1. அவர் திரளான
ஜனங்களைக் கண்டு
மலையின் மேல் ஏறினார்;
அவர் உட்கார்ந்தபொழுது,
அவருடைய சீஷர்கள்
அவரிடத்தில் வந்தார்கள்.
2. அப்பொழுது அவர்
தமது வாயைத் திறந்து
அவர்களுக்கு
உபதேசித்துச் சொன்னது
என்னவென்றால்:
3. ஆவியில்
எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
பரலோகராஜ்யம்
அவர்களுடையது.
4. துயரப்படுகிறவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள்
ஆறுதலடைவார்கள்.
5. சாந்தகுணமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள்
பூமியைச்
சுதந்தரித்துக்கொள்ளுவ
ார்கள்.
6. நீதியின்மேல்
பசிதாகமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள்
திருப்தியடைவார்கள்.
7. இரக்கமுடையவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள்
இரக்கம் பெறுவார்கள்.
8. இருதயத்தில்
சுத்தமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள்
தேவனைத் தரிசிப்பார்கள்.
9. சமாதானம்
பண்ணுகிறவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள்
தேவனுடைய புத்திரர்
என்னப்படுவார்கள்.
10. நீதியினிமித்தம்
துன்பப்படுகிறவர்கள்
பாக்கியவான்கள்;
பரலோகராஜ்யம்
அவர்களுடையது.
11. என்னிமித்தம் உங்களை
நிந்தித்துத்
துன்பப்படுத்தி, பலவித
தீமையான
மொழிகளையும்
உங்கள்பேரில் பொய்யாய்ச்
சொல்வார்களானால்
பாக்கியவான்களாயிருப்பீ
ர்கள்.
12. சந்தோஷப்பட்டு,
களிகூருங்கள்;
பரலோகத்தில் உங்கள் பலன்
மிகுதியாயிருக்கும்;
உங்களுக்கு முன்னிருந்த
தீர்க்கதரிசிகளையும்
அப்படியே
துன்பப்படுத்தினார்களே.
13. நீங்கள் பூமிக்கு
உப்பாயிருக்கிறீர்கள்;
உப்பானது
சாரமற்றுப்போனால்,
எதினால்
சாரமாக்கப்படும்?
வெளியே
கொட்டப்படுவதற்கும்,
மனுஷரால்
மிதிக்கப்படுவதற்குமே
ஒழிய வேறொன்றுக்கும்
உதவாது.
14. நீங்கள் உலகத்துக்கு
வெளிச்சமாயிருக்கிறீர்க
ள்; மலையின் மேல்
இருக்கிற பட்டணம்
மறைந்திருக்கமாட்டாது.
15. விளக்கைக் கொளுத்தி
மரக்காலால்
மூடிவைக்காமல்,
விளக்குத் தண்டின்மேல்
வைப்பார்கள்;
அப்பொழுது அது
வீட்டிலுள்ள யாவருக்கும்
வெளிச்சம் கொடுக்கும்.
16. இவ்விதமாய், மனுஷர்
உங்கள்
நற்கிரியைகளைக்கண்டு,
பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதாவை
மகிமைப்படுத்தும்படி,
உங்கள் வெளிச்சம் அவர்கள்
முன்பாகப்
பிரகாசிக்கக்கடவது.
17.
நியாயப்பிரமாணத்தையா
னாலும்
தீர்க்கதரிசனங்களையானால
ும் அழிக்கிறதற்கு
வந்தேன் என்று
எண்ணிக்கொள்ளாதேயுங்
கள்; அழிக்கிறதற்கு அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே
வந்தேன்.
18. வானமும் பூமியும்
ஒழிந்துபோனாலும்,
நியாயப்பிரமாணத்திலு
ள்ளதெல்லாம்
நிறைவேறுமளவும்,
அதில் ஒரு சிறு
எழுத்தாகிலும், ஒரு
எழுத்தின்
உறுப்பாகிலும் ஒழிந்து
போகாது என்று
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
19. ஆகையால், இந்தக்
கற்பனைகள்
எல்லாவற்றிலும்
சிறிதொன்றையாகிலு
ம் மீறி, அவ்விதமாய்
மனுஷருக்குப்
போதிக்கிறவன்
பரலோகராஜ்யத்தில்
எல்லாரிலும் சிறியவன்
என்னப்படுவான்;
இவைகளைக்
கைக்கொண்டு
போதிக்கிறவன்
பரலோகராஜ்யத்தில்
பெரியவன்
என்னப்படுவான்.
20. வேதபாரகர் பரிசேயர்
என்பவர்களுடைய
நீதியிலும் உங்கள் நீதி
அதிகமாயிராவிட்டால்,
பரலோகராஜ்யத்தில்
பிரவேசிக்கமாட்டீர்கள்
என்று உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
21. கொலை
செய்யாதிருப்பாயாக
என்பதும்,
கொலைசெய்கிறவன்
நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்
என்பதும்,
பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22. நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்; தன்
சகோதரனை
நியாயமில்லாமல்
கோபித்துக்கொள்ளுகிற
வன் நியாயத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்; தன்
சகோதரனை வீணனென்று
சொல்லுகிறவன்
ஆலோசனை
சங்கத்தீர்ப்புக்கு
ஏதுவாயிருப்பான்;
மூடனே என்று
சொல்லுகிறவன்
எரிநரகத்திற்கு
ஏதுவாயிருப்பான்.
23. ஆகையால், நீ
பலிபீடத்தினிடத்தில் உன்
காணிக்கையைச் செலுத்த
வந்து, உன் பேரில் உன்
சகோதரனுக்குக் குறை
உண்டென்று அங்கே
நினைவு
கூருவாயாகில்,
24. அங்கேதானே
பலிபீடத்தின் முன் உன்
காணிக்கையை
வைத்துவிட்டுப் போய்,
முன்பு உன்
சகோதரனோடே
ஒப்புரவாகி, பின்பு
வந்து உன்
காணிக்கையைச்
செலுத்து.
25. எதிராளி உன்னை
நியாயாதிபதியினிடத்த
ில் ஒப்புக்கொடாமலும்,
நியாயாதிபதி உன்னைச்
சேவகனிடத்தில்
ஒப்புக்கொடாமலும், நீ
சிறைச்சாலையில்
வைக்கப்படாமலும்
இருக்கும்படியாக, நீ உன்
எதிராளியோடு
வழியில்
இருக்கும்போதே
சீக்கிரமாய் அவனுடனே
நல்மனம் பொருந்து.
26. பொருந்தாவிட்டால், நீ
ஒரு காசும்
குறைவின்றிக்
கொடுத்துத்
தீர்க்குமட்டும்
அவ்விடத்திலிருந்து
புறப்படமாட்டாய் என்று,
மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன்.
27. விபசாரஞ்
செய்யாதிருப்பாயாக
என்பது பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28. நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன் ஒரு
ஸ்திரீயை இச்சையோடு
பார்க்கிற எவனும் தன்
இருதயத்தில் அவளோடே
விபசாரஞ்செய்தாயிற்று.
29. உன் வலது கண் உனக்கு
இடறலுண்டாக்கினால்,
அதைப் பிடுங்கி
எறிந்து போடு; உன் சரீரம்
முழுவதும் நரகத்தில்
தள்ளப்படுவதைப்பார்க்கில
ும், உன் அவயவங்களில்
ஒன்று கெட்டுப்போவது
உனக்கு நலமாயிருக்கும்.
30. உன் வலது கை உனக்கு
இடறலுண்டாக்கினால்,
அதைத் தறித்து எறிந்து
போடு; உன் சரீரம்
முழுவதும் நரகத்தில்
தள்ளப்படுவதைப்பார்க்கில
ும், உன் அவயவங்களில்
ஒன்று கெட்டுப்போவது
உனக்கு நலமாயிருக்கும்.
31. தன் மனைவியைத்
தள்ளிவிடுகிற எவனும்
தள்ளுதற்சீட்டை அவளுக்கு
கொடுக்கக்கடவன் என்று
உரைக்கப்பட்டது.
32. நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
வேசித்தன
முகாந்தரத்தினாலொழிய
தன் மனைவியைத்
தள்ளிவிடுகிறவன்,
அவளை
விபசாரஞ்செய்யப்பண்ணுக
ிறவனாயிருப்பான்;
அப்படித்
தள்ளிவிடப்பட்டவளை
விவாகம்
பண்ணுகிறவனும்
விபசாரஞ்செய்கிறவனாய
ிருப்பான்.
33. அன்றியும்,
பொய்யாணையிடாமல்
உன் ஆணைகளைக் கர்த்தர்
முன்னிலையாய்ச்
செலுத்துவாயாக என்று
பூர்வத்தாருக்கு
உரைக்கப்பட்டதென்று
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
34. நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்
பரிச்சேதம்
சத்தியம்பண்ணவேண்டாம்;
வானத்தின் பேரில்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அது தேவனுடைய
சிங்காசனம்.
35. பூமியின் பேரிலும்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அது தேவனுடைய
பாதபடி; எருசலேமின்
பேரிலும்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அது மகாராஜாவின்
நகரம்.
36. உன் சிரசின் பேரிலும்
சத்தியம்பண்ணவேண்டாம்,
அதின் ஒரு
மயிரையாவது
வெண்மையாக்கவும்
கறுப்பாக்கவும் உன்னால்
கூடாதே.
37. உள்ளதை உள்ளதென்றும்,
இல்லதை இல்லதென்றும்
சொல்லுங்கள்; இதற்கு
மிஞ்சினது தீமையினால்
உண்டாயிருக்கும்.
38. கண்ணுக்குக் கண்,
பல்லுக்கு பல் என்று
உரைக்கப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39. நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
தீமையோடு எதிர்த்து
நிற்கவேண்டாம்; ஒருவன்
உன்னை வலது கன்னத்தில்
அறைந்தால், அவனுக்கு
மறு கன்னத்தையும்
திருப்பிக் கொடு.
40. உன்னோடு வழக்காடி
உன் வஸ்திரத்தை
எடுத்துக்கொள்ளவேண்டு
மென்றிருக்கிறவனுக்கு
உன் அங்கியையும்
விட்டுவிடு.
41. ஒருவன் உன்னை ஒரு
மைல் தூரம் வரப் பலவந்தம்
பண்ணினால், அவனோடு
இரண்டு மைல் தூரம் போ.
42. உன்னிடத்தில்
கேட்கிறவனுக்குக்
கொடு, உன்னிடத்தில் கடன்
வாங்க
விரும்புகிறவனுக்கு
முகங்கோணாதே.
43. உனக்கடுத்தவனைச்
சிநேகித்து, உன்
சத்துருவைப்
பகைப்பாயாக என்று
சொல்லப்பட்டதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன், உங்கள்
சத்துருக்களைச்
சிநேகியுங்கள்; உங்களைச்
சபிக்கிறவர்களை
ஆசீர்வதியுங்கள்; உங்களைப்
பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்யுங்கள்;
உங்களை
நிந்திக்கிறவர்களுக்காகவ
ும் உங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களு
க்காகவும் ஜெபம்
பண்ணுங்கள்.
45. இப்படிச் செய்வதினால்
நீங்கள்
பரலோகத்திலிருக்கிற
உங்கள் பரம பிதாவுக்கு
புத்திரராயிருப்பீர்கள்;
அவர் தீயோர் மேலும்
நல்லோர் மேலும் தமது
சூரியனை
உதிக்கப்பண்ணி,
நீதியுள்ளவர்கள் மேலும்
அநீதியுள்ளவர்கள் மேலும்
மழையைப்
பெய்யப்பண்ணுகிறார்.
46. உங்களைச்
சிநேகிக்கிறவர்களையே
நீங்கள்
சிநேகிப்பீர்களானால்,
உங்களுக்குப் பலன் என்ன?
ஆயக்காரரும் அப்படியே
செய்கிறார்கள் அல்லவா?
47. உங்கள்
சகோதரரைமாத்திரம்
வாழ்த்துவீர்களானால்,
நீங்கள் விசேஷித்துச்
செய்கிறது என்ன?
ஆயக்காரரும்
அப்படிச்செய்கிறார்களல்லவ
ா?
48. ஆகையால்,
பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதா பூரண
சற்குணராயிருக்கிறதுப
ோல, நீங்களும் பூரண
சற்குணராயிருக்கக்கடவீர்க
ள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக