ற உபதேசத்தைத்தான்
கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் என சொன்னார்.
அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப... நாமும் புத்தரைப்
பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே"... என ஆலோசித்தனர். என்ன
யுக்தி?...
இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில்
நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா?...
"இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இது போன்ற
மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்" என
இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின்
சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர். அதன்படியே ஆதிசங்கரரின்
சிஷ்யர்கள்... புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க
ஆரம்பித்தனர்.
ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக்
கொத்தாய் நடந்தனர். தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு
மடத்தை எழுப்பி... அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை
நிர்மாணித்தார்கள்.
மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது
மடம். வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை
விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர். இவ்வாறு... சங்கரரின் முக்கியமான
சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள்
உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.
ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க... இம்மடங்களில் எந்தவிதமான பூஜை
புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான
மார்க்கத்தின்படி... விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது.
கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகமங்கள் கிடையாது.
வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.
சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது.
பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக
சமையல்?...
சமையல் இல்லையென்றால்... அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே
பூஜை எப்படி நடக்கும்? பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி
இருக்கும்?
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்... "Shankara Muths are only for
proclamation of Advydam" அதாவது சங்கரரின் சிஷ்யர்களால்
நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி... அத்வைத
கொள்கையை பறைசாற்றி... உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே
மட்டுமன்றி... வேறெதற்கும் அல்ல...
இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில்
இருக்கிறதா?... சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?
..அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 16
16.கர்மா,வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர். அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?
வேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் - என சங்கரர் சொல்லி
அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில்
குறிப்பிட்டிருந்தேன்.
குட்டைதான் குழம்பியது. அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை.
தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க... ஆதிசங்கரருக்கும், ஆகமக்காரர்களுக்கும் இடையே
கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.
ஆகமக்காரர்களா...? முதலில் ஆகமம் என்றால் என்ன? கடவுளை எப்படி
வழிபடவேண்டும். என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு
செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் மேலும் பிறப்புக்குப்
பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டிய
சடங்குகளையும் பற்றி சொல்வது தான் ஆகமம்.
ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று பொருள்.இதில் வைஷ்ணவ
சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63
ஆகமங்களும் இருக்கின்றன.
வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.
பெருமாளை எப்படியெல்லாம் ஆராதனை செய்யவேண்டும். அர்ச்சிக்க வேண்டும்...
ஆகியவற்றை 'விகனசர்' என்பவர் வகுத்தார். எனவே, இது வைகானச ஆகமம் ஆயிற்று.
அடுத்ததாக...பெருமாளே இறங்கி வந்து 'என்னை இப்படி இப்படியெல்லாம்
பூஜிக்கவேண்டும். புனஸ்காரம் பண்ண வேண்டும், அர்ச்சிக்க வேண்டும்,
அலங்காரம் பண்ணவேண்டும்' என தன்னை வழிபடும் முறைகளை அந்தப் பெருமாளே
சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது. இதுவே பாஞ்சராத்ர ஆகமம்
எனப்படுகிறது.
சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்கள். அவற்றில் பலவற்றை இப்பொழுது
புழக்கத்தில் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.
சரி... இவைதான் ஆகமங்கள். அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி
ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள் தான் ஆகமங்கள்.
இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்... இதோடு இன்னொன்றையும் கூறின.
'இப்படியெல்லாம் க்ரமங்களோடு பகவானை வழிபட்டால் தான் மோட்சம் கிட்டும்'
என்பது தான் அது. இங்கே தான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார். கண்டித்தார்
என்றுகூட சொல்லலாம்.
கடவுள் மட்டும் தான் நிஜம். மற்ற அனைத்தும் மாயம், பொய். ஆகமங்கள்
பொய்களை திரட்டி வந்து உண்மையை பூஜிக்கச் செய்கின்றன. அந்த உண்மையைக் கூட
விக்ரகம் என்னும் பொய் வடிவமாகவே பார்க்கின்றன. இப்படியெல்லாம்...
ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது.
கடவுளின் கடாட்சமும் கிட்டாது. ஆகமங்கள் தவறு. அது அடியொற்றுவதும் தவறு
என வாதிட்டார் ஆதிசங்கரர்.
அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?
சொன்னார்."சத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம் நித்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நித்ஸலசித்தம் நித்ஸலசித்தே ஜீவன்முக்தி..." இந்த
வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன?
சந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு கிடைக்கும் போது உனக்கு
உலகியல் மீதான நாட்டம் குறைகிறது. உலகியல் பற்று குறையும் போது உன் மனம்
மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது. மோகத்தை நீ விட்டுவிட்ட போது உனக்கு
சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது. சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே
உனக்கு மோட்சம் கிடைக்கும். இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை
என்கிறார் சங்கரர்.
இப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச தத்துவம் வரை பல இடங்களுக்கும்
தன் காலடியால் கடந்து பரப்பிய ஆதிசங்கரர். தனது 32 வயதிலேயே மோட்சம்
அடைந்ததாகச்
சொல்கிறார்கள்.
அவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச் சொல்வதுபோல்... அவர் இன்ன இடத்தில்
தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான்
நிலவுகிறது.
ஒருவேளை கிடைத்திருந்தால்... அவருக்கு அங்கே அவரை பின்பற்றியவர்கள்
நினைவுச் சின்னம் அமைத்திருப்பார்களே அதுவும் இல்லை. அதனால்...
ஆதிசங்கரர் இங்குதான் உயிர் நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.
இந்த யூகங்கள் ஒருபுறம் இருக்க... சங்கரரின் காலம் பற்றியும் பல
கணிப்புகள்! தனது "Discovery of India" என்னும் வலுவான வரலாற்று நூலில்
ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.
இன்னும் சிலர்... நான்காம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம்
சொல்கிறார்கள். இவர்களைத் தூக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல் இன்னும்
சிலர் சங்கரர் இரண்டாயிரத்து அய்நூறு வருடங்களுக்கு முற்பட்டவர்
என்கிறார்கள் சகஜமாக.
இப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும் பொதுவாக சங்கரர் கி.பி. ஏழு
அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர் தான். அதாவது இன்றைய காலத்திலிருந்து
1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது தான் வரலாற்றை வடிகட்டிப்
பார்க்கும்போது கொடிகட்டி நிற்கும் நிஜம்.
என்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது வரை சொல்லி
முடித்துவிட்டாரே? சங்கரர் என்றால் மடங்கள் தானே ஞாபகம் வரும். அவற்றை
ப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே? என நீங்கள் கேட்பது என் செவிகளில்
தீர்க்கமாக தெறிக்கிறது.
சங்கரமடங்கள் அனைத்தும் சங்கரருக்குப் பிறகு தானே ஆரம்பிக்கப்பட்டவை. அதை
எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)
அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில்
குறிப்பிட்டிருந்தேன்.
குட்டைதான் குழம்பியது. அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை.
தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க... ஆதிசங்கரருக்கும், ஆகமக்காரர்களுக்கும் இடையே
கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.
ஆகமக்காரர்களா...? முதலில் ஆகமம் என்றால் என்ன? கடவுளை எப்படி
வழிபடவேண்டும். என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு
செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் மேலும் பிறப்புக்குப்
பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டிய
சடங்குகளையும் பற்றி சொல்வது தான் ஆகமம்.
ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று பொருள்.இதில் வைஷ்ணவ
சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63
ஆகமங்களும் இருக்கின்றன.
வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.
பெருமாளை எப்படியெல்லாம் ஆராதனை செய்யவேண்டும். அர்ச்சிக்க வேண்டும்...
ஆகியவற்றை 'விகனசர்' என்பவர் வகுத்தார். எனவே, இது வைகானச ஆகமம் ஆயிற்று.
அடுத்ததாக...பெருமாளே இறங்கி வந்து 'என்னை இப்படி இப்படியெல்லாம்
பூஜிக்கவேண்டும். புனஸ்காரம் பண்ண வேண்டும், அர்ச்சிக்க வேண்டும்,
அலங்காரம் பண்ணவேண்டும்' என தன்னை வழிபடும் முறைகளை அந்தப் பெருமாளே
சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது. இதுவே பாஞ்சராத்ர ஆகமம்
எனப்படுகிறது.
சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்கள். அவற்றில் பலவற்றை இப்பொழுது
புழக்கத்தில் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.
சரி... இவைதான் ஆகமங்கள். அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி
ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள் தான் ஆகமங்கள்.
இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்... இதோடு இன்னொன்றையும் கூறின.
'இப்படியெல்லாம் க்ரமங்களோடு பகவானை வழிபட்டால் தான் மோட்சம் கிட்டும்'
என்பது தான் அது. இங்கே தான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார். கண்டித்தார்
என்றுகூட சொல்லலாம்.
கடவுள் மட்டும் தான் நிஜம். மற்ற அனைத்தும் மாயம், பொய். ஆகமங்கள்
பொய்களை திரட்டி வந்து உண்மையை பூஜிக்கச் செய்கின்றன. அந்த உண்மையைக் கூட
விக்ரகம் என்னும் பொய் வடிவமாகவே பார்க்கின்றன. இப்படியெல்லாம்...
ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது.
கடவுளின் கடாட்சமும் கிட்டாது. ஆகமங்கள் தவறு. அது அடியொற்றுவதும் தவறு
என வாதிட்டார் ஆதிசங்கரர்.
அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?
சொன்னார்."சத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம் நித்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நித்ஸலசித்தம் நித்ஸலசித்தே ஜீவன்முக்தி..." இந்த
வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன?
சந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு கிடைக்கும் போது உனக்கு
உலகியல் மீதான நாட்டம் குறைகிறது. உலகியல் பற்று குறையும் போது உன் மனம்
மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது. மோகத்தை நீ விட்டுவிட்ட போது உனக்கு
சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது. சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே
உனக்கு மோட்சம் கிடைக்கும். இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை
என்கிறார் சங்கரர்.
இப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச தத்துவம் வரை பல இடங்களுக்கும்
தன் காலடியால் கடந்து பரப்பிய ஆதிசங்கரர். தனது 32 வயதிலேயே மோட்சம்
அடைந்ததாகச்
சொல்கிறார்கள்.
அவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச் சொல்வதுபோல்... அவர் இன்ன இடத்தில்
தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான்
நிலவுகிறது.
ஒருவேளை கிடைத்திருந்தால்... அவருக்கு அங்கே அவரை பின்பற்றியவர்கள்
நினைவுச் சின்னம் அமைத்திருப்பார்களே அதுவும் இல்லை. அதனால்...
ஆதிசங்கரர் இங்குதான் உயிர் நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.
இந்த யூகங்கள் ஒருபுறம் இருக்க... சங்கரரின் காலம் பற்றியும் பல
கணிப்புகள்! தனது "Discovery of India" என்னும் வலுவான வரலாற்று நூலில்
ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.
இன்னும் சிலர்... நான்காம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம்
சொல்கிறார்கள். இவர்களைத் தூக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல் இன்னும்
சிலர் சங்கரர் இரண்டாயிரத்து அய்நூறு வருடங்களுக்கு முற்பட்டவர்
என்கிறார்கள் சகஜமாக.
இப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும் பொதுவாக சங்கரர் கி.பி. ஏழு
அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர் தான். அதாவது இன்றைய காலத்திலிருந்து
1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது தான் வரலாற்றை வடிகட்டிப்
பார்க்கும்போது கொடிகட்டி நிற்கும் நிஜம்.
என்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது வரை சொல்லி
முடித்துவிட்டாரே? சங்கரர் என்றால் மடங்கள் தானே ஞாபகம் வரும். அவற்றை
ப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே? என நீங்கள் கேட்பது என் செவிகளில்
தீர்க்கமாக தெறிக்கிறது.
சங்கரமடங்கள் அனைத்தும் சங்கரருக்குப் பிறகு தானே ஆரம்பிக்கப்பட்டவை. அதை
எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 14
சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.
உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே
கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக்
கூடாது.மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச
பண்பாடு.சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய
பாவம்...
வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக்
கொண்டிருந்த ஆதிசங்கரரைஅழுத்தமாகப் பாதித்த சம்பவம். இளமைப் பருவத்திலேயே
- அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின்
இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.
வைதீகர்கள் வந்தார்கள். 'பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை
நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அது பொய், இது பொய் என உளறாதே...' என
அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்துதன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை
தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும்செய்து
முடித்தார் சங்கரர்.
'இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை...' என்ற நிலைமை அன்னையின்
மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர்.
மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.
சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான
ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.
பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும்
சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில்
தகவல்கள் வழிகின்றன.
சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும்
விதித்துக் கொண்டு... தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப்
பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.
சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு
தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று
உலகில் எதுவும் இல்லை என்றபோது... மற்றவர்களிடம் பிச்சை வாங்கி
உண்பதுதான் சந்யாச பண்பாடு.
சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய்
பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக்
கொள்ளவேண்டும்என்றசங்கரர்... சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக
பின்பற்றினார்.
சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது? ஆசையைத் துறந்த சந்யாசிகள்
எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்தது தான் சந்யாச
ஸ்மிருதி.
'பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது...' -- சந்யாசியானவன்
பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...என்று சொன்ன சந்யாச
ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும்
வலியுறுத்தியிருக்கிறது.
எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். அல்லது
பல்லக்கில் போகவேண்டும்.
இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது
என்பதை பின்வரும் ஸ்லோகத்தில்
சொல்கிறார்கள்.
"வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வாசஜேஸ ஸ்நான மாசரேது..."என போகும் இந்த
ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பன்னாலும் தன்னை
மாற்றிக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். கால்நடையாக திரிந்து உன்
உபதேசங்களைப் பரப்பவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக்
கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச்
சுற்றிக் கொண்டிருக்காதே. அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க
முடியாது.
உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே
கூடாது அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.
பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத
துரதிருஷ்டவசமாகசந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த
கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக்
கொள்ளவேண்டும்என'வாகன'த் தீட்டுபற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே
அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.
இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன்
சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.
இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும்.
மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு
விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.
தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை.
(பல்லக்குகளில் தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).
இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர்
இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.
மூடமதே... அதாவது மூட மடனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் -
ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும்,
சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக... அறிவூட்டக் கூடியதாக
அமைந்திருக்கின்றன.
பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்?
என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை
பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார்
ஆதிசங்கரர். அதில் சில தேவையான ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை
சொல்லக்கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா என்றும் அந்த
ஸ்லோகங்களின் ஜன்னல்கள் திறந்து தரிசிப்போம்.
-அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)
கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக்
கூடாது.மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச
பண்பாடு.சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய
பாவம்...
வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக்
கொண்டிருந்த ஆதிசங்கரரைஅழுத்தமாகப் பாதித்த சம்பவம். இளமைப் பருவத்திலேயே
- அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின்
இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.
வைதீகர்கள் வந்தார்கள். 'பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை
நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அது பொய், இது பொய் என உளறாதே...' என
அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்துதன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை
தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும்செய்து
முடித்தார் சங்கரர்.
'இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை...' என்ற நிலைமை அன்னையின்
மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர்.
மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.
சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான
ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.
பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும்
சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில்
தகவல்கள் வழிகின்றன.
சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும்
விதித்துக் கொண்டு... தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப்
பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.
சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு
தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று
உலகில் எதுவும் இல்லை என்றபோது... மற்றவர்களிடம் பிச்சை வாங்கி
உண்பதுதான் சந்யாச பண்பாடு.
சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய்
பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக்
கொள்ளவேண்டும்என்றசங்கரர்... சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக
பின்பற்றினார்.
சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது? ஆசையைத் துறந்த சந்யாசிகள்
எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்தது தான் சந்யாச
ஸ்மிருதி.
'பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது...' -- சந்யாசியானவன்
பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...என்று சொன்ன சந்யாச
ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும்
வலியுறுத்தியிருக்கிறது.
எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். அல்லது
பல்லக்கில் போகவேண்டும்.
இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது
என்பதை பின்வரும் ஸ்லோகத்தில்
சொல்கிறார்கள்.
"வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வாசஜேஸ ஸ்நான மாசரேது..."என போகும் இந்த
ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பன்னாலும் தன்னை
மாற்றிக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். கால்நடையாக திரிந்து உன்
உபதேசங்களைப் பரப்பவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக்
கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச்
சுற்றிக் கொண்டிருக்காதே. அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க
முடியாது.
உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே
கூடாது அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.
பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத
துரதிருஷ்டவசமாகசந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த
கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக்
கொள்ளவேண்டும்என'வாகன'த் தீட்டுபற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே
அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.
இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன்
சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.
இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும்.
மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு
விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.
தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை.
(பல்லக்குகளில் தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).
இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர்
இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.
மூடமதே... அதாவது மூட மடனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் -
ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும்,
சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக... அறிவூட்டக் கூடியதாக
அமைந்திருக்கின்றன.
பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்?
என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை
பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார்
ஆதிசங்கரர். அதில் சில தேவையான ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை
சொல்லக்கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா என்றும் அந்த
ஸ்லோகங்களின் ஜன்னல்கள் திறந்து தரிசிப்போம்.
-அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 13
‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன?
விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என
சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம்
இருக்கட்டும்.
இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து
ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன? செய்தது
என்ன?-உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக
வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.
இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும்
சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள்
மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.
யார் இவர்? கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே...
அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர்.
அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான்
காலடி... தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள்
எழும்பியிருக்கும் 'பெரியாறு' நதி அழகாக காலடி வழியாக ஓடிக்
கொண்டிருக்கிறது.
இயற்கை செழிப்பான இந்த காலடியில்...ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு
ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன்
மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக்
குதித்தது. 'அழகான குழந்தை... கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது.
காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.' என
பார்த்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.
அப்பாவும்... அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க..
ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு
குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.
அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்... கொஞ்சம் கொஞ்சமாய்
விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என
சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில்
விழுந்தது.ஆனாலும்... சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை
அவனது அப்பா.
அவனது வயிற்றுப் பசியையும் போக்கி... அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர
பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம்
படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே
செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.
அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். "அம்மா... உள்ளூர் பண்டிதர்களிடம்
படித்தது போதும் அம்மா... நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக
கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே..." அம்மாவிடம் சொல்லி
விட்டு...பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம்
செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா
நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம்
அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்... அங்கே பல விடயங்களைத் தெரிந்து
கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க
ஆரம்பித்தார்.
சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம்
பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்... அப்போது புத்தரையும் வாசிக்க
ஆரம்பித்தார்.
அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம்
சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.
புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். மறுபடியும்
மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு
தெளிவிற்கு வந்தார்.
புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள
அனைத்தும் பொய்... அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.
நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய
இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது" என தனக்கு கிடைத்த ஞானத்தை
ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.
வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய்கடவுளைத் தவிர... என சங்கரர்
மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய்
என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ
சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார்.
தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற
இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.
அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி,
சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு
ஊராய் சென்றார்.
உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே... தனது அத்வைதத்தை
ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்...'எல்லாமே பொய்... எதுவும்
மெய்யில்லை' என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம்
அழுத்தமாக உலுக்கியது.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)
சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம்
இருக்கட்டும்.
இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து
ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன? செய்தது
என்ன?-உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக
வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.
இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும்
சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள்
மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.
யார் இவர்? கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே...
அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர்.
அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான்
காலடி... தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள்
எழும்பியிருக்கும் 'பெரியாறு' நதி அழகாக காலடி வழியாக ஓடிக்
கொண்டிருக்கிறது.
இயற்கை செழிப்பான இந்த காலடியில்...ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு
ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன்
மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக்
குதித்தது. 'அழகான குழந்தை... கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது.
காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.' என
பார்த்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.
அப்பாவும்... அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க..
ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு
குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.
அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்... கொஞ்சம் கொஞ்சமாய்
விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என
சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில்
விழுந்தது.ஆனாலும்... சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை
அவனது அப்பா.
அவனது வயிற்றுப் பசியையும் போக்கி... அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர
பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம்
படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே
செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.
அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். "அம்மா... உள்ளூர் பண்டிதர்களிடம்
படித்தது போதும் அம்மா... நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக
கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே..." அம்மாவிடம் சொல்லி
விட்டு...பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம்
செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா
நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம்
அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்... அங்கே பல விடயங்களைத் தெரிந்து
கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க
ஆரம்பித்தார்.
சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம்
பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்... அப்போது புத்தரையும் வாசிக்க
ஆரம்பித்தார்.
அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம்
சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.
புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். மறுபடியும்
மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு
தெளிவிற்கு வந்தார்.
புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள
அனைத்தும் பொய்... அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.
நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய
இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது" என தனக்கு கிடைத்த ஞானத்தை
ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.
வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய்கடவுளைத் தவிர... என சங்கரர்
மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய்
என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ
சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார்.
தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற
இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.
அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி,
சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு
ஊராய் சென்றார்.
உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே... தனது அத்வைதத்தை
ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்...'எல்லாமே பொய்... எதுவும்
மெய்யில்லை' என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம்
அழுத்தமாக உலுக்கியது.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 12
பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு.
பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும்
லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில்
கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.
பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக
வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள். இதற்கான பதில் அறிவதற்கு முன்பு
தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.
உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள்
தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே
பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை
ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்.... கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும்
உருவகித்து "நாயக- நாயகி - பாவ"த்தை காட்டியது தமிழ் வழிபாடு.
பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக - நாயகி பாவ
வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்
இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில்
கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.
வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு
சின்னம்.ஆமாம்... காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான்
லிங்கத்தின் தத்துவம்.
ஆணும்... பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது
அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.
தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம்
கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட
முடியாது என்ற கருத்து தோன்றியதால்
லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின்
மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த
பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான்
லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.
இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த
பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற்
கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன்
சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.
விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த
தேசிகர்.'நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா'என போகும் ஸ்லோகத்தில்தான்
இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.
ஆரிய மதம் - வேத மதம் - ப்ராமணமதம் - வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம்
தழைத்திருந்த அந்த நேரத்தில்...ஒரு குரல் எழுந்தது.
இன்றைய வடாற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த
அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.
"வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான்.
விஷ்ணுவை அல்ல..." என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் 'ஷிவோத்
கிருஷ்டம்' என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் -
சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள். வேதத்தில் சிவன்தான்
மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட
விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.
தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற
கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள்
எழுந்தன.
வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக
எதிர்த்தனர். வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள்
உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம
காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு
பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என
சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.
இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு
வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.
நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்'நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம்
நாராயணா பரஹா...'என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே
சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். 'அதனால்
நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப்
பெறுங்கள்' என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.
"மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது" என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.
சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...
வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...
சைவ... வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர். -
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்.... )
லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில்
கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.
பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக
வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள். இதற்கான பதில் அறிவதற்கு முன்பு
தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.
உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள்
தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே
பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை
ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்.... கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும்
உருவகித்து "நாயக- நாயகி - பாவ"த்தை காட்டியது தமிழ் வழிபாடு.
பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக - நாயகி பாவ
வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்
இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில்
கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.
வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு
சின்னம்.ஆமாம்... காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான்
லிங்கத்தின் தத்துவம்.
ஆணும்... பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது
அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.
தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம்
கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட
முடியாது என்ற கருத்து தோன்றியதால்
லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின்
மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த
பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான்
லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.
இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த
பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற்
கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன்
சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.
விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த
தேசிகர்.'நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா'என போகும் ஸ்லோகத்தில்தான்
இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.
ஆரிய மதம் - வேத மதம் - ப்ராமணமதம் - வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம்
தழைத்திருந்த அந்த நேரத்தில்...ஒரு குரல் எழுந்தது.
இன்றைய வடாற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த
அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.
"வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான்.
விஷ்ணுவை அல்ல..." என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் 'ஷிவோத்
கிருஷ்டம்' என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் -
சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள். வேதத்தில் சிவன்தான்
மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட
விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.
தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற
கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள்
எழுந்தன.
வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக
எதிர்த்தனர். வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள்
உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம
காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு
பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என
சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.
இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு
வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.
நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்'நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம்
நாராயணா பரஹா...'என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே
சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். 'அதனால்
நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப்
பெறுங்கள்' என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.
"மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது" என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.
சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...
வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...
சைவ... வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர். -
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்.... )
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 11
மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.
நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை
பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்' என்பதை கடந்த
அத்தியாயத்தில் கவனித்தோம்.
வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான்,
சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான்.
க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும்
அவன் க்ஷத்திரியன்தான்.
-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப்
படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன்
என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம்
ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.
இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு
ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'படம் பார்த்து தெரிந்துகொள்' என்ற
தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.
'என்னடா... ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக்
கொடுக்கிறாரே இந்த ஆள்' என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான்
பதிலை ஆரம்பிக்கவேண்டும்.
சொல்லிக் கொடுத்தவுடனேயே 'பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல'; 'பற்றிக்கொள்ளும்
கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா
சொல்லிக் கொடுக்கப்பட்டது -
அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன்
வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது
மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர்.
இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள்
மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான
தொழிலாக 'நல்லவர்' என எழுதப்பட்டிருக்கிறது
ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன்
ப்ரம்மத்தின் அவதாரம்.
பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ
நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான்.
லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும்
சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத்
தான் நமது பாட நூல் அய்யர் - நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித்
திரட்டி தந்திருக்கிறது.
சரி... நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள்
கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம்
வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.
அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார்.
ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள்
என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி
வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.
"அய்யர் - நல்லவர்" மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான்
யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் - பண்ணுவிப்பது
பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.
எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது.
சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன
சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது
சாஸ்திரம்.
என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது
சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.
சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள
வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில
மந்திரங்களைச் சொல்லவேண்டும்.
பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே
செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.
(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால்
ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத்
தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை
எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள்
ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு
திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.
இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை
காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள்
பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப்
பயிற்சிதான்.
அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின்
பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும்.
பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து
தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட
மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.
சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம்
அதாவது தூக்கம்.
பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும்
வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.
இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.
இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த
பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.-
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும் )
பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்' என்பதை கடந்த
அத்தியாயத்தில் கவனித்தோம்.
வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான்,
சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான்.
க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும்
அவன் க்ஷத்திரியன்தான்.
-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப்
படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன்
என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம்
ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.
இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு
ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'படம் பார்த்து தெரிந்துகொள்' என்ற
தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.
'என்னடா... ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக்
கொடுக்கிறாரே இந்த ஆள்' என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான்
பதிலை ஆரம்பிக்கவேண்டும்.
சொல்லிக் கொடுத்தவுடனேயே 'பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல'; 'பற்றிக்கொள்ளும்
கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா
சொல்லிக் கொடுக்கப்பட்டது -
அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன்
வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது
மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர்.
இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள்
மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான
தொழிலாக 'நல்லவர்' என எழுதப்பட்டிருக்கிறது
ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன்
ப்ரம்மத்தின் அவதாரம்.
பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ
நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான்.
லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும்
சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத்
தான் நமது பாட நூல் அய்யர் - நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித்
திரட்டி தந்திருக்கிறது.
சரி... நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள்
கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம்
வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.
அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார்.
ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள்
என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி
வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.
"அய்யர் - நல்லவர்" மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான்
யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் - பண்ணுவிப்பது
பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.
எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது.
சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன
சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது
சாஸ்திரம்.
என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது
சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.
சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள
வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில
மந்திரங்களைச் சொல்லவேண்டும்.
பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே
செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.
(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால்
ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத்
தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை
எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள்
ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு
திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.
இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை
காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள்
பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப்
பயிற்சிதான்.
அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின்
பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும்.
பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து
தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட
மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.
சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம்
அதாவது தூக்கம்.
பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும்
வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.
இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.
இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த
பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.-
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும் )
செவ்வாய், 20 செப்டம்பர், 2016
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 10
பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்?
பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் உறவு கொண்டால் ? தவறு செய்யும் ஆணை
விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.
என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால்
யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?
நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி
வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன். பிறகு... நான் மநுவுக்குள் மூழ்க
ஆரம்பித்தேன். 'சண்டாளர்கள்' என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும்
என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.
பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?...
அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.
சமூகம்?...ஆமாம்... தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை
பிராமணர்கள் பார்த்தார்கள்.
'நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி
அழைப்பது'-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக்
கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான்
உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு.
அதற்காக? பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.
சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான்.
வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான்.
க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில்
நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான். இதுதான் அவர்கள் வகுத்த stable
society.
மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.
சாதி விட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும், சூத்ர
புத்ரர்களுக்கும் மட்டுமல்ல க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்வைசிய
ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்மேலும்...சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய,
வைஸிய புத்ரர்கள்.
இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக்
கொண்டிருந்தான்.
காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல்
நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.
இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால் தான் இந்த பிரச்சினைக்காக
மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.
என்ன மாற்றுச் சட்டம்? முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில்
இது போல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப்
பார்த்தார். மநு
ஒன்று.. அனுலோம சங்கரம்...
இரண்டு... ப்ரதிலோம சங்கரம் அனுலோம...
பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் 'சங்கரம்' என்பதற்கு
இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர
விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்' என்பதற்கு இந்த இடத்தில்
என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர
விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்'.
சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல் ஜாதிக்காரனாக
இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.
ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண்
அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.
நம் இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது,
உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான்
பொதுவாய் 'சங்கரம்'.
இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும்
அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல் ஜாதிக்காரனாகவும் பெண்
கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம 'சங்கரம்'.
உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்... என்றது வேதம்.
மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும்
அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.
இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க
வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.
அடுத்து சொல்லப்போகும் 'ப்ரதிலோம சங்கரம்' பற்றி நீங்கள்
யூகித்திருக்கலாம். அதாவது....மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள்
கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம
சங்கரம்.
அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து
செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம்
பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது
அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.அவர்களும்,
அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள் தான்
சட்டம் இயற்றி தண்டனை
விதித்தது மநு.
இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று
வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?
ஆனால்... 'அனுலோம சங்கர' கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர்
ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் 'சண்டாளன்' என்ற பதத்துக்கு...
சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச்
சொல்லியிருக்கிறார். நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்.
-அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
(தொடரும் )
......................
மேற்கண்ட பதிவுக்கு கருப்பொருளுக்கு ஆதாரமாக இதை படியுங்கள்.
உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.
பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை. பார்ப்பன
பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்
................
விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.
என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால்
யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?
நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி
வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன். பிறகு... நான் மநுவுக்குள் மூழ்க
ஆரம்பித்தேன். 'சண்டாளர்கள்' என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும்
என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.
பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?...
அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.
சமூகம்?...ஆமாம்... தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை
பிராமணர்கள் பார்த்தார்கள்.
'நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி
அழைப்பது'-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக்
கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான்
உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு.
அதற்காக? பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.
சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான்.
வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான்.
க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில்
நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான். இதுதான் அவர்கள் வகுத்த stable
society.
மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.
சாதி விட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும், சூத்ர
புத்ரர்களுக்கும் மட்டுமல்ல க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்வைசிய
ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்மேலும்...சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய,
வைஸிய புத்ரர்கள்.
இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக்
கொண்டிருந்தான்.
காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல்
நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.
இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால் தான் இந்த பிரச்சினைக்காக
மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.
என்ன மாற்றுச் சட்டம்? முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில்
இது போல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப்
பார்த்தார். மநு
ஒன்று.. அனுலோம சங்கரம்...
இரண்டு... ப்ரதிலோம சங்கரம் அனுலோம...
பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் 'சங்கரம்' என்பதற்கு
இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர
விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்' என்பதற்கு இந்த இடத்தில்
என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான... சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர
விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்'.
சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல் ஜாதிக்காரனாக
இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.
ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண்
அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.
நம் இனத்து ஆண்... பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது,
உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான்
பொதுவாய் 'சங்கரம்'.
இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும்
அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல் ஜாதிக்காரனாகவும் பெண்
கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம 'சங்கரம்'.
உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்... என்றது வேதம்.
மநுவோ... கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும்
அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.
இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க
வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.
அடுத்து சொல்லப்போகும் 'ப்ரதிலோம சங்கரம்' பற்றி நீங்கள்
யூகித்திருக்கலாம். அதாவது....மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள்
கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம
சங்கரம்.
அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து
செல்லலாம்?... இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம்
பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது
அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.அவர்களும்,
அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள் தான்
சட்டம் இயற்றி தண்டனை
விதித்தது மநு.
இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று
வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?
ஆனால்... 'அனுலோம சங்கர' கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர்
ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் 'சண்டாளன்' என்ற பதத்துக்கு...
சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச்
சொல்லியிருக்கிறார். நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்.
-அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
(தொடரும் )
......................
மேற்கண்ட பதிவுக்கு கருப்பொருளுக்கு ஆதாரமாக இதை படியுங்கள்.
உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.
பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை. பார்ப்பன
பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்
................
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 9
” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு.
தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு. யார் அந்த சண்டாளர்கள்? "
தலித் " துகள் சண்டாளர்களாம். ? துரோகம் செய்தவனை கொலை பாதகனை,
பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.
ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள்.
எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி
கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான்
மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும்
குறிப்பிட்டார்.
ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன
பாவம் செய்தார்கள்?
இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள்
எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.
முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச்
சொல்லுகிறேன். இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம்.
சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த
போராட்டத்தில் தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான
கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பல தடவை
வந்தார்.
அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள்
ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம்
எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம்
தீட்டப்பட்டது.
உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின.
அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி
காட்டுவது தான்.
திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன
இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப்
பிடித்துக்கொண்டோம்.தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப்
போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள்என்று நாங்கள் பல
முழக்கங்களை போட்டோம். காந்தி மேடைக்கு வந்துவிட்டார்.
அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர்
கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை
எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.
அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கின்றேன்.
காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார்.
என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை
சுட்டிக்காட்டி, 'உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள்.
கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என
காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப்
படுத்தவில்லை.
எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான்
இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்
நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில்
எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.
நான் தீண்டாமை முற்றாக வேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி
அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான்.
அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள்
என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள்.
கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.
இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு
ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட
வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும்
குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து
முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை
அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
இத்தகைய காலகட்டத்தில்பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள்
மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.
தனது வீட்டிலுள்ள பிராமணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன்
நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக்
கொண்டார்கள்.
சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில்
சிலரே அவர்களுடன் வாழ்க்கை
அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள்.
பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான்
சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.
நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர்
இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர்.
அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே
தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது
வெகு காலம் முன்பு.
இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என
ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப்
பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என
எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென
பேசிமுடித்தார்காந்தியடிகள்.முன்வரிசையில் இருந்த நான்
திரும்பிக்கொண்டேன்.
ஜாதியை உருவாக்கிய பிராமணன். பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.-
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்.... )
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும்
ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
தலித் " துகள் சண்டாளர்களாம். ? துரோகம் செய்தவனை கொலை பாதகனை,
பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.
ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள்.
எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி
கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான்
மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும்
குறிப்பிட்டார்.
ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன
பாவம் செய்தார்கள்?
இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள்
எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.
முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச்
சொல்லுகிறேன். இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம்.
சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த
போராட்டத்தில் தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான
கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பல தடவை
வந்தார்.
அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள்
ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம்
எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம்
தீட்டப்பட்டது.
உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின.
அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி
காட்டுவது தான்.
திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன
இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப்
பிடித்துக்கொண்டோம்.தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப்
போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள்என்று நாங்கள் பல
முழக்கங்களை போட்டோம். காந்தி மேடைக்கு வந்துவிட்டார்.
அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர்
கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை
எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.
அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கின்றேன்.
காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார்.
என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை
சுட்டிக்காட்டி, 'உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள்.
கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என
காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப்
படுத்தவில்லை.
எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான்
இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்
நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில்
எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.
நான் தீண்டாமை முற்றாக வேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி
அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான்.
அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள்
என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள்.
கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.
இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு
ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட
வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும்
குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து
முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை
அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
இத்தகைய காலகட்டத்தில்பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள்
மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.
தனது வீட்டிலுள்ள பிராமணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன்
நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக்
கொண்டார்கள்.
சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில்
சிலரே அவர்களுடன் வாழ்க்கை
அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள்.
பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான்
சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.
நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர்
இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர்.
அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே
தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது
வெகு காலம் முன்பு.
இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என
ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப்
பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என
எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென
பேசிமுடித்தார்காந்தியடிகள்.முன்வரிசையில் இருந்த நான்
திரும்பிக்கொண்டேன்.
ஜாதியை உருவாக்கிய பிராமணன். பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.-
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்.... )
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும்
ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 8
திருமண சடங்குகளின் விளக்கங்கள்.
கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில்
இது வரை ஏழு பார்த்தோம்.
எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு.
`கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி' என ஆண்டாள் பாசுரம் போலவும்,
மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை'ப்பற்றுவது போலவும் அமைந்தது இச்சடங்கு.
மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை,
எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வது தான்
கல்யாணத்தின் முக்கிய அம்சம்.
9. கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?
முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக.
இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும்,
மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக...
நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக...
5-ஆவது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக...
6-ஆவது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு...
7-ஆவது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க...
தாலிக்கு அதாவது, `நம் குடும்பம் இனிமேல் ஒன்று. உன் அப்பா யாரோ. என்
அப்பா யாரோ... ஆனால், இன்று முதல் நாம் ஒன்று' என சங்கப் பாடல் படித்தோமே
அதே பொருளுக்காக... யாகத்தை நெருங்குவதுதான் 7-ஆவது அடி.
இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர்.
இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல்
இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம்
செய்துகொண்டன.
இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது.
சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா
ஆனது.``மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலமும் உண்டே...''
என்கிறது தொல்காப்பியம்.
கரணம் என்றால் கல்யாணம். அதாவது... மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண
கர்மாக்கள்... மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம்
என்னவென்றால்... தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும்
கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள், தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட
தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.
மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம்
பண்ணி வைக்கும் போது... அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட
இயலாதென்பதால் தாலியை... பனை ஓலை கயிறை - மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து
மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.
மேற்கூறிய... தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு.
``மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே.''என்பதில்
கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். `பிற்பாடு
- இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது ஒன்றாக இருந்த காலம் உண்டு'
என்று தெரிய வரும்.
ஏன் மாறிப் போனது?
முதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச்
சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து
வைப்போம். அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என
நினைத்தார்கள் பிராமணர்கள்.
இரண்டாவது காரணம்... இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து
நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ
இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து
திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட `களவியல்' மரபுக்காரர்களாயிற்றே.
அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்...
மவுனப் புன்னகையே மந்திரமாக... கற்பியல் முறையில் காதல் மணம்
கண்டவர்களாயிற்றே. அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில்
பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் `விவாகரத்து'
ஏற்பட்டுவிட்டது.
இத்தகைய காரணங்களால்... சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த
பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை
கீழ்ப்படுத்தினார்கள்.
இப்படி செய்வதற்கு... அவர்கள் கையில் கசங்காமல் இருந்த `மனு ஸ்மிருதி'
தான் ரொம்ப உதவியாக இருந்தது.
மனுமூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள்... இந்தக்
கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச்
செய்தார்கள்.யாருக்கு க்ஷத்திரியர்களுக்கா...? வைஸியர்களுக்கா...? இல்லை,
இல்லை சண்டாளர்களுக்கு.
சண்டாளர்களா? யாரவர்கள்? மனு கூற்றுப்படி `சண்டாளர்கள்' யார் என்பதை என்
எழுத்தில் என்னால் கூற முடியவில்லை.
என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்.... )
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும்
ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
இது வரை ஏழு பார்த்தோம்.
எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு.
`கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி' என ஆண்டாள் பாசுரம் போலவும்,
மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை'ப்பற்றுவது போலவும் அமைந்தது இச்சடங்கு.
மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை,
எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வது தான்
கல்யாணத்தின் முக்கிய அம்சம்.
9. கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?
முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக.
இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும்,
மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக...
நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக...
5-ஆவது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக...
6-ஆவது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு...
7-ஆவது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க...
தாலிக்கு அதாவது, `நம் குடும்பம் இனிமேல் ஒன்று. உன் அப்பா யாரோ. என்
அப்பா யாரோ... ஆனால், இன்று முதல் நாம் ஒன்று' என சங்கப் பாடல் படித்தோமே
அதே பொருளுக்காக... யாகத்தை நெருங்குவதுதான் 7-ஆவது அடி.
இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர்.
இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல்
இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம்
செய்துகொண்டன.
இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது.
சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா
ஆனது.``மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலமும் உண்டே...''
என்கிறது தொல்காப்பியம்.
கரணம் என்றால் கல்யாணம். அதாவது... மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண
கர்மாக்கள்... மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம்
என்னவென்றால்... தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும்
கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள், தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட
தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.
மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம்
பண்ணி வைக்கும் போது... அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட
இயலாதென்பதால் தாலியை... பனை ஓலை கயிறை - மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து
மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.
மேற்கூறிய... தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு.
``மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே.''என்பதில்
கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். `பிற்பாடு
- இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது ஒன்றாக இருந்த காலம் உண்டு'
என்று தெரிய வரும்.
ஏன் மாறிப் போனது?
முதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச்
சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து
வைப்போம். அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என
நினைத்தார்கள் பிராமணர்கள்.
இரண்டாவது காரணம்... இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து
நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ
இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து
திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட `களவியல்' மரபுக்காரர்களாயிற்றே.
அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்...
மவுனப் புன்னகையே மந்திரமாக... கற்பியல் முறையில் காதல் மணம்
கண்டவர்களாயிற்றே. அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில்
பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் `விவாகரத்து'
ஏற்பட்டுவிட்டது.
இத்தகைய காரணங்களால்... சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த
பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை
கீழ்ப்படுத்தினார்கள்.
இப்படி செய்வதற்கு... அவர்கள் கையில் கசங்காமல் இருந்த `மனு ஸ்மிருதி'
தான் ரொம்ப உதவியாக இருந்தது.
மனுமூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள்... இந்தக்
கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச்
செய்தார்கள்.யாருக்கு க்ஷத்திரியர்களுக்கா...? வைஸியர்களுக்கா...? இல்லை,
இல்லை சண்டாளர்களுக்கு.
சண்டாளர்களா? யாரவர்கள்? மனு கூற்றுப்படி `சண்டாளர்கள்' யார் என்பதை என்
எழுத்தில் என்னால் கூற முடியவில்லை.
என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்.... )
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும்
ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 7
`தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்க சடங்குகளை கொண்டு வந்தனர்.
"நிச்சயதாம்பூலம்" "காசியாத்திரை" "ஊஞ்சலாட்டுதல்"
"திருஷ்டி சுத்தி போடுவது" "ஆரத்தி எடுப்பது" "குளிப்பாட்டு"
"புடைவைச் சடங்கு" .....
இன்னும் இருக்கு!!!
கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு
தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?
`இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்
தான். உன்னுடன் தான் வாழ வேண்டும் அவள்' என இரண்டு பேரையும் சேர்த்து
வைத்தது தீர்ப்பு. இஃது களவியல் என்றால்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு,
சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள்.
காதலை அஃதாவது கற்பியலை.``யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்
நீர்போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...''நானும் நீயும் யார் யாராகவோ
இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள்
என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது
தெரியவில்லை.
ஆனாலும்... இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்...
எப்படி தெரியுமா...
செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல
அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.
இப்படி காதல்
வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.
இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த
தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி' வந்த கதை சுவாரஸ்யமானது.
திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை
திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி
அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்' என எழுதி ஒரு நூலில் கோர்த்து
கழுத்தில் கட்டி விடுவார்கள்.
பனைமரத்துக்கு `தால்' என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக்
கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது.
பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன்
கட்டித் தொங்க விட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.
``இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே... இவ்வளவு மகிழ்ச்சியுடன்
காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து
விழாக்களாக கொண்டாடினால் தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?''
கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள். ஒன்றா,
இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன.... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன் தான் கணவன் என்பதை
நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை
மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு
பெயர்நிச்சயதாம்பூலம்.
2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. முதலில் காசி யாத்திரை.சந்நியாசம்
வாங்க வேண்டுமென்றால்... மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம்
வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன்
என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில்
சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கல்யாணத்துக்கு முன்`காசியாத்திரை'
என்றொரு சடங்கு.
அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல
`பாவ்லா' (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி
திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.
3.ஊஞ்சலாட்டுதல்குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது
அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில்
சொல்லப்பட்டுள்ளது.
அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம்
இதற்காகத்தான் ஊஞ்சல்.
4.மாலை மாற்றுவது:இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும்
சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன்
அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
5.திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது
என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.
6.நீராஜனம்எனப்படும் ஆரத்தி எடுப்பது.
7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போது தான் நேருக்கு நேராக
பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து
அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
8. பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே
அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.
அவளது நனைந்த புடைவையை களைந்து விட்டு... புதுப் புடைவையை மணமகன் உடுத்தி
விடும் போது... இந்த சேலை வளர்வது போல் நம்முடைய மகிழ்ச்சி.
சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு.
இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்... அவை மறுபடியும் எப்படி
மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
"திருஷ்டி சுத்தி போடுவது" "ஆரத்தி எடுப்பது" "குளிப்பாட்டு"
"புடைவைச் சடங்கு" .....
இன்னும் இருக்கு!!!
கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு
தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?
`இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்
தான். உன்னுடன் தான் வாழ வேண்டும் அவள்' என இரண்டு பேரையும் சேர்த்து
வைத்தது தீர்ப்பு. இஃது களவியல் என்றால்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு,
சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள்.
காதலை அஃதாவது கற்பியலை.``யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்
நீர்போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...''நானும் நீயும் யார் யாராகவோ
இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள்
என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது
தெரியவில்லை.
ஆனாலும்... இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்...
எப்படி தெரியுமா...
செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல
அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.
இப்படி காதல்
வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.
இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த
தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி' வந்த கதை சுவாரஸ்யமானது.
திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை
திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி
அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்' என எழுதி ஒரு நூலில் கோர்த்து
கழுத்தில் கட்டி விடுவார்கள்.
பனைமரத்துக்கு `தால்' என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக்
கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது.
பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன்
கட்டித் தொங்க விட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.
``இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே... இவ்வளவு மகிழ்ச்சியுடன்
காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து
விழாக்களாக கொண்டாடினால் தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?''
கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள். ஒன்றா,
இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன.... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன் தான் கணவன் என்பதை
நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை
மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு
பெயர்நிச்சயதாம்பூலம்.
2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. முதலில் காசி யாத்திரை.சந்நியாசம்
வாங்க வேண்டுமென்றால்... மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம்
வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன்
என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில்
சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கல்யாணத்துக்கு முன்`காசியாத்திரை'
என்றொரு சடங்கு.
அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல
`பாவ்லா' (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி
திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.
3.ஊஞ்சலாட்டுதல்குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது
அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில்
சொல்லப்பட்டுள்ளது.
அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம்
இதற்காகத்தான் ஊஞ்சல்.
4.மாலை மாற்றுவது:இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும்
சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன்
அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
5.திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது
என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.
6.நீராஜனம்எனப்படும் ஆரத்தி எடுப்பது.
7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போது தான் நேருக்கு நேராக
பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து
அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
8. பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே
அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.
அவளது நனைந்த புடைவையை களைந்து விட்டு... புதுப் புடைவையை மணமகன் உடுத்தி
விடும் போது... இந்த சேலை வளர்வது போல் நம்முடைய மகிழ்ச்சி.
சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு.
இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்... அவை மறுபடியும் எப்படி
மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம்.
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 6
தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.
தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை
தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள்
தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.
இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.
சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை
வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக
வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...'ஏ... காவல் காக்கும்
அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக்
கொடு... என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.
ஏன் என்று கேட்டால்... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச்
சத்தம் போட்டால் தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும்.
அப்போது தான் நமது கோரிக்கை நிறைவேற்றப்படும்... என்பது நம்பிக்கை.
இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவது போல
பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா?
க்ரீம் த்ரீம் ப்ரீம்... என அடி வயிற்றிலிருந்து அதிரும்படியான சொற்களை
உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.
இந்த உரத்த வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கதமிழர்களுக்கு கைகூப்ப
கற்றுக் கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?
தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில்
மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த
ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல... அப்போது தாஸே இனத்தவர்கள்
ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து... 'இனி உங்களை
தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்
.அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த 'தாஸே' இனப்
பெயரிலிருந்து தான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு
அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது. தங்களை அன்று கும்பிட்ட
'தாஸே' இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக்
கொடுத்தனர் பிராமணர்கள்
கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக... தமிழர்களின்
உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.
"நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில
மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி
வரும். தவிர மனிதர்களுக்குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி
பேசுவீர்கள்?.. என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத்
தொடங்கினார்கள்.
புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள் தான் இன்றுவரை கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால்... கடவுளுக்கு
உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உபதேசிப்பது என்னவென்றால்... "கடவுளுக்கு
உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாதது தான் உண்மையான உருவம்
வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில்
சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு... தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க
வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா' தொடங்கியது படையல் பண்பாடு.
நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டியலில்
பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன.
தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.
வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக
வேண்டியதுதானே நியதி?... உண்டானது.
கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின்
கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு
மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின்
திருமணமுறை அதென்ன களவியல்?
பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி
பொங்க முற்றுகை யிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும்
பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின்
முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.
இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை
அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி
அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.
சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு... அன்ன நடை போட்டா அவளை
அடைய முடியும்?
பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது.
ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம்
பார்ப்பதில்லை.ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி
சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.
ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே... தேடுகிறார்கள்.
சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய்
அலசுகிறது. கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக்
கண்டுபிடித்து விடுகிறது கூட்டம். பக்கத்து வீட்டு காளை அவளை பருகி
நெடுநேரம் ஆகியிருந்தது. கையும் களவுமாக பிடித்த பின் என்ன தண்டனை
தெரியுமா?
--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள்
தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.
இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.
சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை
வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக
வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...'ஏ... காவல் காக்கும்
அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக்
கொடு... என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.
ஏன் என்று கேட்டால்... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச்
சத்தம் போட்டால் தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும்.
அப்போது தான் நமது கோரிக்கை நிறைவேற்றப்படும்... என்பது நம்பிக்கை.
இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவது போல
பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா?
க்ரீம் த்ரீம் ப்ரீம்... என அடி வயிற்றிலிருந்து அதிரும்படியான சொற்களை
உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.
இந்த உரத்த வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கதமிழர்களுக்கு கைகூப்ப
கற்றுக் கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?
தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில்
மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த
ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல... அப்போது தாஸே இனத்தவர்கள்
ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து... 'இனி உங்களை
தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்
.அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த 'தாஸே' இனப்
பெயரிலிருந்து தான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு
அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது. தங்களை அன்று கும்பிட்ட
'தாஸே' இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக்
கொடுத்தனர் பிராமணர்கள்
கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக... தமிழர்களின்
உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.
"நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில
மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி
வரும். தவிர மனிதர்களுக்குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி
பேசுவீர்கள்?.. என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத்
தொடங்கினார்கள்.
புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள் தான் இன்றுவரை கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால்... கடவுளுக்கு
உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உபதேசிப்பது என்னவென்றால்... "கடவுளுக்கு
உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாதது தான் உண்மையான உருவம்
வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில்
சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு... தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க
வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா' தொடங்கியது படையல் பண்பாடு.
நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டியலில்
பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன.
தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.
வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக
வேண்டியதுதானே நியதி?... உண்டானது.
கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின்
கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு
மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின்
திருமணமுறை அதென்ன களவியல்?
பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி
பொங்க முற்றுகை யிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும்
பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின்
முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.
இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை
அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி
அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.
சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு... அன்ன நடை போட்டா அவளை
அடைய முடியும்?
பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது.
ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம்
பார்ப்பதில்லை.ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி
சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.
ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே... தேடுகிறார்கள்.
சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய்
அலசுகிறது. கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக்
கண்டுபிடித்து விடுகிறது கூட்டம். பக்கத்து வீட்டு காளை அவளை பருகி
நெடுநேரம் ஆகியிருந்தது. கையும் களவுமாக பிடித்த பின் என்ன தண்டனை
தெரியுமா?
--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 5
வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள். வழிபாடு என்றால்? பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள்.பூணூல் வந்த கதை வேடிக்கையானது.
புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம்
கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக்
காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.
இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக்
கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல
விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.
பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.
(i) கல்லை வழிபடுதல்-Fetish worship
(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship
(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship
(iv) விக்ரம், சிலை செய்து வழிபடுதல் -Idol worship நாகரிக பண்பாட்டு
வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு
வந்தன.
தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச்
சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச்
சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.வழிபாடு என்றால்?
தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே
அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.
பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல்
நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால்
நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு.
பூசெய் = பூவால் செய் இது இணைந்தது தான் பூசெய் பூசை என இப்போதைய
வார்த்தையின் வடிவம் தோன்றியது. இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர்
எஸ்.கே. சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக
இருந்திருக்கிறது.நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு...
என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.
'நாயக' நாயகி பாவம்' என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ்
இனம்தான். இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும்,
வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள்
தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலி
வரை சமணம் பரவிவிட்டது.நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது.
வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து
நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.அவர்களில் ஒருவர்தான் மகேந்திர
பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது.
புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு 'சம்மந்தி' உறவு முறை வரை நெருங்கி
விட்ட நிலையில்...பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறி முறைகளை இங்கே
விதைத்து வைத்தனர்.
புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால்
மறுபடியும் தலை தூக்கின.
பிராமணர்கள் இங்கே வந்த போது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது
பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)...
பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.
என்ன இது? என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள்.
'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப்
பட்டிருக்கும் அந்தஸ்து'...
ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது. வேத கர்மாக்களை
நிறைவேற்றுவதற்கான சடங்குகளியல் ஈடுபட்டிருக்கும் போது.. வஸ்திரத்தை
தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த
விதி.
அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில்
ஈடுபடும் போது அடிக்கடி அமர்ந்து எழுகின்ற போதும்.. வஸ்திரம் அவிழ்ந்து
நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று
பார்த்தார்கள்.
இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும் போது உபத்திரவம் செய்யாமல்
இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.
இதை 'அந்தஸ்து' என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து
கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள்
இருந்தன.
சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக் கூட கொல்லக்கூடாது.
நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது!
மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்.. கொஞ்சம்
கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த
பிறகு...தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது.
இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்.. "இவை வெறும்
கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை
தெய்வமாக்குகிறேன்" என்றனர்.
பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த
தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக்
கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?
--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக்
காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.
இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக்
கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல
விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.
பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.
(i) கல்லை வழிபடுதல்-Fetish worship
(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship
(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship
(iv) விக்ரம், சிலை செய்து வழிபடுதல் -Idol worship நாகரிக பண்பாட்டு
வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு
வந்தன.
தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச்
சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச்
சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.வழிபாடு என்றால்?
தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே
அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.
பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல்
நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால்
நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு.
பூசெய் = பூவால் செய் இது இணைந்தது தான் பூசெய் பூசை என இப்போதைய
வார்த்தையின் வடிவம் தோன்றியது. இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர்
எஸ்.கே. சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக
இருந்திருக்கிறது.நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு...
என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.
'நாயக' நாயகி பாவம்' என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ்
இனம்தான். இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும்,
வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள்
தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலி
வரை சமணம் பரவிவிட்டது.நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது.
வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து
நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.அவர்களில் ஒருவர்தான் மகேந்திர
பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது.
புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு 'சம்மந்தி' உறவு முறை வரை நெருங்கி
விட்ட நிலையில்...பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறி முறைகளை இங்கே
விதைத்து வைத்தனர்.
புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால்
மறுபடியும் தலை தூக்கின.
பிராமணர்கள் இங்கே வந்த போது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது
பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)...
பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.
என்ன இது? என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள்.
'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப்
பட்டிருக்கும் அந்தஸ்து'...
ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது. வேத கர்மாக்களை
நிறைவேற்றுவதற்கான சடங்குகளியல் ஈடுபட்டிருக்கும் போது.. வஸ்திரத்தை
தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த
விதி.
அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில்
ஈடுபடும் போது அடிக்கடி அமர்ந்து எழுகின்ற போதும்.. வஸ்திரம் அவிழ்ந்து
நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று
பார்த்தார்கள்.
இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும் போது உபத்திரவம் செய்யாமல்
இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.
இதை 'அந்தஸ்து' என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து
கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள்
இருந்தன.
சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக் கூட கொல்லக்கூடாது.
நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது!
மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்.. கொஞ்சம்
கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த
பிறகு...தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது.
இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்.. "இவை வெறும்
கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை
தெய்வமாக்குகிறேன்" என்றனர்.
பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த
தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக்
கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?
--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 4
புத்தரும் X பிராமணர்களும்.
முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது,
மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம்
வேண்டாமா?...
-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தை
விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.
காகம் கொத்தி ஆல மரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும்,
விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத
கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை
முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.
முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணிகளை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல
மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த
புத்தர்... தன் சிந்தனையோடு ஒத்துப்போகும் சில வாலிபர்களை
தேர்ந்தெடுத்தார். புத்தருக்கு அப்போது முப்பது வயது இருக்கலாம்.
முறுக்கேறிய தேகம்... முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய
குணங்களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.
எங்கேனும் வேள்விச்சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர்
படை.யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர்களை
அணுகியது.. பாரப்பா... இப்படி உயிர்களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை
கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள்
நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.
நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து
கொடுக்காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே.
ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை...
ப்ராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம்
நடத்துபவர்கள்... உடனடியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் யாகம்
நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.
புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப்போது தேர்தல் வந்தால்
கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக்
கும்பிடுவார்களே... அதே போல ஆனால் பதவியை எதிர்பாராமல் ஒவ்வொரு வீடாய்ப்
புகுந்தார் புத்தர். யாகங்கள் நடத்தாதீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப்
போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள். இது தான்
புத்தோபதேசம்
இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். புத்தருக்கு
நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில்
மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன."Don't pour
innocent matters into the fire. God wants your love only"ஒன்றும்
அறியாத அப்பாவி ஜீவன்களை நெருப்புக்குள் போட்டு எரிக்காதீர்கள். கடவுள்
இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட்டுமே விரும்புகிறார் என
கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே
வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.
"Anti Vedic" வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடையாளங்களை
பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ்சகமான முடிவுக்கு வந்தார் புத்தர்.என்ன
செய்யலாம்?
மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்கலாம். இவை வெளிப்புற அடையாளங்கள்.
தலையிலிருந்து ரோமங்களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல்,
மனசிலிருந்து ஆசையைக் களைய வேண்டும். பெண்ணாசை, பொருளாசை துறந்து விட்டு
வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.
தனி குழாமுக்கு இப்படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு
வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களிடம் நம் கொள்கையைப் பரப்புவதுதான்
முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...
உருவாகின புத்த விஹாரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசிகள்
என (Buddhist monks)பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற
ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன.
மக்கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின்
பிரச்சாரங்களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண்ணிக்கை
சரசரவென அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றைய பிஹார் மாநிலத்துக்கு இப்பெயர் வர
காரணமே. அங்கே புத்த விஹார்கள் எக்கச்சக்கமாய் இருந்தது தான் காரணம் என்ன
ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.
புத்தர் காலத்துக்குப் பிறகும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய
நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறு பரிசீலனை செய்ய
ஆரம்பித்தனர்.
உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்தனர். பிராமணர்களின் மிகப் பெரிய
பலமே... யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து
கொள்வது தான்.
ஆங்கிலத்தில் 'Adoption' என சொல்வோமே...புத்த இயக்கத்திடமிருந்து...
ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார்கள்.
இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இதுபோன்ற
மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்
பிராமணர்கள்.
மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு
வந்தனர் பிராமணர்களும் பின் தொடர்ந்தனர் பிறகு?...அக்னி ஹோத்ரம் ராமானுஜ
தாத்தாச்சாரியார்,
(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம்
வேண்டாமா?...
-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தை
விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.
காகம் கொத்தி ஆல மரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும்,
விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத
கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை
முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.
முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணிகளை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல
மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த
புத்தர்... தன் சிந்தனையோடு ஒத்துப்போகும் சில வாலிபர்களை
தேர்ந்தெடுத்தார். புத்தருக்கு அப்போது முப்பது வயது இருக்கலாம்.
முறுக்கேறிய தேகம்... முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய
குணங்களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.
எங்கேனும் வேள்விச்சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர்
படை.யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர்களை
அணுகியது.. பாரப்பா... இப்படி உயிர்களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை
கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள்
நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.
நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து
கொடுக்காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே.
ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை...
ப்ராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம்
நடத்துபவர்கள்... உடனடியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் யாகம்
நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.
புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப்போது தேர்தல் வந்தால்
கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக்
கும்பிடுவார்களே... அதே போல ஆனால் பதவியை எதிர்பாராமல் ஒவ்வொரு வீடாய்ப்
புகுந்தார் புத்தர். யாகங்கள் நடத்தாதீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப்
போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள். இது தான்
புத்தோபதேசம்
இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். புத்தருக்கு
நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில்
மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன."Don't pour
innocent matters into the fire. God wants your love only"ஒன்றும்
அறியாத அப்பாவி ஜீவன்களை நெருப்புக்குள் போட்டு எரிக்காதீர்கள். கடவுள்
இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட்டுமே விரும்புகிறார் என
கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே
வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.
"Anti Vedic" வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடையாளங்களை
பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ்சகமான முடிவுக்கு வந்தார் புத்தர்.என்ன
செய்யலாம்?
மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்கலாம். இவை வெளிப்புற அடையாளங்கள்.
தலையிலிருந்து ரோமங்களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல்,
மனசிலிருந்து ஆசையைக் களைய வேண்டும். பெண்ணாசை, பொருளாசை துறந்து விட்டு
வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.
தனி குழாமுக்கு இப்படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு
வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களிடம் நம் கொள்கையைப் பரப்புவதுதான்
முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...
உருவாகின புத்த விஹாரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசிகள்
என (Buddhist monks)பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற
ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன.
மக்கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின்
பிரச்சாரங்களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண்ணிக்கை
சரசரவென அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றைய பிஹார் மாநிலத்துக்கு இப்பெயர் வர
காரணமே. அங்கே புத்த விஹார்கள் எக்கச்சக்கமாய் இருந்தது தான் காரணம் என்ன
ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.
புத்தர் காலத்துக்குப் பிறகும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய
நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறு பரிசீலனை செய்ய
ஆரம்பித்தனர்.
உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்தனர். பிராமணர்களின் மிகப் பெரிய
பலமே... யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து
கொள்வது தான்.
ஆங்கிலத்தில் 'Adoption' என சொல்வோமே...புத்த இயக்கத்திடமிருந்து...
ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார்கள்.
இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இதுபோன்ற
மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்
பிராமணர்கள்.
மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு
வந்தனர் பிராமணர்களும் பின் தொடர்ந்தனர் பிறகு?...அக்னி ஹோத்ரம் ராமானுஜ
தாத்தாச்சாரியார்,
(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை
அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 3 (3)
2 The rest of the King's wives say to the Queen: [7.4.19c] "O Queen,
cover yourself and the horse with this cloth and pray thus: 'O Horse,
You are capable of impregnating me. I am ready. Take me.'" The priest
covers the queen and the horse with a cloth.
3. The queen hugs the slain-horse saying thus: [7.4.19e] "Let us hold
each other with our (hind) limbs."
4. The Priest says the following (mantra): [7.4.19f] "May the horse
expel its sperm and may the Queen receive (the sperm)."
5. The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in
between the legs of the queen. Excite the queen's vagina so that it
will receive your huge penis". The Queen then places the horse's limp
penis in between her legs.
6. The Queen once again calls out aloud: [7.4.19h] "O Mother, no-one
has slept with me. This good-for nothing horse is fast asleep."
7. The other women sorrounding the slain horse and the queen respond
thus: [7.4.19i] "O Queen, just like the one who, after collecting the
bamboo poles from the forest ties them together first places them
upright on the ground, lift your vagina and hold it up. Later, just
like the one who sifts grain from the chaff exults when the cool wind
blows, you must relax and exult."
8. The Queen once again complains aloud about the somnolent horse to
her mother. [7.4.19k]
9. All the other women say thus: [7.4.19l] "O Queen, grieve not. You
may not be aware that you have been taken by the horse. Just like a
slave-girl who gets to sleep with her master and rejoices without
expecting anything in return."
10. "O Queen, Rejoice, that the horse has accepted you."
11. They all say: [7.4.19n] "Here we see a female bird warbling around
a male bird (even after mating). It is unsatisfied and restless. O
Queen, you are behaving like that bird. This is not good."
12. "You can rejoice and be happy that the horse has accepted you. Now
please stop complaining about it." 13. [7.4.19p] "O queen. Have no
doubt. Just like your father has done to your mother when they climbed
on to a wooden cot, and your father entered her saying 'I am placing
my penis inside your vagina', the Horse has entered you. Have no
doubt. Now, please get up."
இந்தக் கண்ராவிகளைக் கண்டித்தால் அரவிந்தன் நீலகண்டன்களுக்கும்,
ஜடாயுக்களுக்கும், ஹரிஹரன் களுக்கும்எங்கெங்கெல்லாமோ எரிச்சல்! நான் என்ன
செய்ய.. உங்கள் மரமண்டைகளுக்கு எல்லாமே புனிதம் தான்! குதிரையின்
ஆண்குறியும், ராணியின் பெண்குறியும், பார்ப்பனர்களின் கேவலமான அனிமல்
செக்ஸ் மந்திரங்களும் கூட!
The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in
between the legs of the queen. Excite the queen's vagina so that it
will receive your huge penis". The Queen then places the horse's limp
penis in between her legs. 6. The Queen once again calls out aloud:
[7.4.19h] "O Mother, no-one has slept with me. This good-for nothing
horse is fast asleep."
ஓ குதிரையே, உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில்
விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய
குறியானது அவளது குறிக்குள்
ஈர்க்கப்படட்டும் என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன்
உடலுறவு கொள்கிறாள் ... "அம்மா...என்னுடன் யாரும் படுத்த்தில்லை... இந்த
குதிரயோ ஒன்றும் செய்யாமல் தூங்குகிறது!" என்ற புலம்பலுடன்! மானங்கெட்ட
பிறவிகள் இந்த பிராமணீயக் காவலர்கள்!
References: • Ralph Thomas Hotchkin Griffith, The Texts of the White
Yajurveda. Translated with a Popular Commentary (1899).
• Ramavarapu Krishnamurti Shastri (trans.), Krishna Yajurvedeeya
Taittiriya Samhita, Book VII, The Tirupati Tirumala Devasthanams,
Tirumala Tirupati, Andhra Pradesh (2003).
எழுதியவர் OSAI CHELLA
Source: http://osaichella.blogspot.com /2007/03/horse-sacrifice.html" ======
மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு
கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... "ஏ... ராஜா, இந்த யாகத்தை
நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும்
தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்டஉன் ராணியையும்
நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கிபிறகு அழைத்துச் செல்லவேண்டும்"
என்றார்களாம்.
அதன்படியே முதல் நாள் இரவு குதிரையின் உறுப்பை பிடித்துக்
கொண்டிருந்தவள்.. மறு நாள் இரவு யாகம் நடத்திய பிராமணர்களுடன்
இருக்கிறாள்.
இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். "மனித தர்மம் மிருக காருண்யம்
இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?"என யாகம்
நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: "குதிரைக்கு மோட்சம் கிடைக்கும்.
லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்" என்று.
புத்தர் திரும்ப கேட்டார்."ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்
போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராமணனாகிய
நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா?
அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால்
உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?"
ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப...
திடுக்கிட்டுப் போனார்கள்
பிராமணர்கள்.பிறகு...?
--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
cover yourself and the horse with this cloth and pray thus: 'O Horse,
You are capable of impregnating me. I am ready. Take me.'" The priest
covers the queen and the horse with a cloth.
3. The queen hugs the slain-horse saying thus: [7.4.19e] "Let us hold
each other with our (hind) limbs."
4. The Priest says the following (mantra): [7.4.19f] "May the horse
expel its sperm and may the Queen receive (the sperm)."
5. The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in
between the legs of the queen. Excite the queen's vagina so that it
will receive your huge penis". The Queen then places the horse's limp
penis in between her legs.
6. The Queen once again calls out aloud: [7.4.19h] "O Mother, no-one
has slept with me. This good-for nothing horse is fast asleep."
7. The other women sorrounding the slain horse and the queen respond
thus: [7.4.19i] "O Queen, just like the one who, after collecting the
bamboo poles from the forest ties them together first places them
upright on the ground, lift your vagina and hold it up. Later, just
like the one who sifts grain from the chaff exults when the cool wind
blows, you must relax and exult."
8. The Queen once again complains aloud about the somnolent horse to
her mother. [7.4.19k]
9. All the other women say thus: [7.4.19l] "O Queen, grieve not. You
may not be aware that you have been taken by the horse. Just like a
slave-girl who gets to sleep with her master and rejoices without
expecting anything in return."
10. "O Queen, Rejoice, that the horse has accepted you."
11. They all say: [7.4.19n] "Here we see a female bird warbling around
a male bird (even after mating). It is unsatisfied and restless. O
Queen, you are behaving like that bird. This is not good."
12. "You can rejoice and be happy that the horse has accepted you. Now
please stop complaining about it." 13. [7.4.19p] "O queen. Have no
doubt. Just like your father has done to your mother when they climbed
on to a wooden cot, and your father entered her saying 'I am placing
my penis inside your vagina', the Horse has entered you. Have no
doubt. Now, please get up."
இந்தக் கண்ராவிகளைக் கண்டித்தால் அரவிந்தன் நீலகண்டன்களுக்கும்,
ஜடாயுக்களுக்கும், ஹரிஹரன் களுக்கும்எங்கெங்கெல்லாமோ எரிச்சல்! நான் என்ன
செய்ய.. உங்கள் மரமண்டைகளுக்கு எல்லாமே புனிதம் தான்! குதிரையின்
ஆண்குறியும், ராணியின் பெண்குறியும், பார்ப்பனர்களின் கேவலமான அனிமல்
செக்ஸ் மந்திரங்களும் கூட!
The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in
between the legs of the queen. Excite the queen's vagina so that it
will receive your huge penis". The Queen then places the horse's limp
penis in between her legs. 6. The Queen once again calls out aloud:
[7.4.19h] "O Mother, no-one has slept with me. This good-for nothing
horse is fast asleep."
ஓ குதிரையே, உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில்
விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய
குறியானது அவளது குறிக்குள்
ஈர்க்கப்படட்டும் என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன்
உடலுறவு கொள்கிறாள் ... "அம்மா...என்னுடன் யாரும் படுத்த்தில்லை... இந்த
குதிரயோ ஒன்றும் செய்யாமல் தூங்குகிறது!" என்ற புலம்பலுடன்! மானங்கெட்ட
பிறவிகள் இந்த பிராமணீயக் காவலர்கள்!
References: • Ralph Thomas Hotchkin Griffith, The Texts of the White
Yajurveda. Translated with a Popular Commentary (1899).
• Ramavarapu Krishnamurti Shastri (trans.), Krishna Yajurvedeeya
Taittiriya Samhita, Book VII, The Tirupati Tirumala Devasthanams,
Tirumala Tirupati, Andhra Pradesh (2003).
எழுதியவர் OSAI CHELLA
Source: http://osaichella.blogspot.com /2007/03/horse-sacrifice.html" ======
மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு
கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... "ஏ... ராஜா, இந்த யாகத்தை
நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும்
தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்டஉன் ராணியையும்
நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கிபிறகு அழைத்துச் செல்லவேண்டும்"
என்றார்களாம்.
அதன்படியே முதல் நாள் இரவு குதிரையின் உறுப்பை பிடித்துக்
கொண்டிருந்தவள்.. மறு நாள் இரவு யாகம் நடத்திய பிராமணர்களுடன்
இருக்கிறாள்.
இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். "மனித தர்மம் மிருக காருண்யம்
இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?"என யாகம்
நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: "குதிரைக்கு மோட்சம் கிடைக்கும்.
லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்" என்று.
புத்தர் திரும்ப கேட்டார்."ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்
போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராமணனாகிய
நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா?
அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால்
உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?"
ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப...
திடுக்கிட்டுப் போனார்கள்
பிராமணர்கள்.பிறகு...?
--அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 3 (2)
"இதுதான் அஸ்வமேத யாகம்"
குதிரையின் ஆண்குறி அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்!
अश्वमेध"horse sacrifice"
ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான். சில முட்டாள் ஜன்மங்கள் மனுனீதியை
புகழும் பொழுது முழுக்கதையையும் சொல்லித்தான் ஆகவேண்டும்!
ஒரு பட்டத்து அரசி ஒரு பெரிய யாகத்தால் பலி கொடுக்கப்பட்ட ஆண்குதிரையின்
குறியை தன் பெண்குறிக்குள் வைத்து பிராமணர்களின் வேத கோசங்களோடு
புணர்வதுதான் மாபெரும் யாகமான அசுவத மேத யாகம் என்ற கண்றாவி
கருமாந்திரம்...
முழு விளக்கம் கீழே:
The Ashvamedha could only be conducted by a king. Its object was the
acquisition of power and glory, the sovereignty over neighbouring
provinces, and general prosperity of the kingdom.
The horse to be sacrificed must be a stallion, more than 24, but less
than 100 years old. The horse is sprinkled with water, and the
Adhvaryu and the sacrificer whisper formulas into its ear.
Anyone who should stop the horse is ritually cursed, and a dog is
killed symbolic of the punishment for the sinners. The horse is then
set loose towards the North-East, to roam around wherever it chooses,
for the period of one year (or half a year, according to some
commentators). The horse is associated with the Sun, and its yearly
course. If the horse wanders into neighbouring provinces hostile to
the sacrificer, they must be subjugated. The wandering horse is
attended by a hundred young men, sons of princes or high court
officials, charged with guarding the horse from all dangers and
inconvenience.
During the absence of the horse, an uninterrupted series of ceremonies
is performed in the sacrificer's home. After the return of the horse,
more ceremonies are performed. The horse is yoked to a gilded chariot,
together with three other horses, and RV 1.6.1,2 (YV 23.5,6) is
recited. The horse is then driven into water and bathed.
After this, it is anointed with ghee by the chief queen and two other
royal consorts. The chief queen anoints the fore-quarters, and the
others the barrel and the hind-quarters. They also entwine the horse's
head, neck, and tail with golden ornaments.
The sacrificer offers the horse the remains of the night's oblation of
grain. After this, the horse, a hornless he-goat, a wild ox (go-mrga,
Bos Gavaeus) are bound to sacrificial stakes near the fire, and
seventeen other animals are attached to the horse. A great number of
animals, both tame and wild, are tied to other stakes, according to a
commentator 609 in total (YV 24 consists of an exact enumeration).
Then the horse is slaughtered (YV 23.15, tr. Griffith) Steed, from thy
body, of thyself, sacrifice and accept thyself. Thy greatness can be
gained by none but thee.
The chief queen ritually calls on her fellow wives for pity. The three
queens walk around the dead horse reciting formulas. The chief queen
then has to mimic copulation with the dead horse, while the other
queens ritually utter obscenities.
On the next morning, the priests raise the queen from the place where
she has spent the night with the horse. With the Dadhikra verse (RV
4.39.6, YV 23.32), a verse used as a purifier after obscene language.
The three queens with a hundred golden, silver and copper needles
indicate the lines on the horse's body along which it will be
dissected. The horse is dissected, and its flesh roasted. Various
parts are offered to a host of deities and personified concepts with
cries of svaha "all-hail".
The Ashvastuti or Eulogy of the Horse follows (RV 1.162, YV 24.24–45),
concluding with: May this Steed bring us all-sustaining riches, wealth
in good kine, good horses, manly offspring Freedom from sin may Aditi
vouchsafe usl the Steed with our oblations gain us lordship! The
priests performing the sacrifice were recompensed with a part of the
booty won during the wandering of the horse.
According to a commentator, the spoils from the east was given to the
Hotar, while the Adhvaryu a maiden (a daughter of the sacrificer) and
the sacrificer's fourth wife. This part of the ritual also caused
considerable consternation among the scholars first editing the
Yajurveda. Griffith (1899) omits verses 23.20–31 (the ritual
obscenities), protesting that they are "not reproducible even in the
semi-obscurity of a learned European language" (alluding to other
instances where he renders explicit scenes in Latin rather than
English).
Today, there are full published translations of the passages, for
example Rangacharya (1999) and Shastri (2003) in Telugu. An
unexpurgated translation in modern English of the corresponding
passage in the TS (7.4.19) is given below.
[The wives of the king surround the slain horse]
1.The Queen, grieves thus: [7.4.19b] "O mother, no-one has taken me.
The little horsie is asleep".
குதிரையின் ஆண்குறி அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்!
अश्वमेध"horse sacrifice"
ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான். சில முட்டாள் ஜன்மங்கள் மனுனீதியை
புகழும் பொழுது முழுக்கதையையும் சொல்லித்தான் ஆகவேண்டும்!
ஒரு பட்டத்து அரசி ஒரு பெரிய யாகத்தால் பலி கொடுக்கப்பட்ட ஆண்குதிரையின்
குறியை தன் பெண்குறிக்குள் வைத்து பிராமணர்களின் வேத கோசங்களோடு
புணர்வதுதான் மாபெரும் யாகமான அசுவத மேத யாகம் என்ற கண்றாவி
கருமாந்திரம்...
முழு விளக்கம் கீழே:
The Ashvamedha could only be conducted by a king. Its object was the
acquisition of power and glory, the sovereignty over neighbouring
provinces, and general prosperity of the kingdom.
The horse to be sacrificed must be a stallion, more than 24, but less
than 100 years old. The horse is sprinkled with water, and the
Adhvaryu and the sacrificer whisper formulas into its ear.
Anyone who should stop the horse is ritually cursed, and a dog is
killed symbolic of the punishment for the sinners. The horse is then
set loose towards the North-East, to roam around wherever it chooses,
for the period of one year (or half a year, according to some
commentators). The horse is associated with the Sun, and its yearly
course. If the horse wanders into neighbouring provinces hostile to
the sacrificer, they must be subjugated. The wandering horse is
attended by a hundred young men, sons of princes or high court
officials, charged with guarding the horse from all dangers and
inconvenience.
During the absence of the horse, an uninterrupted series of ceremonies
is performed in the sacrificer's home. After the return of the horse,
more ceremonies are performed. The horse is yoked to a gilded chariot,
together with three other horses, and RV 1.6.1,2 (YV 23.5,6) is
recited. The horse is then driven into water and bathed.
After this, it is anointed with ghee by the chief queen and two other
royal consorts. The chief queen anoints the fore-quarters, and the
others the barrel and the hind-quarters. They also entwine the horse's
head, neck, and tail with golden ornaments.
The sacrificer offers the horse the remains of the night's oblation of
grain. After this, the horse, a hornless he-goat, a wild ox (go-mrga,
Bos Gavaeus) are bound to sacrificial stakes near the fire, and
seventeen other animals are attached to the horse. A great number of
animals, both tame and wild, are tied to other stakes, according to a
commentator 609 in total (YV 24 consists of an exact enumeration).
Then the horse is slaughtered (YV 23.15, tr. Griffith) Steed, from thy
body, of thyself, sacrifice and accept thyself. Thy greatness can be
gained by none but thee.
The chief queen ritually calls on her fellow wives for pity. The three
queens walk around the dead horse reciting formulas. The chief queen
then has to mimic copulation with the dead horse, while the other
queens ritually utter obscenities.
On the next morning, the priests raise the queen from the place where
she has spent the night with the horse. With the Dadhikra verse (RV
4.39.6, YV 23.32), a verse used as a purifier after obscene language.
The three queens with a hundred golden, silver and copper needles
indicate the lines on the horse's body along which it will be
dissected. The horse is dissected, and its flesh roasted. Various
parts are offered to a host of deities and personified concepts with
cries of svaha "all-hail".
The Ashvastuti or Eulogy of the Horse follows (RV 1.162, YV 24.24–45),
concluding with: May this Steed bring us all-sustaining riches, wealth
in good kine, good horses, manly offspring Freedom from sin may Aditi
vouchsafe usl the Steed with our oblations gain us lordship! The
priests performing the sacrifice were recompensed with a part of the
booty won during the wandering of the horse.
According to a commentator, the spoils from the east was given to the
Hotar, while the Adhvaryu a maiden (a daughter of the sacrificer) and
the sacrificer's fourth wife. This part of the ritual also caused
considerable consternation among the scholars first editing the
Yajurveda. Griffith (1899) omits verses 23.20–31 (the ritual
obscenities), protesting that they are "not reproducible even in the
semi-obscurity of a learned European language" (alluding to other
instances where he renders explicit scenes in Latin rather than
English).
Today, there are full published translations of the passages, for
example Rangacharya (1999) and Shastri (2003) in Telugu. An
unexpurgated translation in modern English of the corresponding
passage in the TS (7.4.19) is given below.
[The wives of the king surround the slain horse]
1.The Queen, grieves thus: [7.4.19b] "O mother, no-one has taken me.
The little horsie is asleep".
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 3 (2)
"இதுதான் அஸ்வமேத யாகம்"
குதிரையின் ஆண்குறி அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்!
अश्वमेध"horse sacrifice"
ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான். சில முட்டாள் ஜன்மங்கள் மனுனீதியை
புகழும் பொழுது முழுக்கதையையும் சொல்லித்தான் ஆகவேண்டும்!
ஒரு பட்டத்து அரசி ஒரு பெரிய யாகத்தால் பலி கொடுக்கப்பட்ட ஆண்குதிரையின்
குறியை தன் பெண்குறிக்குள் வைத்து பிராமணர்களின் வேத கோசங்களோடு
புணர்வதுதான் மாபெரும் யாகமான அசுவத மேத யாகம் என்ற கண்றாவி
கருமாந்திரம்...
முழு விளக்கம் கீழே:
The Ashvamedha could only be conducted by a king. Its object was the
acquisition of power and glory, the sovereignty over neighbouring
provinces, and general prosperity of the kingdom.
The horse to be sacrificed must be a stallion, more than 24, but less
than 100 years old. The horse is sprinkled with water, and the
Adhvaryu and the sacrificer whisper formulas into its ear.
Anyone who should stop the horse is ritually cursed, and a dog is
killed symbolic of the punishment for the sinners. The horse is then
set loose towards the North-East, to roam around wherever it chooses,
for the period of one year (or half a year, according to some
commentators). The horse is associated with the Sun, and its yearly
course. If the horse wanders into neighbouring provinces hostile to
the sacrificer, they must be subjugated. The wandering horse is
attended by a hundred young men, sons of princes or high court
officials, charged with guarding the horse from all dangers and
inconvenience.
During the absence of the horse, an uninterrupted series of ceremonies
is performed in the sacrificer's home. After the return of the horse,
more ceremonies are performed. The horse is yoked to a gilded chariot,
together with three other horses, and RV 1.6.1,2 (YV 23.5,6) is
recited. The horse is then driven into water and bathed.
After this, it is anointed with ghee by the chief queen and two other
royal consorts. The chief queen anoints the fore-quarters, and the
others the barrel and the hind-quarters. They also entwine the horse's
head, neck, and tail with golden ornaments.
The sacrificer offers the horse the remains of the night's oblation of
grain. After this, the horse, a hornless he-goat, a wild ox (go-mrga,
Bos Gavaeus) are bound to sacrificial stakes near the fire, and
seventeen other animals are attached to the horse. A great number of
animals, both tame and wild, are tied to other stakes, according to a
commentator 609 in total (YV 24 consists of an exact enumeration).
Then the horse is slaughtered (YV 23.15, tr. Griffith) Steed, from thy
body, of thyself, sacrifice and accept thyself. Thy greatness can be
gained by none but thee.
The chief queen ritually calls on her fellow wives for pity. The three
queens walk around the dead horse reciting formulas. The chief queen
then has to mimic copulation with the dead horse, while the other
queens ritually utter obscenities.
On the next morning, the priests raise the queen from the place where
she has spent the night with the horse. With the Dadhikra verse (RV
4.39.6, YV 23.32), a verse used as a purifier after obscene language.
The three queens with a hundred golden, silver and copper needles
indicate the lines on the horse's body along which it will be
dissected. The horse is dissected, and its flesh roasted. Various
parts are offered to a host of deities and personified concepts with
cries of svaha "all-hail".
The Ashvastuti or Eulogy of the Horse follows (RV 1.162, YV 24.24–45),
concluding with: May this Steed bring us all-sustaining riches, wealth
in good kine, good horses, manly offspring Freedom from sin may Aditi
vouchsafe usl the Steed with our oblations gain us lordship! The
priests performing the sacrifice were recompensed with a part of the
booty won during the wandering of the horse.
According to a commentator, the spoils from the east was given to the
Hotar, while the Adhvaryu a maiden (a daughter of the sacrificer) and
the sacrificer's fourth wife. This part of the ritual also caused
considerable consternation among the scholars first editing the
Yajurveda. Griffith (1899) omits verses 23.20–31 (the ritual
obscenities), protesting that they are "not reproducible even in the
semi-obscurity of a learned European language" (alluding to other
instances where he renders explicit scenes in Latin rather than
English).
Today, there are full published translations of the passages, for
example Rangacharya (1999) and Shastri (2003) in Telugu. An
unexpurgated translation in modern English of the corresponding
passage in the TS (7.4.19) is given below.
குதிரையின் ஆண்குறி அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்!
अश्वमेध"horse sacrifice"
ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான். சில முட்டாள் ஜன்மங்கள் மனுனீதியை
புகழும் பொழுது முழுக்கதையையும் சொல்லித்தான் ஆகவேண்டும்!
ஒரு பட்டத்து அரசி ஒரு பெரிய யாகத்தால் பலி கொடுக்கப்பட்ட ஆண்குதிரையின்
குறியை தன் பெண்குறிக்குள் வைத்து பிராமணர்களின் வேத கோசங்களோடு
புணர்வதுதான் மாபெரும் யாகமான அசுவத மேத யாகம் என்ற கண்றாவி
கருமாந்திரம்...
முழு விளக்கம் கீழே:
The Ashvamedha could only be conducted by a king. Its object was the
acquisition of power and glory, the sovereignty over neighbouring
provinces, and general prosperity of the kingdom.
The horse to be sacrificed must be a stallion, more than 24, but less
than 100 years old. The horse is sprinkled with water, and the
Adhvaryu and the sacrificer whisper formulas into its ear.
Anyone who should stop the horse is ritually cursed, and a dog is
killed symbolic of the punishment for the sinners. The horse is then
set loose towards the North-East, to roam around wherever it chooses,
for the period of one year (or half a year, according to some
commentators). The horse is associated with the Sun, and its yearly
course. If the horse wanders into neighbouring provinces hostile to
the sacrificer, they must be subjugated. The wandering horse is
attended by a hundred young men, sons of princes or high court
officials, charged with guarding the horse from all dangers and
inconvenience.
During the absence of the horse, an uninterrupted series of ceremonies
is performed in the sacrificer's home. After the return of the horse,
more ceremonies are performed. The horse is yoked to a gilded chariot,
together with three other horses, and RV 1.6.1,2 (YV 23.5,6) is
recited. The horse is then driven into water and bathed.
After this, it is anointed with ghee by the chief queen and two other
royal consorts. The chief queen anoints the fore-quarters, and the
others the barrel and the hind-quarters. They also entwine the horse's
head, neck, and tail with golden ornaments.
The sacrificer offers the horse the remains of the night's oblation of
grain. After this, the horse, a hornless he-goat, a wild ox (go-mrga,
Bos Gavaeus) are bound to sacrificial stakes near the fire, and
seventeen other animals are attached to the horse. A great number of
animals, both tame and wild, are tied to other stakes, according to a
commentator 609 in total (YV 24 consists of an exact enumeration).
Then the horse is slaughtered (YV 23.15, tr. Griffith) Steed, from thy
body, of thyself, sacrifice and accept thyself. Thy greatness can be
gained by none but thee.
The chief queen ritually calls on her fellow wives for pity. The three
queens walk around the dead horse reciting formulas. The chief queen
then has to mimic copulation with the dead horse, while the other
queens ritually utter obscenities.
On the next morning, the priests raise the queen from the place where
she has spent the night with the horse. With the Dadhikra verse (RV
4.39.6, YV 23.32), a verse used as a purifier after obscene language.
The three queens with a hundred golden, silver and copper needles
indicate the lines on the horse's body along which it will be
dissected. The horse is dissected, and its flesh roasted. Various
parts are offered to a host of deities and personified concepts with
cries of svaha "all-hail".
The Ashvastuti or Eulogy of the Horse follows (RV 1.162, YV 24.24–45),
concluding with: May this Steed bring us all-sustaining riches, wealth
in good kine, good horses, manly offspring Freedom from sin may Aditi
vouchsafe usl the Steed with our oblations gain us lordship! The
priests performing the sacrifice were recompensed with a part of the
booty won during the wandering of the horse.
According to a commentator, the spoils from the east was given to the
Hotar, while the Adhvaryu a maiden (a daughter of the sacrificer) and
the sacrificer's fourth wife. This part of the ritual also caused
considerable consternation among the scholars first editing the
Yajurveda. Griffith (1899) omits verses 23.20–31 (the ritual
obscenities), protesting that they are "not reproducible even in the
semi-obscurity of a learned European language" (alluding to other
instances where he renders explicit scenes in Latin rather than
English).
Today, there are full published translations of the passages, for
example Rangacharya (1999) and Shastri (2003) in Telugu. An
unexpurgated translation in modern English of the corresponding
passage in the TS (7.4.19) is given below.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 3 (1)
அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.
வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து
புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.
குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன?
விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப்
பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம்
பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே
போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.- என மூளைக்குள்
முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும்
விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட
காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.
எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை.
அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும்
தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.
ஏன் அக்னிப் புகை...?பிராமணர்கள் சொன்னார்கள், "ஊரெல்லாம் நலமாக இருக்க,
நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும்.
வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும்
கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்" என அக்னிப் புகைக்கிடையே
அழுத்தமாய் சொன்னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை
பலியிட்டிருக்கிறார்களா?என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.
பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில்
பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷுக்காக
இப்போது நாலு சக்கர பஸ்ஸை கூட பசு என கூறினாலும் கூறலாம்).
அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும்
புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது
பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில்
என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.
புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப் புணர்வு
ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை
பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.அப்போது தான் அசுவமேத யாகத்தின்
கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர்.
அதென்ன அசுவமேத யாகம்?ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு...
அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு
வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த
வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம்.
ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள்.
அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.
இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.
அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள்
முக்கியமாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக்
கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற
சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக
ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.
"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே..."என போகிறது
ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி 'வழிபட வேண்டிய'
முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே
அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத
யாகம்.
***********
தொடர்புடையது.
ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.
அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும்
இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை
நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து
வரப்பட்டார்.
இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee.
Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king's wives.
இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில்
அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு
நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.
ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.
இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று
வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.
ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன
எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி
வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த
பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான்.
அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர்
என்று புளுகுகிறார்.
ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை
மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?
- -பா.வே. மாணிக்கவேலர்.
SOURCE: விடுதலை
புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.
குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன?
விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப்
பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம்
பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே
போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.- என மூளைக்குள்
முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும்
விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட
காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.
எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை.
அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும்
தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.
ஏன் அக்னிப் புகை...?பிராமணர்கள் சொன்னார்கள், "ஊரெல்லாம் நலமாக இருக்க,
நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும்.
வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும்
கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்" என அக்னிப் புகைக்கிடையே
அழுத்தமாய் சொன்னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை
பலியிட்டிருக்கிறார்களா?என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.
பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில்
பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷுக்காக
இப்போது நாலு சக்கர பஸ்ஸை கூட பசு என கூறினாலும் கூறலாம்).
அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும்
புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது
பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில்
என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.
புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப் புணர்வு
ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை
பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.அப்போது தான் அசுவமேத யாகத்தின்
கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர்.
அதென்ன அசுவமேத யாகம்?ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு...
அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு
வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த
வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம்.
ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள்.
அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.
இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.
அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள்
முக்கியமாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக்
கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற
சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக
ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.
"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே..."என போகிறது
ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி 'வழிபட வேண்டிய'
முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே
அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத
யாகம்.
***********
தொடர்புடையது.
ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.
அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும்
இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை
நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து
வரப்பட்டார்.
இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee.
Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king's wives.
இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில்
அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு
நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.
ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.
இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று
வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.
ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன
எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி
வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த
பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான்.
அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர்
என்று புளுகுகிறார்.
ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை
மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?
- -பா.வே. மாணிக்கவேலர்.
SOURCE: விடுதலை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)