திங்கள், 31 அக்டோபர், 2016

மத்தேயு அதிகாரம் 5:36-48

36. உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது
வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.

37. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு
மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும்
திருப்பிக் கொடு.

40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை
எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு
மைல் தூரம் போ.

42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க
விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று
சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச்
சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப்
பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை
நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்
ஜெபம் பண்ணுங்கள்.

45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம
பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும்
தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள்
மேலும் மழையைப்
பெய்யப்பண்ணுகிறார்.

46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால்,
உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச்
செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?

48. ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண
சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக